Skip to main content

இந்த வார சிறப்பு : பாடகர் உன்னிகிருஷ்ணன்

இந்த வாரத்தின் சிறப்பாக எனக்கு மிகவும் பிடித்த ஒரு பாடகரது பிறந்த தினம் அண்மையில் வந்தது . அதுதான் ஜேசுதாசுக்கு அடுத்த படியாக எண்ணும் போது மனதில் தோன்றும் ஒருவர் உன்னி கிருஷ்ணனாக தான் இருக்க முடியும் .




தனது அருமையான குரல்களில் உன்னி கிருஷ்ணன் தந்த பாடல்கள் இப்போது கேட்டாலும் இனிக்கும் . அதிலும் "தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு " பாடலில் உண்மையாக தென்றல் போன்றே அவரது குரல்  இருக்கும் . 


"என்னவளே அடி என்னவளே" பாடல் முதலிலேயே அவரை  உச்சத்துக்கு கொண்டுசென்றது . ஆனால் அவர் பாடிய "உயிரும் நீயே உடலும் நீயே  உறவும் நீயே தாயே  " பாடல் என்னை மிகவும் கவர்ந்தது .  அவர் பாடிய இந்த இரு பாடல்களும் தேசிய விருதையும் சிறந்த ஆண் பின்னணி பாடகருக்கான விருதை பெற்று தந்தது . 


9 ஆம் திகதி ஜூலை மாதம்  1966 ஆம் ஆண்டு கே ராதாகிருஷ்ணனுக்கும்  டாக்டர் ஹரிணி ராதாகிருஷ்ணனுக்கும் மகனாக பிறந்தார் .  Kesari Kuteeram எனும் சென்னையில் உள்ள பிரசித்தி பெற்ற மருத்துவமனை அவரது குடும்பத்திற்குரியது . அவரது தாத்தா கேசரியிடம்  வந்து சிறப்பான இசை திறமையை காட்டுபவர்கள் திமைகளை காட்டி வெற்றி  பெற்றனர் . இவ்வாறான பின்னணியில் வந்தவர் இசைத்துறையை தேர்ந்தெடுப்பதில் ஆச்சரியம் இல்லை .   


ஆனால் உன்னி கிருஷ்ணனின்  முதல் விருப்பம் க்ரிக்கேட்டாகவே  இருந்தது . தேசிய அணியில்  இடம் பிடிப்பதே நோக்காக இருந்தது . ஆனால் அவருக்கு இசை மீது இருந்த ஆர்வத்தை பார்த்து அவரது தாயார் கர்நாடக இசையின் கீழ் கடக்க விட்டார் . அவர் அசன்(Asan )  மேமரியல் கல்லூரியில் படித்து கொண்டிருந்த போது கிரிக்கெட்டையும் இசையையும் சமனாகக் கொண்டு  சென்றார் .


தமிழ்நாடு சீனியர் டிவிஷன் அணியில் துடுப்பாட்ட வீரராகவும் கீபெராகவும் இருந்தார் . 1990 களிலிருந்து கச்சேரி வாய்ப்புகள் வந்தது . 1994 இன் பின்னர் அவரை ரஹ்மான் இனம் கண்டு கொண்டு வந்தார் . பின்னர் படிப்படியாக கிரிக்கேட்டை கை விட்டு  முழுநேர இசைக்கலைஞராக ஆகினார் உன்னி கிருஷ்ணன் . 


பின்னர் ப்ரியா என்பவரை மணந்தார் உன்னி கிருஷ்ணன் . தற்ப்போது இரண்டு பிள்ளைகளும் உண்டு. 


இசை பேரொளி , நாதாபூஷணன் ,கலை மாமணி ,யுவ கலா பாரதி விருதுகளும் இரு தேசிய விருதுகளும் கிடைத்துள்ளன .



மேலும் அவர் மீது மேலும் ஆர்வம் வர காரணம் அவரது தமிழ் உச்சரிப்புகள் . மலையாளிகள் யாழப்பாண தமிழர்கள் போல உச்சரிப்புகளில் திருத்தம் இருக்கும் . அதனை உன்னி கிருஷ்ணனில் காண முடியும் . அவரும் ஒரு மலையாளி  .

பல கர்நாடக சங்கீத இசைகளை பாடிய உன்னிக்ரிஷ்ணன் தமிழ் , தெலுங்கு  என மொத்தம் 600 க்கும் மேல்பட்ட பாடல்கள்  பாடியுள்ளார் .  பாடல்  தொகுப்பு  
அந்த குரலில் இன்னும் எதோ ஒரு  கவர்ச்சி... ஜேசுதாஸ் போல சிறப்பான ஆற்றல் படைத்த ஒரே  பாடகர் உன்னி கிருஷ்ணன் எனலாம் .

தமிழ் இசை பெற்ற வரம் உன்னி கிருஷ்ணனுக்கு பிந்திய பிறந்த நாள் நல் வாழ்த்துகள் .
உன்னி கிருஷ்ணன் தீவிர ரசிகனாக ....

Comments

Riyas said…
மிக அருமையான குரல்வளம் கொண்ட பாடகர் உன்னிகிருஷ்ணன்.

நல்ல பதிவு,,

Popular posts from this blog

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிட...

கங்குபாய் கத்தியவாடி

நாம் எதையெல்லாம் விரும்பிச் செய்கிறோமோ அதன் மீது மரியாதையும் ஒருவிதமான பிடிப்பும் நமக்கு இருக்கவேண்டும். அதில் காமம் மட்டும் விதிவிலக்கல்ல. காமம் தந்து , உடல் தந்து, தானும் மகிழ்ந்து இன்னோர் உயிரை மகிழ்விப்பவரும், காதல், அன்பு, உள்ளமெலாம் உருக்கி உடலாய்த் தந்து மகிழ்விப்பவரும், இரண்டையும் ஒன்றாய்த் தந்து மகிழ்விப்பவரும் மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் ஆணாய் இருந்தாலும், பெண்ணாயிருந்தாலும், மாற்றுப் பாலினத்தவராக இருந்தாலும் மதிக்கப்படவேண்டியவர்கள். இந்த மதிப்பானது, உள்ளப் புரிதலினாலும், மனிதத்தினாலும், தகுந்த புத்தியினாலும், பெற்றுக்கொண்ட விஸ்தாரமான அறிவினாலும், நடத்தையினாலும், வார்த்தையினாலும் உள்ளுக்குள்ளே நிகழும் மாற்றத்தினாலும் எழவேண்டும். கங்குபாய் என்கிற இந்தப் படம், விலைமாதர்களின் வாழ்வியலைப் பேசுகிறது. விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு பெறுமதிக்கு ஏற்றபடி ஒவ்வொரு தரத்தில் இருக்கிறார்கள். நன்கு படித்து வேலைபார்க்கும் விலைமாதர்களும் இருக்கிறார்கள். பகுதியாய் விலைமாதராக இருப்பவர்களும் இருக்கிறார்கள். இப்போதும் அப்போதும், விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருந்தா...

அடியே அடியே என்னை எங்க நீ கூட்டி போற!

கிறிஸ்தவ தேவாலயங்களிலும் அவை சார்ந்த சூழலிலும், கிஸ்தவப் பாடல்களும் இசையும் இசைக்கப்படுவதைச் சிலர் கேட்டிருப்பீர்கள். அப்படிப் இசைக்கப்படும் இசையை Gospel music எனலாம். Gospel என்றால் Good message. பைபிளிலிருந்து கதைகளையும், கதாப்பாத்திரங்களையும் கடவுளின் செய்திகள் என்று நினைத்துச் சொல்லப்படுகிற விடயங்களையும் எளிமையான இசையோடு இசைத்துப் பாடப்படுகிற பாடல்கள். வரிகளுக்கு முக்கியத்துவம் உள்ள பாடல்கள். பெரும்பாலும் நம்பிக்கையை விதைக்கிற செய்திகளைத் தாங்கிவரும் இந்தப் பாடல்களை மனதில் நிறையத் துன்பத்தோடு சென்று பாடுகிறவர்களுக்கு தேவாலயத்தில் ஒரு நிம்மதி கிடைக்கிறது. இந்த இசை துன்பத்தை வாங்கி நம்பிக்கையைத் தருகிறது. பலரும் கடவுள்தான் நம்பிக்கை தந்ததாக நினைத்துக்கொள்வார்கள். பிரச்சாரகர் அழைப்பு விடுக்க மற்றவர்கள் பதிலுரைத்து ஆமோதிப்பார்கள். ஒரு chorus இல் பலரும் பதிலுரைப்பார்கள். இதுதான் இசையின் வார்த்தைகளின் பலம். குறிப்பிட்ட மதங்களிடையே இசை தோன்றினாலும், அவற்றைச் சார்ந்திருந்தாலும், அது அந்தந்த மனிதர்களின் சமூகத்தின் அகவுணர்ச்சி மற்றும் அழகுணர்ச்சியின் வெளிப்பாடே என்பதனை நாம் புரிந்துகொள்ள...