Skip to main content

இந்த வார சிறப்பு : பாடகர் உன்னிகிருஷ்ணன்

இந்த வாரத்தின் சிறப்பாக எனக்கு மிகவும் பிடித்த ஒரு பாடகரது பிறந்த தினம் அண்மையில் வந்தது . அதுதான் ஜேசுதாசுக்கு அடுத்த படியாக எண்ணும் போது மனதில் தோன்றும் ஒருவர் உன்னி கிருஷ்ணனாக தான் இருக்க முடியும் .




தனது அருமையான குரல்களில் உன்னி கிருஷ்ணன் தந்த பாடல்கள் இப்போது கேட்டாலும் இனிக்கும் . அதிலும் "தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு " பாடலில் உண்மையாக தென்றல் போன்றே அவரது குரல்  இருக்கும் . 


"என்னவளே அடி என்னவளே" பாடல் முதலிலேயே அவரை  உச்சத்துக்கு கொண்டுசென்றது . ஆனால் அவர் பாடிய "உயிரும் நீயே உடலும் நீயே  உறவும் நீயே தாயே  " பாடல் என்னை மிகவும் கவர்ந்தது .  அவர் பாடிய இந்த இரு பாடல்களும் தேசிய விருதையும் சிறந்த ஆண் பின்னணி பாடகருக்கான விருதை பெற்று தந்தது . 


9 ஆம் திகதி ஜூலை மாதம்  1966 ஆம் ஆண்டு கே ராதாகிருஷ்ணனுக்கும்  டாக்டர் ஹரிணி ராதாகிருஷ்ணனுக்கும் மகனாக பிறந்தார் .  Kesari Kuteeram எனும் சென்னையில் உள்ள பிரசித்தி பெற்ற மருத்துவமனை அவரது குடும்பத்திற்குரியது . அவரது தாத்தா கேசரியிடம்  வந்து சிறப்பான இசை திறமையை காட்டுபவர்கள் திமைகளை காட்டி வெற்றி  பெற்றனர் . இவ்வாறான பின்னணியில் வந்தவர் இசைத்துறையை தேர்ந்தெடுப்பதில் ஆச்சரியம் இல்லை .   


ஆனால் உன்னி கிருஷ்ணனின்  முதல் விருப்பம் க்ரிக்கேட்டாகவே  இருந்தது . தேசிய அணியில்  இடம் பிடிப்பதே நோக்காக இருந்தது . ஆனால் அவருக்கு இசை மீது இருந்த ஆர்வத்தை பார்த்து அவரது தாயார் கர்நாடக இசையின் கீழ் கடக்க விட்டார் . அவர் அசன்(Asan )  மேமரியல் கல்லூரியில் படித்து கொண்டிருந்த போது கிரிக்கெட்டையும் இசையையும் சமனாகக் கொண்டு  சென்றார் .


தமிழ்நாடு சீனியர் டிவிஷன் அணியில் துடுப்பாட்ட வீரராகவும் கீபெராகவும் இருந்தார் . 1990 களிலிருந்து கச்சேரி வாய்ப்புகள் வந்தது . 1994 இன் பின்னர் அவரை ரஹ்மான் இனம் கண்டு கொண்டு வந்தார் . பின்னர் படிப்படியாக கிரிக்கேட்டை கை விட்டு  முழுநேர இசைக்கலைஞராக ஆகினார் உன்னி கிருஷ்ணன் . 


பின்னர் ப்ரியா என்பவரை மணந்தார் உன்னி கிருஷ்ணன் . தற்ப்போது இரண்டு பிள்ளைகளும் உண்டு. 


இசை பேரொளி , நாதாபூஷணன் ,கலை மாமணி ,யுவ கலா பாரதி விருதுகளும் இரு தேசிய விருதுகளும் கிடைத்துள்ளன .



மேலும் அவர் மீது மேலும் ஆர்வம் வர காரணம் அவரது தமிழ் உச்சரிப்புகள் . மலையாளிகள் யாழப்பாண தமிழர்கள் போல உச்சரிப்புகளில் திருத்தம் இருக்கும் . அதனை உன்னி கிருஷ்ணனில் காண முடியும் . அவரும் ஒரு மலையாளி  .

பல கர்நாடக சங்கீத இசைகளை பாடிய உன்னிக்ரிஷ்ணன் தமிழ் , தெலுங்கு  என மொத்தம் 600 க்கும் மேல்பட்ட பாடல்கள்  பாடியுள்ளார் .  பாடல்  தொகுப்பு  
அந்த குரலில் இன்னும் எதோ ஒரு  கவர்ச்சி... ஜேசுதாஸ் போல சிறப்பான ஆற்றல் படைத்த ஒரே  பாடகர் உன்னி கிருஷ்ணன் எனலாம் .

தமிழ் இசை பெற்ற வரம் உன்னி கிருஷ்ணனுக்கு பிந்திய பிறந்த நாள் நல் வாழ்த்துகள் .
உன்னி கிருஷ்ணன் தீவிர ரசிகனாக ....

Comments

Riyas said…
மிக அருமையான குரல்வளம் கொண்ட பாடகர் உன்னிகிருஷ்ணன்.

நல்ல பதிவு,,

Popular posts from this blog

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு க

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிடத்தில் சரியாக கொண்டு போய் சேர்க்கின்றனர் .  சிறகுகள் அமைப்பின்

கண்ணாளனே...!

சங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன். அகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது.  மலையும் மலை சார்ந்த இடத்திலும்  நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது.  இந்தப் பாடல் காதல் வயப்பட்ட  பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச்  சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.  "நெருநல் எல்லை யேனல் தோன்றித் திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள இ