Skip to main content

வைரம் (தமிழ்) முத்து பிறந்த நாள் - வைரமுத்து

வைரமுத்து தமிழுக்கு கிடைத்த முத்து என்றே சொல்லலாம் . வைரமுத்து வந்த பின்பு  தான் கவிதை என்ற முறை மாறி பாடலுக்கேற்றவாறு வரிகள் எழுதும் முறைமை வந்தது . இன்று அவரின் பிறந்த நாள் ... ஜூலை  13

பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் .......


இளையராஜாவின் மிக மிக அருமையான இசை அமைப்பில் உருவானா சுஜாதா அவர்களே பீதொவனை மிஞ்சும் இசை என பாராட்டிய  பாடல் இது "ஒரு பொன் மாலை பொழுதே" அவரது முதல் பாடல் . இந்த முதல் பாடலே அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது .

அதிலும் இரவை பற்றிய இயற்க்கையுடன் கூடிய வர்ணனை எந்த காலத்தை சேர்ந்தவர்க்கும் பிடிக்கும் . அது போன்ற ஒரு உச்ச  கற்ப்பனை  பிரமிக்க வைக்கும் .

" வான மகள்  நானுகிறாள் "
வேறு உடை பூணுகிறாள் " 


என்ற  இரவின்  வருகையை வர்ணிக்கும் பாடல் மிகவும் பிடிக்கும்.


"வானம் எனக்கொரு போதி மரம்,
நாளும் எனக்கது சேதி தரும்"..

போன்ற வரிகள் முதல் பாடலிலேயே அவரை தூக்கி நிறுத்தியது . பின்னர் ரஹ்மானுடன் இணைந்த போது ரஹ்மான் பாடல்கள் வெற்றிக்கு வைரமுத்து மிக துணையாக இருந்தார் .

வெண்ணிலவே வெண்ணிலவே பாடலில் மிக அருமையான வரியாக
"அட உலகை  ரசிக்க வேண்டும் நான் உன் போன்ற பெண்ணோடு "
வரஈன்னும் பிடித்தது ..

இடையில் ரஹ்மானும் வைரமுத்துவும் பிரிந்து ராவனாவில் சேர்ந்த  உடனேயே உசுரே போகுதேவில் கலக்கி விட்டனர் . பழைய வைரமுத்து ரஹ்மான் ஜோடியை உணர முடிந்தது .


காட்டு சிருக்கியிலும் பல வரிகளில் அருமை 


தண்டை அணிஞ்சவ
கொண்ட சரிஞ்சதும்
அண்டசராசரம் போச்சு
!



ஏர்கிழிச்ச தடத்துவழி
நீர் கிழிச்சு
போவது போல்
நீ கிழிச்ச கோட்டு வழி
நீளுதடி எம்பொழப்பு 



என்ன ஒரு எளிமையான வரிகள் ....எளிமையான உவமானம் ..


காதல் பாடல்களிலும் தவற விடவில்லை ...


நிலவில் பொருள்கள் எடை இழக்கும்..
நீரிலும் பொருள்கள் எடை இழக்கும்..
காதலில் கூட எடை இழக்கும்



அழகாக விஞ்ஞானத்துடன் காதலையும் கவிகளால் இணைத்திருப்பார் அது மிகவும் பிடிக்கும்.


காதல்சடு குடு குடு பாடலில் காதலை சரியாக இப்படி தான் வெளிப்படுத்த முடியுமென்ற கோணத்தை காட்டியவர் .... இந்த வரிகளும் மிகவும் பிடிக்கும் .


உன் உள்ளம் நான் காண என்னாயுள் போதாது
என் அன்பை நான் சொல்ல உன் காலம் போதாது
என் காதல் இணையென்ன உன் நெஞ்சு காணாது
ஆனாலும் என் முத்தம் சொல்லாமல் போகாது



பெண் வர்ணனையிலும் சளைத்தவர் அல்ல .. எத்தனை பாடல்கள் இருந்தும் பூவுக்குள் ஒளிந்திருக்கும் பாடல் வரிகள்  மிகவும் பிடிக்கும் .


பெண்பால் கொண்ட சிறுதீவு
கால்கொண்டு நடமாடும் நீதான் என் அதிசயமே



கலை மானே பாடலில் இந்த வரிகள்  மிகவும் பிடிக்கும் ...


பூஞ்சோலை அமர்ந்து சென்றாய் கொஞ்ச நேரமே
சொந்த வாசம் மறந்த பூவில் உந்தன் வாசமே



1 . பூங்காற்று திரும்புமா
2 .சின்னச்சின்ன ஆசை
3 .போறாளே பொன்னுத்தாயி
4 .முதன் முறை கிள்ளிப் பார்த்தேன்
5 .விடை கொடு எங்கள் நாடே.


போன்ற பாடல்களுக்கு மொத்தமாக 5 தேசியவிருதுகள் கிடைத்துள்ளது ...


கோபுரமே உன்னைச் சாய்த்துக் கொண்டு
உந்தன் கூந்தலில் மீன் பிடிப்பேன்
வெண்ணிலவே உன்னைத் தூங்க வைக்க
உந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன்
வருட வரும் பூங்காற்றை எல்லாம் கொஞ்சம்
வடிகட்டி அனுப்பிவைப்பேன்



உவமைகளில் இந்த வரிகளும் 


விடியல் வந்த பின்னாலும் விடியாத இரவு எது?
பூவாசம் வீசும் உந்தன் கூந்தலடி!
இவ்வுலகம் இருண்ட பின்னும் இருளாத பாகம் எது?
கதிர் வந்து பாயும் உந்தன் கண்களடி!



போன்ற வரிகள் பாடல் வகைகளில் சிறந்த உவமை நயம் கொண்டதாகவும் இருக்கும் .. 

Comments

கவிப் பேரரசனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!

Popular posts from this blog

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு க

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிடத்தில் சரியாக கொண்டு போய் சேர்க்கின்றனர் .  சிறகுகள் அமைப்பின்

கண்ணாளனே...!

சங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன். அகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது.  மலையும் மலை சார்ந்த இடத்திலும்  நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது.  இந்தப் பாடல் காதல் வயப்பட்ட  பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச்  சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.  "நெருநல் எல்லை யேனல் தோன்றித் திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள இ