Skip to main content

Posts

Showing posts from June, 2015

கண்ணதாசன்

கம்பராமாயணத்தில் வருகிற வரைக்காட்சிப்  படலத்தில் "பானல் அம் கண்கள் ஆட. பவள வாய் முறுவல் ஆட" என்று  ஒரு அழகான பாடல். சந்திர சயிலத்தில் பெண்கள் ஊஞ்சல் ஆடுகிறார்கள். அப்போது என்னவெல்லாம் அசைகிறது எனக் கம்பன் சொல்லுகிறார்.  இதைப் படிக்கும்போது கண்ணதாசன் எழுதிய "கட்டோடு குழலாட ஆட" என்கிற பாடலின் வரிகள் நினைவுக்கு வந்தது. வாசிக்கும்போதே இனிக்கிறது. இரண்டு தோழிகள் நடனமாடிகொண்டும் சுதந்திரமாகப் பாடிக்கொண்டும்  போவதுபோல அமைந்த  பாடல். அப்படிப் போகிறபோது என்னவெல்லாம் ஆடுகிறது என்று சொல்லும் பாட்டு. கண்ணதாசனின் சொற்கள்கூட கொடிபோல ஆடும். கண்ணதாசனின் இந்தப் பாடலை  எல்லோரும் மாணிக்கவாசகர் இயற்றிய  திருவெம்பாவைப் பாடலுடன் ஒப்பிடுவார்கள். ஒருசில வரிகளை மட்டுமே ஒப்பிடமுடியும். பெண்கள் நீரினைக்  குடைந்தாடும்பொழுது என்னவெல்லாம் அசைகிறது எனச் சொல்லும் திருவெண்பாவைப் பாடல். //காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக் கோதை குழலாட வண்டின் குழாமாட// இதனைப் பிரித்து எழுதினால் இப்படி அமையும். காது ஆர் குழை ஆட பைம்பூண் கலன் ஆட கோதை குழல் ஆட வண்டின் குழாம் ஆட பெண்ணானவள்  நீரி

கண்ணுக்கு அணி! - சிறுபேச்சு 5

கோலம் காண் படலத்தில் சீதையை அலங்கரிக்கிற காட்சில ஒரு குட்டி சினிமாட்டோகிராபியே நடத்தியிருக்கிறார் கம்பன். மெதுவாக நகர்கிற  காட்சிகள்  வைத்த  மாதிரி.  'அமிழ் இமைத் துணைகள். கண்ணுக்கு அணி என அமைக்குமாபோல் ' கண்ணுக்கு அஞ்சனம் தீட்டுதல் எல்லாம் அழகல்ல. கண்ணைப் பாதி மறைக்கிற மாதிரி அமைந்திருக்கிற இமைகள்தான் கண்ணுக்கு அழகு. அதுமாதிரித்தான் சீதைக்கு நகைகள் அணிவித்து அலங்கரிப்பது. நகைகள் சீதையின் அழகினை மறைப்பது  இன்னும் அழகு.  அழகுக்கு அழகு சேர்ப்பது மாதிரி இருக்கிறது. பிறகு, braided messy bun வடிவில் சிகை அலங்காரம். சுட்டி, காதணிகள், வளையல்கள்  அணிதல், இடையினில் ஓவியம் தீட்டுதல் பற்றிச் சொல்லுகிறார். சீதைக்கு அணிவிக்கப்பட்ட முத்துக்களால் ஆன இடையணியின் ஒளி, பட்டின் நிறம், சீதையின் செந்நிற மேனியின் நிறம் எல்லாம் சேர்ந்து புறப்பட்ட கலவையான வண்ணமும் ஒளியும் அலங்கரிப்பவர்கள் கண்களைக் கூசச் செய்ததாம் என்கிறார். 

நியூட்ரினோ - The Hindu கட்டுரை

தேனி மாவட்டத்தில் நடக்கவிருக்கிற நியூட்ரினோ ஆய்வு பற்றி அப்துல்கலாம் ஹிந்துவில் எழுதியிருக்கிறார். இந்தப் பிரபஞ்சம் 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முதல் எப்படி உருவானது என்கிறதை அறிய நியூட்ரினோ உதவும். Big Bang நிகழ்ந்த கணத்திலிருந்து தோன்றிய நியூட்ரினோக்கள் இன்றும் பிரபஞ்சத்தில் விரிகின்றன என்கிறார்கள். நியூட்ரினோக்கள் மூலம் ஆதி மூலத்தைக் கண்டுபிடித்தால், அந்தக் கணம்வரை கடவுளுக்கு வேலை இல்லாமல் போய்விடும். இந்தத் தியரிகள் புரியுதோ இல்லையோ, 'அந்த big bang நிகழ்த்தினது யாரு'ன்னு திரும்ப ஒரு கேள்வி கேட்டுவிட்டு புத்திசாலி மா திரி சிரிப்பார்கள்! அப்பிடியானவங்ககிட்ட, 'இன்னைக்கு மதியச் சாப்பாடு நல்லாவே இல்லை. கேவலமான கம்பினேஷன்' னு சொல்லீட்டு எஸ்கேப் ஆகவேண்டியதுதான். அறிய விரும்புபவர்கள் நிறையப் பேர் இருப்பார்கள். அவர்களுக்காக தமிழில் நிறைய அறிவியல் விஷயங்கள் எழுதப்படவேண்டும்.  தமிழ்ச் சூழலில் கெமிஸ்ட்ரி, பிஸிக்ஸில் அதிகூடிய புள்ளிகள் எடுத்து பெருமைப்பட்டுக்கொண்டவர்கள் யாரேனும் இருந்தால், இவற்றை எளிமையாக விளக்கி டீடெயிலான கட்டுரைகள் எழுதலாம். ரிச்சர்ட் பிரன்ஸனுக்குக் கூட நேர

உரையாடல்கள் - Concise dialogues

சுஜாதாவின் 'இரண்டாவது காதல் கதை' என்கிற நாவலைப் படித்துக்கொண்டிருக்கிறேன். சினிமாவிலும், நிஜத்திலும் நல்ல உரையாடல்கள் என்பது அரிது. மணிரத்னம் படங்களில் காதலர்கள்கூட புத்திசாலித்தனமாக பேசிக்கொள்வார்கள். சுருக்கமாகப் பேசினால் 'என்ன மணிரத்னம் படம் மாதிரி பேசுற. ஒன்னுமே புரியல' ம்பாங்க. இப்போது ஒன்னுமே புரியல என்பது 'முயற்சிப்பது' என்பதைத் தாண்டி கேலியாக மாறிவிட்டது.   'Concise dialogues' னு சொல்லலாம். இதை எழுதுறதுல மணிரத்னமும் சுஜாதாவும் வல்லவர்கள். இலத்தீன் வார்த்தையான 'concisus' இலிருந்து உருவானது. ரியாலிட்டிக்கு கொஞ்சம் ஒத்துவராதது போலத் தெரிந்தாலும், அப்படிப் பேசுபவர்கள்  இருக்கிறார்கள். வார்த்தை விரயமின்றி ஒருசில வார்த்தைகளிலேயே நிறையத் தகவல்களை உள்ளடக்கி சொல்லவருகிற விஷயத்தைச் சொல்லுவது முக்கியம். தட்டையாக இல்லாமல் அடுத்தவருக்குக் கொஞ்சம் மூளையும் மேலதிகமாக வேலை செய்யும். ஒரு புதிர் மாதிரியும் இருக்கலாம். அதை உடைப்பது சுவாரசியம். முரண்பாட்டை உரையாடல்களில் நேர்த்தியாக வெளிப்படுத்தும்போது ஒரு வாசகரைக் கொட்டாவி விடாமல் வைத்திருக்கலாம்.

முடிவுகளைத் திருப்திப்படுத்தல் - சிறுபேச்சு 4

ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட ஏராளமான முடிவுகளை எடுக்கிறோம். இன்றைக்கு என்ன கலர் ஆடை போடுவது, என்ன உணவை எடுத்துச்செல்வது, எந்தப் பக்கத்துக்கு காலுறையினை முதலில் போடுவது என ஏராளமான முடிவுகளை நம் மூளை எடுக்கும். சில முடிவுகள் தன்னிச்சையாக நிகழ்பவை. ஒரு பொருளை வாங்கும்போது மிகச்சிறந்தது எதுவென்று தேடுவதில்லை. காரணம், நம் முன்னே ஏராளாமான தெரிவுகள் இப்போது வந்திருக்கிறது. ஒரு நாளைக்கு குறிப்பிட்டளவு முடிவுகளைத்தான் நம் மூளை எடுக்கிறது என்பது நியூரோலோஜிஸ்ட்களின் கருத்து. அதிலும் குறிப்பாக,  ஒரு விடயத்தை அதிமுக்கியமானது என தீர்மானிப்பதில்லையாம்.  1978ல் சைமன்(Herbert A.Simon) எனும் பொருளாதார வல்லுனருக்கு நோபல் பரிசு கிடைத்தது. நிறுவனங்களுக்குள் எடுக்கப்படும் தீர்மானங்களையும், அவை எடுக்கப்படும் முறைமையினையும் ஆராய்ந்தவர்.  நாம் எல்லோரும் அவர் அறிமுகப்படுத்திய 'திருப்திப்படுதல்' என்கிற கருத்தை பின்பற்றுகிறவர்கள். ஒரு தீர்மானம் எடுக்கிறபோது நாம் எல்லோரும் பின்பற்றுகிற சிந்தனைச் செயற்பாட்டுக்கு அவர் ஒரு சுருக்கமான சொல்லைத் தேடினார். ஒரு மிகச் சிறந்த தெரிவினை எடுக்கமுடியாது போக

இயோபின்டே புஸ்தகம்.

1975ல் இந்திரா காந்தியின் அரசினால், இந்தியா முழுவதும் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அந்தக் காலத்திலிருந்து பின்நோக்கி நகருகிற கதைக்களம். கதைசொல்லியாக ஒரு கம்யூனிஸ்ட் இருக்கிறார். அரச ஆணையின்படி தான் எந்நேரமும் கைதுசெய்யப்படலாம் என்பதை அறிந்து, தான் பார்த்தவற்றை ஒரு புத்தகமாக எழுத ஆரம்பிக்கிறார். நீலகிரி, மூனாரில் ஆங்கிலேயர்கள் தேயிலைப் பயிர்ச்செய்கையை ஆரம்பித்த காலம். 1900ம் ஆண்டளவில் ஜாக்ஸன் என்கிற ஆங்கிலேய அதிகாரிக்குச் சொந்தமான தேயிலைத் தோ ட்டத்திலிருந்து கதை ஆரம்பிக்கிறது. அடிமைகளை அடக்கியாள இயோப் என்கிற உள்நாட்டு இளைஞனை ஜாக்ஸன் நியமிக்கிறார். இயோபிற்கு திருமணம் முதலான ஆதார காரியங்களைச் செய்துவைக்கிறார். ஜாக்ஸன் இறந்தபின்னர் இயோப்பின் கைக்கு அதிகாரமும் உரிமையையும் மாறுகிறது. பிரிடிஷ்காரர்கள் போலவே இயோபின் ஆட்சியும் அமைகிறது. இயோப்பிற்கு மூன்று குழந்தைகள் பிறக்கிறது. முதல் இருவரும் தந்தையைப் போலவே வன்முறை செய்கிறவர்கள். மூன்றாவது பிள்ளையான யோஷி(Farhadh Fazil) தனது தாயைப் போல அமைதியும் அன்பும் கொண்டவன். சில காலங்களில் நோயின் காரணமாக தாய் இறந்துவிடுகிறாள். தன்னுட

மனதோடு பேசலாம் - நிகழ்ச்சி

கட்டைப் பஞ்சாயத்து எல்லாம் ஆலமரம், செம்புன்னு காலம்  போய், சோபா செட்டு கண்ணாடி கிளாஸ்னு ட்ரெண்டு மாறிப்போச்சு. அதனாலேயே கொஞ்சக் காலமாக மற்றவர்கள் பிரச்னையை தீர்க்கிறேன்  என்று ஆரம்பிக்கப்படும் நிகழ்ச்சிகள் மீது எதிர்மறையான கருத்து வைத்திருந்தேன். எந்த  டிவி சானலுக்கு மாற்றினாலும் 'இதோ அறிவுரை சொல்லுகிறேன்' என்று பலபேர் காத்திருக்கிறார்கள். இன்ஸ்டன்ட் சாமியார்கள் மாதிரி, நிபுணத்துவம் அற்றவர்கள் எல்லோரும் மற்றவர்களின் வாழ்வில் தலையிட்டு  ஏதேதோ குழப்பம் செய்து பணம் பார்க்கிறார்கள். தங்கள் டிஆர்பி ரேட்டினை  உயர்த்திக்கொள்ளவதற்கு பிரச்சனைகளை அணுகுகிறார்கள்.  எல்லா நிகழ்ச்சிகளுக்கும் அதே நோக்கம் இருந்தாலும் சில நிகழ்ச்சிகளில் கொஞ்சமேனும் சமூகப் பொறுப்புணர்வு இருக்கும் என்றே நம்புகிறேன். தந்தி டிவியில் ஒளிபரப்பாகும் 'மனதோடு பேசலாம்' எனும் நிகழ்ச்சியினைத் தற்செயலாகக் காணக்கிடைத்தது. நான் பார்த்தவரையில் நிபுணத்துவம் பெற்ற உளவியல் ஆலோசகர்களை வைத்து நிகழ்ச்சி நடத்துகிறார்கள். எந்தக் கேள்வி கேட்டாலும் பொதுவான ஒரு பதிலைக் கொடுத்துவிட்டு, அருகிலிருக்கும் உளவியல் நிபுணரைப் பாருங