இறைவி திரைப்படம் பற்றிய எனது முன்னைய பார்வை யை மணிரத்னத்தின் திரைப்படத்தில் வருகிற பெண் கதாப்பாத்திரங்களோடு ஒப்பிட்டு எழுதியிருந்தேன். மணிரத்னத்தின் படங்களில் வரும் பெண்கள் இயல்பாகவே பெறுமதியானவர்கள் என்றும் எழுதியிருந்தேன். அதற்கு எதிர்வினையாக ஒருசில கருத்துகள் வந்தது. 'இறைவி' பெண்களை முற்போக்கானவர்களாகக் காட்டும் திரைப்படமல்ல, மாறாக ஆண்களை பிற்போக்கானவர்கள் என்றும் ஆணாதிக்கச் சிந்தனை உள்ளவர்கள் என்றும் காட்டும் திரைப்படம் என்று சொல்லியிருந்தார்கள். அவர்களின் நியாயப்படுத்தலில் ஓரளவு உண்மை இருக்கிறது. ஆனால் இந்தப் படம் பெண்களின் பெருமை பேசுகிறேன் என்று ஆண்களை நியாயப்படுத்தி இருக்கிறதென்பது சில விமர்சகர்கள் கருத்து. இதுவரை, விஜய் சேதுபதியின் போக்கையே மாற்றிவிடும் மலர்விழி கதாப்பாத்திரம் சொல்லவரும் காமம்-காதல் முரண்பாட்டை யாரும் சரியென்று சொல்லவில்லை. திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை என்றால் நாங்கள் சேர்ந்து வாழலாம் என்றாவது கேட்டிருக்கலாம். இறைவி விமர்சனத்தில் எழுத்தாளர் சாரு நிவேதிதா கேட்டதுபோல எந்த நூற்றாண்டில் வாழ்கிறோம்! கார்த்திக் சுப்பு...