Skip to main content

Posts

Showing posts from August, 2018

அகலிகைகளின் ஆசை

இராமாயணத்தில் வருகிற 'அகலிகை' என்கிற பேரழகி,  கௌதம முனிவனின்  மனைவி. கௌதமன் வெளியிலிருக்கும் நேரமாகப் பார்த்து, அவள்மீது காதல்கொண்ட இந்திரனானவன், கௌதம முனிவனின் வடிவில் வந்து அவளைப் புணர்ந்து இன்பம் களிக்கிறான். அவள், அது கௌதமன் அல்ல என்று தெரிந்த பின்பும், காமம் எனப்படும் உயர் இன்பத்தில் கூடித் திளைத்திருப்பதை நிறுத்தவில்லை. இலாவகமாக இந்திரன் கைகளில் போதையேறிக் கிடந்தாள்.  புக்கு அவளோடும், காமப்  புது மண மதுவின் தேறல்  ஒக்க உண்டு இருத்தலோடும்,  உணர்ந்தனள்;   உணர்ந்த பின்னும் ‘தக்கது அன்று’ என்ன ஓராள் - கம்பன்  இந்நேரம் பார்த்து, முக்கண்ணான் என்று அழைக்கப்படும் கௌதமன் வீடு திரும்புகிறான். என்ன நடந்தது என்று தன் கண்களால் பார்க்கிறான். அல்லது அவள் கூடியிருப்பதைப் பார்க்கிறான். அவள் இதை  திட்டமிடாமல் செய்தாலும், இதற்கு உடந்தையாக இருந்த அகலிகையின்  இந்தச் செயலுக்காக அவளைக் கல்லாகும்படி சபிக்கிறான். பின்னர், இராமனின் பாதம் படவே இவள் சாபவிமோசனம் அடைகிறாள். இராமரும் விசுவாமித்திரரும் அவளை மீண்டும் சேர்த்துக்கொள்ளும்படி கௌதமனிடம் கேட்டுக்கொள்கிறார்கள். மீண்டும் அந்

ரஹ்மான் - தபேலா

'ரிதம்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'அன்பே இது நிஜம் தானா' பாடலில், வயலின் இசையை நன்றாக எழுதி நிகழ்த்தியிருப்பார்கள். பாடலின் இரண்டாவது இடையிசையில் இது வரும்பொழுது,  மிக அழகான காதல் உணர்வுக்குள் பிரிவும் சேர்ந்தது போலிருக்கும். வயலின் முடிந்த கையோடு, முதலில் ஒரு மெல்லிய கீற்றுப்போல ஒரு புலர்தல் நிகழும். பின்னர் சாதனா சர்க்கத்தின் குரல் ஆரம்பிக்கும்போது, ஒரு பரிபூரண புலர்தல் நிகழும். அதோடு ஒட்டியபடி, தளும்பும் மனக் குளத்தில் ஏதோ விழுந்ததுபோல, தபேலா இசையால் நிலவினைத் ததும்பச் செய்யும் இந்த இசை . சரியாக, "அழைக்கும்போது உதிக்க முடிந்தால் அதற்குப் பெயரும் நிலவில்லை' என்கிற வரிகளோடு இழைந்து வருவது இந்தத் தபேலாவின் ததும்பலை இன்னும் அழகாக்குகிறது.  

அருத்தி

முற்றத்தில் இறங்கிய குழந்தையின், முறையற்ற முதல் நடைபோல, மனக் களிப்பும் பித்தமும் கொண்டேனடி உந்தன் சாய்மனைக் கழுத்தில் சாய்ந்துகொள்ளப் பற்பல செந்தமிழ் வார்த்தைகள் உதிர்த்தேனடி முன்சென்மம் நான் முகர்ந்த, முன்தானை வாசம் காட்டி, நான் துஞ்ச ஒரு கதை சொல்லடி பின், உன் குரலால் தமிழ் பிதற்றி, நற்செவியின்பம் தந்தெனை மடியடியில் கிடத்தி வெல்வாயடி கட்டளைத் தலைவி உந்தன் கட்டுக்குழல் சுருக்கை, என் கழுத்திலிட்டுக் காமம் கொல்வாயோ. இல்லை, கருவறை இருள்காட்டி எனை ஆற்றுப்படுத்தும் செயல்பல செய்குவாயோ எவை புரிகினும், சிற்றம்பலம் வாழும் ஈசன் பதம் வைத்து நெஞ்சை அணைத்து ஆட்கொள்ளடி. துயர் எரித்து, நீறுபோல் எனை அள்ளி நெற்றியில் பூசிக்கொள்ளடி மூர்க்கத்தில் நிகழும் வழுவும், முத்தத்தில் நிகழும் ஒழுக்கும், இதில் புனிதமெது பாவமெதுவென்று இங்கு எவர் சொல்வாரடி. அன்பின் அரங்கிலே புலன் ஆயிரம் திறந்து பூஜிக்க, பேறொன்று வேண்டுமடி இப்படி, பூக்களும் பணியும்படி மென்மைத் தமிழ் உரைத்து உன்னைச் சேருவது இன்பமடி பாசுரங்கள் பல நெஞ்சை அள்ளுவதுபோல் உனை அள்ள, ஆயிரம் பசுங்கரங்கள் வேண்டுமடி கருத்திலும் சேருவதே பெருங்கா

பியார் - பிரேமா - காதல் : கைகோள்

இந்தத் திரைப்படம் பற்றிய விமர்சனத்துக்கு முன்னர், இது பேசும் கருவினைப் பற்றிய பின்புலத்தினைப் பற்றி நம்முடைய தமிழ் மரபும் இலக்கியங்களும் என்ன கண்டன என்கிற தெளிவு அவசியம். அந்தத் தெளிவின் பின்னர்தான், இதுபோன்ற கருக்களை இரசிக்கமுடியும். காரணம், சின்ன வயதிலிருந்து நமக்கு ஊட்டப்பட்ட அறிவினை, நாம் சரியோ எனப் பரிசோதித்துத் திருத்த விரும்பாதவர்களாக இருக்கலாம். இவை நம்முடைய அகத்தில், இதுஇதுதான் ஒழுக்கம் என்றும், பெண் என்றால் இப்படி இப்படித்தான் என்றும் சில நம்பிக்கைகளை(cognitive beliefs) விதைத்து வைத்திருக்கிறது. இவற்றை எடுத்துவிட்டுத் திறந்த மனதோடும் மனிதத்தின் கண்களோடும் உலகினை அணுகவேண்டும். எல்லா மனித உயிரும் காதலும் காமமும் சிறக்க வாழவேண்டும்.   திருமணத்துக்குப் புறம்பான உறவுமுறைகளை உள்ளுக்குள்ளே எதிர்ப்பவர்கள், கேட்கும் ஒரே கேள்வி என்னவென்றால், இவற்றை ஆதரிப்பதால் நம்முடைய பண்பாடும் ஒழுக்கமும் என்னவாகும் என்பதுதான். அதற்கு முதலில், அவர்களுக்குமாய்ச் சேர்த்து, 'ஒழுக்கம்' என்பது என்ன என்பதைப் பரந்த நோக்கில் பார்த்துவிடலாம். வழிவழியாய், தன்னைத்தானே பரிசோதனை செய்துகொ

அவள் கவிதையானவள்

அவளும் நானும் இருந்த அறையில், அவள் செயல்களை நான் விழிப்பார்வைகளால் வாக்கியமாக வரைந்துகொண்டிருந்தேன். 'முழாசும் தீயின் வண்ணத்தில், மல்லிகையை முழம்போட்டு இரசிக்கிறாள்' என்பது எளிய வாக்கியமில்லை என்பதை நிறுவ, எந்தன் புத்திக்குள் தமிழை இழுத்து அணாவுதல் முறையென்று கண்டேன். தமிழ், அது வெண்மையில் வெம்மை புரளும் எழிலென்று விளக்கவுரை அளித்தது. வாக்கியமும், அதை விளம்ப எழுந்த உரையும், என் சிந்தையில் நின்று புணர, இது வம்புச் செயலென்றும், பொல்லா வாக்கியமென்றும் கண்டு தெளிந்தேன். தெளிவு, அது மேலும் மோகம் மூட்ட, ஒற்றைப் பூவில் வண்டு முரலும் சங்கதி கேட்டு, சோலை மலர்களெல்லாம் ஆடை துறந்ததுபோல, அவள் கழுத்தடியில் கேள்விகளாய் நகர்ந்தேன். அவள் வாசம் அள்ள அள்ள, என் அணரியைத் தணல் தின்று தள்ள, அவள் முதல் புதிரை அவிழ்த்தாள். முதல் புதிரின் வெப்ப மூட்டையில் முத்தமிட்டேன். எனை அணைத்து, உயிரில் முழவுமேளம் அடித்து, என் உச்சியில் அவள் பாதம் வைத்துக் கொட்டம் அடக்கினாள். உளுத்த மரக்காட்டில் விழுந்த கொழுத்த மழைபோல, என் மூர்க்கம் தணிக்க, பெரும் குழல் இழுத்து முகம் மூடி முத்தமிட்டாள். மதிய