Skip to main content

Posts

Showing posts from February, 2017

மணிரத்னத்தின் ஆண்கள்

இயக்குனர் மணிரத்னத்தின் திரைப்படங்களில் வருகிற  கதையின் நாயகிகளைப் போலவே நாயகர்களும் மனதில் ஒரு சிகரம் அமைத்து வாழ்பவர்கள். அவர்களைப் போலவே  அவர்களைச் சுற்றி இயங்கும்  ஏனைய ஆண் கதாப்பாத்திரங்களும்  மனதிடம் உள்ளவர்கள். உளவியல் இரீதியாக உறுதியானவர்கள். அதேநேரம், மனதினில் இருக்கும் காதல், ஈரம் போன்ற மென் உணர்வுகள் எல்லாவற்றையும் முகபாவனையிலும் செயல்களிலும் எழுதிக் காட்டக்கூடியவர்கள். உள்ளே நியூட்டன் கண்டறியாத ஒரு  ஈர்ப்பு இருந்துகொண்டேயிருக்கும். ஆப்பிள்கள் விழுகிறதா ரோஜாக்கள் விழுகிறதா என்பது பார்ப்பவர் பார்வையில் இருக்கிறது. நூறு பேரை அடித்து வீழ்த்துவதும், உரக்கப் பேசுவதும், நரம்புகள் புடைப்பதுமே வீரம் என்கிற முரட்டுத் தமிழ் சினிமாவின் வரையறையை உடைத்துப்போட்டவர்கள்.  வீரத்துக்கு "மன திடம்" என்று முகவரி எழுதியவர்கள். மனதிடம், கர்வம், அன்பு, காதல், மென்மை எல்லாம் ஒருசேரக் கொண்ட அரிதான ஆண்களின் பிரதிபலிப்பு.  எழுத்தாளராகவும் பொறியியலாளராகவும் வருகிற கன்னத்தில் முத்தமிட்டால் மாதவன், தீவிரவாதிகளை நேர்காணல் செய்யத் தனியே செல்லும் அரவிந்தசாமி, ஆய்த எழுத்து மைக்கல், 

நிலமடந்தை

மனப்பீடத்தில் வீற்றிருந்து மணிமொழி சூட்டி அழகு பார்க்கும் பெயரற்றவளுக்கு எழுதிய ஓலைகள். பாயல் கொள்ளுதல்   கண்மணியாள், மூடிவைத்த வீணை போல் நினைவில் உனது வடிவு .தந்தி மீது இரு கயல்கள். வெறித்த வெண்ணிலவில் உறங்கும் புள்ளெல்லாம் எழுப்பிவிடத் தோன்றுகிறது. கிடக்கட்டும் வைகறை. வள்ளியைத் தொழுதல்  வள்ளீ , எனதன்பு சொல் நர்த்தகி. "அடுக்கடுக்காய் மலரும் விடியல் காண நீர்த்தாமரை விழித்திருக்கும்" என்று நீ சொன்னால்,அப் பொருளின் வேர் மருவிய மொழியும் பாதி வழியில் நாணும். கூதிர்காலம்... நங்கை, இது வெள்ளைச் சூரியன்கள் பார்க்கும் கன்னி மாதம். ஓர் அச்சிர ஆராதனம். ஊசிப் பூக்கள் நெருக்கையிலே ஒரு ஆளுயர விடமேற்றிக் கொலைகள் புரிகுவாய். உயிர் இறங்கிய மறுகணமே பற்றிக்கொண்டு எரிகிறதொரு சித்திரவனம் என்பாய். பதிலுக்கு, குளித்த மலர்கள் தொட்டுப் பறவை ராகம் பாடுகையில் உன் குற்றமிலாப் புன்னகை கள் என்றிருக்கிறேன். விழா மகளே, நங்காய்! இப்போதும் உன் செவியோரம் தவம்கிடந்து தொட்டுச் சென்றது ஒரு நெடிய பனிக்காற்றுத்தான் என்று சொன்னால் நீ நம்பப் போவதில்லை. நீ நம்பவில்லை என்றால் மட்டுமே

மலரினும் மெல்லிது காமம் - மாதரடிக்கு நெருஞ்சிப் பழம்

பாதம்  நடப்பதால் பாதை உண்டாகிறது. நிலத்திலே பதியக்கூடிய பரந்த அடிப்பகுதியே பாதம்.  அடி என்பது ஒரு பொருளினுடைய அடிப்பாகம். பதி - பதம் - பாதம்  சமஸ்க்ருதம்  வாங்கிக்கொண்ட சொற்களில் பாதம் என்கிற சொல்லும் ஒன்று என்றும், பாதை என்கிற சொல்லே,  'Path' போன்ற சொற்களாக வழங்கப்பட்டு வருகிறதென்பதுமே  தேவநேயப் பாவாணர் கூற்று.  இப்படிப்பட்ட உயர்வான உடலின் பாகத்தினை இலக்கியங்கள் பெண் வடிவில் உயர்வாக்கப் போற்றின. பாதத்தின் உயர்வினைப் பாடும் பாடல்கள் பிற்காலத்தில் சமய இலக்கியங்களாகத்தான் அமைந்தது. ஆனால் சங்க இலக்கியப் பாடல்கள் பெண்களின் பாதங்களை உயர்வாக்கப் பாடின. காதலின் மென்தன்மையைக் குறிக்கவும், அதன் பொருளை உணர்த்தவும்  பயன்பட்டது. 'நலம் புனைந்து உரைத்தல்' எனும் அதிகாரத்தில் பெண்களின் பாதத்தைப் பற்றி உயர்வாகச் சொல்லும் வள்ளுவர் முதல் அடியிலேயே, அவள் அனிச்சம் பூவிலும் பார்க்க மென்மையானவள் என்றுவிட்டு இறுதி அடியிலே பாதத்தின் சிறப்பைப் பற்றி எழுதியிருப்பது இன்னொரு சிறப்பு. "அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம்." - குற