Skip to main content

கங்குபாய் கத்தியவாடி




நாம் எதையெல்லாம் விரும்பிச் செய்கிறோமோ அதன் மீது மரியாதையும் ஒருவிதமான பிடிப்பும் நமக்கு இருக்கவேண்டும். அதில் காமம் மட்டும் விதிவிலக்கல்ல.

காமம் தந்து , உடல் தந்து, தானும் மகிழ்ந்து இன்னோர் உயிரை மகிழ்விப்பவரும், காதல், அன்பு, உள்ளமெலாம் உருக்கி உடலாய்த் தந்து மகிழ்விப்பவரும், இரண்டையும் ஒன்றாய்த் தந்து மகிழ்விப்பவரும் மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் ஆணாய் இருந்தாலும், பெண்ணாயிருந்தாலும், மாற்றுப் பாலினத்தவராக இருந்தாலும் மதிக்கப்படவேண்டியவர்கள்.

இந்த மதிப்பானது, உள்ளப் புரிதலினாலும், மனிதத்தினாலும், தகுந்த புத்தியினாலும், பெற்றுக்கொண்ட விஸ்தாரமான அறிவினாலும், நடத்தையினாலும், வார்த்தையினாலும் உள்ளுக்குள்ளே நிகழும் மாற்றத்தினாலும் எழவேண்டும்.

கங்குபாய் என்கிற இந்தப் படம், விலைமாதர்களின் வாழ்வியலைப் பேசுகிறது. விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு பெறுமதிக்கு ஏற்றபடி ஒவ்வொரு தரத்தில் இருக்கிறார்கள். நன்கு படித்து வேலைபார்க்கும் விலைமாதர்களும் இருக்கிறார்கள். பகுதியாய் விலைமாதராக இருப்பவர்களும் இருக்கிறார்கள்.

இப்போதும் அப்போதும், விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருந்தாலும், கங்குபாய் என்கிற இந்தப் படம், காமாத்திபுரா என்கிற இடத்தில் 1960 களில் நிகழ்ந்த கதையை மையமாக வைத்து புனையப்பட்ட கதை. கங்குபாய் கத்தியவாடி என்கிற பெண்ணின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கதை.

பெரும்பாலும் இதுபோல விலைமாதர் விடுதிகளில் சட்டங்கள் இல்லை. அங்கு விலைமாதர்களாக இருக்கிறவர்களுக்கு தகுந்த வசதிகள் இல்லை. அப்போது, குறிப்பிடட ஒரு பகுதியிலேனும் சட்டபூர்வமாக்கப் படாததால் அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பும் இருக்கவில்லை. இதையெல்லாம் எதிர்த்து தங்களுக்கும் தகுந்த அங்கீகாரம் வேண்டுமென்று போராடியவர் கங்குபாய் கத்தியவாடி.

இப்பொழுதும் தனிநபர் விலைமாதராக இருப்பது சட்டவிரோதம் இல்லையென்றாலும், இலங்கை இந்தியா போன்ற நாடுகளில், பெரும்பாலான இடங்களில் விடுதியாக வைத்து(Brothel house) நடத்துவது தடை செய்யப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது. அப்படியிருக்கையில் விலைமாதர் பாதுகாப்பும், அவர்களுக்குரிய சட்டங்களும் இன்னமும் சவாலான ஒன்றாகவே இருக்கிறது.

அவர்களுடைய தொழிலையும் பிற தொழிலுக்குச் சமமான தொழில்களில் ஒன்றாகக் கருதி அவர்களுக்கு சமூகத்தில் அங்கீகாரம் பெற்றுத்தருவது சவாலான ஒன்றாகவே இருக்கிறது. சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி, அலியா பட் நடித்து வெளியாகியிருக்கும் இந்தப் படத்தில், அலியா பட் மிக அழகாக நடித்திருக்கிறார். கண்ணுக்கு விருந்து தரும் காட்சியமைப்பு மற்றும் இசையென்று அழகாக எடுத்திருக்கிறார்கள்.

தருவது உடலென்றாலும் உள்ளமென்றாலும் அதற்குரிய மரியாதையை அவரவர்களுக்கு தந்து, தாமும் அதுபோல நடந்துகொள்ளும் கலாச்சாரம் இன்னும் வளரவேண்டும். செக்ஸின் அத்தனை சுகத்தையும் விலைமாதரிடம் அனுபவிப்பவர் எல்லோரும் அவர்களுக்கு மரியாதை தருவதில்லை. உழைப்புக்கு மரியாதையை இல்லை. அதுபோலவே, விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருப்பதால் அவர்களை வந்து சேருகிற மனிதர்களும் வெவ்வேறு தரத்தில் இருக்கிறார்கள். தரம் வெவ்வேறு ஆனாலும், மனிதரின் புரிதல் மாறாமல் நிறைய விடயங்களை மாற்றமுடியாது.

பெரும்பாலான மனிதர்களைப் போய்ச்சேரும் சினிமா ஊடகம் இந்தளவுக்கேனும் ஒரு கதையைப் பேசுவது மகிழ்ச்சி 




Comments

Popular posts from this blog

குறுந்தொகைக் காதல்!

ஒரு மழைநாளில் குறுந்தொகைப் பாடலை வாசிப்பதுபோல சுகானுபவம் கிடையாது. அதிலும் ஒரு ஈரமான குறுந்தொகைப் பாட்டு அமைந்துவிடுவது வரம். இந்தப் பாடலைப் படிக்கும்போதே,  பிச்சியின் வாசத்தை ஈரக்காற்று சுமந்துவருகிறதென்றால், இதை எழுதியவருக்கும் தமிழுக்கும் வெற்றி என்று கொள்ளுங்கள். மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை  இரும்பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து  பெரும்பெயல் விடியல் விரித்துவிட் டன்ன  நறுந்தண் ணியளே நன்மா மேனி  மழைக்காலத்துல மலருற பிச்சியின் நீர் ஒழுகுகிற மொட்டுகள் எல்லாத்தையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு பனங்குடைல மூடி வைச்சுட்டு, அதை ஒரு அடைமழை பெய்கிற விடியற்காலைல திறந்துவிட்டதுபோல நன்மணமும் குளிர்ச்சியும் உடைய மேனி கொண்டவள் அவள். அவளை எப்பிடி நான் பிரிஞ்சிருப்பேன் . அவளைப் பிரிந்தா ல் என்னால் உயிர் வாழமுடியாது. 'சின்னப் பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம்' என்கிற வைரமுத்து வரிகள்போல கவலைகொள்கிறான் தலைவன். ஆனால் இதிலே வாசம்தான் அவனை வாட்டுகிறது. இதில் 'நறுந்தண்ணியள்‬' என்பது ஈர்ப்புள்ள சொல். காதலனின் மென்மையான அன...

அடியே அடியே என்னை எங்க நீ கூட்டி போற!

கிறிஸ்தவ தேவாலயங்களிலும் அவை சார்ந்த சூழலிலும், கிஸ்தவப் பாடல்களும் இசையும் இசைக்கப்படுவதைச் சிலர் கேட்டிருப்பீர்கள். அப்படிப் இசைக்கப்படும் இசையை Gospel music எனலாம். Gospel என்றால் Good message. பைபிளிலிருந்து கதைகளையும், கதாப்பாத்திரங்களையும் கடவுளின் செய்திகள் என்று நினைத்துச் சொல்லப்படுகிற விடயங்களையும் எளிமையான இசையோடு இசைத்துப் பாடப்படுகிற பாடல்கள். வரிகளுக்கு முக்கியத்துவம் உள்ள பாடல்கள். பெரும்பாலும் நம்பிக்கையை விதைக்கிற செய்திகளைத் தாங்கிவரும் இந்தப் பாடல்களை மனதில் நிறையத் துன்பத்தோடு சென்று பாடுகிறவர்களுக்கு தேவாலயத்தில் ஒரு நிம்மதி கிடைக்கிறது. இந்த இசை துன்பத்தை வாங்கி நம்பிக்கையைத் தருகிறது. பலரும் கடவுள்தான் நம்பிக்கை தந்ததாக நினைத்துக்கொள்வார்கள். பிரச்சாரகர் அழைப்பு விடுக்க மற்றவர்கள் பதிலுரைத்து ஆமோதிப்பார்கள். ஒரு chorus இல் பலரும் பதிலுரைப்பார்கள். இதுதான் இசையின் வார்த்தைகளின் பலம். குறிப்பிட்ட மதங்களிடையே இசை தோன்றினாலும், அவற்றைச் சார்ந்திருந்தாலும், அது அந்தந்த மனிதர்களின் சமூகத்தின் அகவுணர்ச்சி மற்றும் அழகுணர்ச்சியின் வெளிப்பாடே என்பதனை நாம் புரிந்துகொள்ள...