Skip to main content

Posts

Showing posts from June, 2014

காதல், காமம் : சுஜாதா

இணையத்தில் உலாவியபோது இந்தப் பகிர்வை வாசிக்கக் கிடைத்தது. எழுத்தாளர் சுஜாதாவின் எழுத்தைப் பற்றிச் சொல்லும் உதாரணங்களில் இதுவும் ஒன்று.. // காமத்தை பற்றி எத்தனையோ எழுத்தாளர்கள் என்னென்னமோ எழுதியுள்ளார்கள், எழுதிகிறார்கள். அதுவும் இப்பல்லாம் ரொம்ப நாராசமா, அருவருக்கத்தக்க விதத்தில எழுதுகிறார்கள். சுஜாதாவின் "மனைவி கிடைத்துவிட்டாள்" என்ற கதையில் ஒரு முதலிரவு காட்சி. ஏன் காட்சியென்று சொல்கிறேனா சுஜாதாவின் எழுத்துக்களை படித்தாலே காட்சிகள் கண்ணுக்கு முன்னால் விரிவடையும், அதான் சுஜாதாவின் ஆளுமை. இந்த கதையில் முதலிரவில் கணவனும் மனைவியும் கொஞ்சிக்கொண்டிருக்கும் போது மனைவி கேட்கிறாள், அவளது பெயர் வேணி. //"உங்களுக்கு பிடிச்ச புத்தகம் எது? " "வேணி" "படிங்க" முதலில் அட்டைப்படத்தைப் பார்த்தான், பிரித்தான், பொருள் அடக்கத்தைத் தேடினான், முதல் அத்தியாயத்தில் ஆரம்பித்தான், ஓவியங்களை ரசித்தான், கவிதைகளைத் தொட்டான், வார்த்தைகள், இடைவெளிகள், இடைசெருகல்கள்.// ஒரு முதலிரவை இவ்வளவு எளிமையாக, ரசிக்கத்தக்க வகையில் வேறு யாராலும் எழுதமு

வைரமுத்து : அடுத்த படைப்பு

தந்தி டிவியில் ஒளிபரப்பாகிய வைரமுத்துவுடனான நேர்காணல் நிகழ்ச்சியில், தனது அடுத்த படைப்பைப் பற்றி அவர் கூறிய செய்தி கொஞ்சம் மகிழ்வைத் தந்தது. அடுத்த படைப்பு எப்போது வெளியாகும்! "என்னுடைய அடுத்த படைப்பு 'ஈழத்தமிழ்' என்று முடிவு செய்திருக்கிறேன். ஈழம் தான் என்னுடைய அடுத்த படைப்புக்கான களம். அதுதான் என் நெஞ்சிலும் மூளையிலும் கனத்துக்கொண்டிருக்கிறது. இந்த நூற்றாண்டில் நிகழ்ந்த மிகப்பெரிய மனிதப்படுகொலை ஈழம்தான். அவர்களின் நியாயம் இன்னும் தீரவில்லை. அந்தப் போராட்டம் தோற்றிருக்கலாம், காரணங்கள் இன்னும் தோற்கவில்லை. அந்தப் போராட்டம் முடிந்திருக்கலாம் அல்லது முடிக்கப்பட்டிருக்கலாம் . அதற்கான கண்ணீர் இன்னும் காயவில்லை. அந்தக் கண்ணீரை, ரத்தத்தை, உள்ளிருக்கும் நியாயத்தை போர் முடிந்த பின்னும் தொடரும் அவலத்தை அந்த மனிதகுலத்துக்கான மீட்சியை என் படைப்புக்குள் கருவாக அமைத்து படைக்கவேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். அந்தப் பணி சாதாரணமானதல்ல. ஏதோ கற்பனைக் குதிரையை தட்டிவிட்டால் கவிதை வந்துவிழுந்துவிடும். ஒரு வெண்ணிலா இரவில் மாலை 7 மணிக்கு தொடங்கினால் அதிகாலை 5 மணிக்குள் என் படைப்பு முடிந