Skip to main content

Posts

Showing posts from February, 2013

கண்ணில் தாகம் தீருமோ !

நீண்ட நாட்களுக்கு முதல் எண்ணங்களில் மெல்லிய வண்ணங்களை   தீட்டிய ஒரு பாடல். இந்தப் பாடலை ஒவ்வொரு முறை கேட்க்கும் போதும் ஏதோ ஒன்றை இரசித்துக்கொண்டே இருக்க முடிகிறது.  பின்னணி இசை , காட்சியமைப்பு ,வரிகளில் விரகதாபமும் மௌனமும் கலந்திருக்கிறது. உணர்வுகளை சரியாகக் கோர்த்து உருவாக்கப்படும் படைப்புகள் மனதை கொஞ்சம் கனமாக்கிப் பின்  காற்றில் ஆடும் ஒரு இறகு போல் ஆக்கிவிட்டே செல்லும். அந்த விதி இந்தப் பாடலுக்கு பொருந்தும். பாடல் வரிகளில் இன்னொரு தனித்துவம் படர்ந்திருக்கிறது. அந்த வரிகளுக்குத்  தன் இனிய  குரலால் அழகு சேர்த்தது பாடகி சௌமியா.  அந்தக் குரலில் இருக்கும்  ஏக்கம் , வேதனை சில வரிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறது. கார்த்திக் ராஜாவின் பாடகித் தேர்வு சிறப்பு. காதலனை /கணவனை நண்பனாக நினைத்துப் பாடுவது போன்ற வரிகள்.இலக்கியங்களில் தோழி என்பது போல , இந்தப் பாடலில் நண்பனாக நினைத்துப் பாடுவது ஒரு தனி அழகு. //  கோபங்கள் பேசும்போது வேதனை கூடும் ப்ரேமைகள் பேசும் போது மோகம் கூடும் // வடமொழிச் சொற்களும் தமிழும் கலந்து வரும் வரிகள்.  வரிகளின் ஆழமும் அதை இணைத்துக்கொண்டே பயணிக்கின்றது. சொற்

Life of Pi

கனடாவை சேர்ந்த எழுத்தாளர் Yaan Martel எழுதி Man Booker விருது பெற்ற புத்தகமே 'Life of Pi' . அதே பெயரிலேயே  Ang Lee  இயக்கத்தில்  திரைப்படமாகவும் வந்திருக்கிறது. அவரின்   Brokeback Mountain  என்ற படத்திற்காக அவருக்கு சிறந்த இயக்குனருக்கான ஒஸ்கார் விருது கிடைத்தது. சிறந்த இயக்கத்திற்கான விருது பெற்ற முதலாவது ஆசிய நாட்டவர். Life of Pi திரைப்படமும் பதினொரு ஒஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது . அதில் பாம்பே ஜெயஸ்ரீ பாடிய தமிழ்ப் பாடலும் ஒன்று. ஆரம்பத்திலேயே பாம்பே ஜெயஸ்ரீயின் குரல் பின்னணியில் ஒலிக்க விலங்குகளின் நடத்தையை அழகாக படமாக்கி இருக்கிறார்கள். 'கண்ணே கண்மணியே " என்ற தமிழ்ப்பாடல் நகரத்துக்கு வாழ்க்கையிலிருந்து எம்மை மெல்ல அந்நியப்படுத்தி இயக்குனரின் உலகை அறிமுகப்படுத்துகிறது. மனதுக்கு ஓர் இனிய தாலாட்டு.எழுத்துகளை காட்டுவதில் கூட அவ்வளவு கவனம் செலுத்தியிருக்கிறார்கள். விலங்குகளின் நடத்தையே எழுத்தின் வடிவையும்  தீர்மானிக்கிறது. தற்போது கனடாவில் வாழ்ந்து வரும் பை ( Piscine Molitor) தனது கதையை ஆரம்பத்திலிருந்து சொல்ல ஆரம்பிக்கிறான் . பாண்