Skip to main content

வாழ்க்கை பரிசுகள்

வாழ்வில் பரிசுகள் வெறும் அட்டைகளிலும் பொருட்களிலும் இல்லை அவை மனது சம்மந்தப்பட்டவை மனதையே பரிசாக கொடுக்க வேண்டும் . ஆனால் ஒரு ரூபாய் செலவில்ல்லாத பரிசுகள் இவை ...


கிரகித்தல் பரிசாக 
கூறுவதை முதலில் வேறு எந்த தலையீடும் எதிர் சிந்தனைகளும் எண்ணமும் தோன்றாது கிரகிக்க வேண்டும்

உறுதுணை பரிசாக 
கட்டிபிடித்தல் , முத்தம் , தோளில் தட்டி கொடுத்தல், கைகளை இறுக பிடித்தல் போன்ற வழிகளில் பாசத்தை உற்ச்சாகத்தை வெளிப்படுத்தல் .

சிரிப்பு பரிசு
 நகைச்சுவையான வீடியோக்கள் , கதைகள் போன்றவற்றை பரிமாறல் .. அதன் அர்த்தம் "உன்னுடன் சேர்ந்து  சிரிக்க வேண்டும் " என்ற  பரிசு  . 


எழுத்தில் நன்றி 
செய்த உதவிக்கு ஒரு நோட்டில் "உதவிக்கு நன்றி" என்று எழுதி கொடுக்கலாம் .அது இறுதி வரை அவர்கள் கையில் இருக்கும் ...

பாராட்டு பரிசு 
மிகவும் அருமையான வேலை செய்தீர்கள் , இந்த உடையில் அழகாக உள்ளீர்கள் என சிறு உற்சாகமும் பாராட்டும் தெருவிக்க வேண்டும் ..முக்கியமாக சிறு பிள்ளைகளுக்கு  பாராட்டு  என்பது  மிக முக்கியம் ..

தோள் கொடுத்தல்  
துன்பமான நேரங்களில் மற்றயவர்களுடன் இருந்து அவர்களுக்கு தோள் கொடுத்தல் .

உற்சாகம் பரிசு 
நன்றிகள் தெருவித்தல் , புன்சிரிப்புடன் விடை பெறல் , பாராட்டுதல்
=================================================================================
நீங்கள் ஏழையாக பிறந்தது உங்கள் தவறல்ல
ஏழையாக இறந்தால் அது உங்கள் தவறு ...- பில் கேட்ஸ்  

நீங்கள் எந்த காலத்தில் பிரச்சனைகள் இல்லாமல் வாழ்க்கையில் பயனிக்கிறீர்களோ,
அப்போது உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள் நீங்கள் சரியான பாதையில் தான் செல்கிறீர்கள  என்று  .  - சுவாமி விவேகானந்தா 

வெற்றி பெற மூன்று வழிகள் - ஷேக்ஸ்பியர்  
1 . மற்றயவர்களை விட அதிகமான சிந்தி
௨. மற்றயவர்களை விட அதிகமாக வேலை செய்
3 . மற்றையவர்களை விட குறைவான எதிர்பார்ப்பை வைத்துக்கொள்

நீ வெற்றி பெற்றால் விளக்கம் தேவையில்லை
தோற்றால் விளக்கம் கொடுக்க நீ அங்கே இருக்கவே கூடாது - ஹிட்லர் 


வெற்றி என்பது எப்போதும்  முதலாவது இடத்தை குறிப்பது அல்ல ...
நீங்கள் ஒவ்வொருமுறையும் முதல் செய்ததை விட சிறப்பாக செய்துள்ளதை சுட்டி காட்டுவதே ..- போனி ப்ளேர்

தாம் எந்த தவறும் யாரும் செய்யவில்லை என்று கூறினால்
அவர்கள் புதிதாக முயற்ச்சி  செய்யவில்லை என்று தான் அர்த்தம் ..ஐந்க்ச்டையின்

Comments

ஆர்வா said…
அருமை.. அதிலும் பில்கேட்ஸ் சொன்னது ஹைலைட்

Popular posts from this blog

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு க

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிடத்தில் சரியாக கொண்டு போய் சேர்க்கின்றனர் .  சிறகுகள் அமைப்பின்

கண்ணாளனே...!

சங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன். அகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது.  மலையும் மலை சார்ந்த இடத்திலும்  நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது.  இந்தப் பாடல் காதல் வயப்பட்ட  பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச்  சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.  "நெருநல் எல்லை யேனல் தோன்றித் திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள இ