Skip to main content

Posts

Showing posts from August, 2013

கவிப்பேரரசு வைரமுத்து: இலக்கியப்பாடல்கள்

வைரமுத்து அவர்களின் பிறந்தநாளில் இருந்து அவரைப்பற்றிய பதிவுகளையே தொடர்ந்து எழுதுகிறேன்.வெறும் பாட்டு வரியில் என்ன இருந்துவிடப் போகிறது என கடந்துபோக  முடியாதபடி, அவற்றுள் ஒருவித  இலக்கியச் சுவையை,விஞ்ஞானத்தை,தகவல்களைக் கொண்டு வந்தவர் அல்லவா!.கொண்டுவந்து சேர்த்தார்  என்பதை விட ,நமக்கு அதை அறிமுகப்படுத்த முயன்றுகொண்டிருப்பவர் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.அவரது முயற்சியை தொடர்ந்து கவனித்து வருபவர்கள் அறிந்திருப்பார்கள். சாதரணமாக அனுகிவிட்டுப் போகாதபடி புதுமையால் கட்டிவைக்கும் பாடலாசிரியர்.  வைரமுத்து அவர்கள் ,'இரண்டாம் உலகம் ' திரைப்படப் பாடல்களை வெளியிட்டு வைக்கும்போது, " இலக்கியத்தின் சாரங்களைப் பாட்டுக்குள் கொண்டுவருவதற்குத்தான் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாய் முயற்சிசெய்து வருகிறேன்" என்று கூறியிருந்தார். அவர் இலக்கியத்தின் பால் ஈர்க்கப்பட்டு, அவற்றை  மாற்றி எளிமையான வரிகளாகக் கொடுத்தார்.ஆனால்  இலக்கியப் பாடல்களை கொஞ்சம் கூட மாற்றாமல் நேரடியாகப் பயன்படுத்தியிருக்கிறார். கூடுதலாக ரஹ்மானுக்கு எழுதிய பாடல்களில் நேரடியான வரிகள் இடம்பெற்ற

வைரமுத்து : திருக்குறள்

'அவள் வருவாளா' என்கிற பாடல் 98 களில் மிகவும் பிரபலம். அந்தப் பாடலை இப்போதுகூட சத்தம் எழுப்பாமல் மனதுக்குள் பாடிப் பார்க்காதவர்கள் கிடையாது.  தேவா இசையமைப்பில் ஷாகுல் ஹமீதும் ஹரிகரனும் பாடிய பாடல். அதில் ' ஏய் கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் பெண்ணிலிருக்கு, அந்தப் பெண்ணிலிருக்கு' ங்கிற வரியை மட்டும் ஷாகுல் ஹமீது பாடுவார். ஹரிகரன் குரல் இருக்கும் போதே அந்தக் குரல் தனித்துத்தெரியும். "வீ மிஸ் யூ ஷாகுல் ஹமீத்" என்று சொல்லத் தோன்றுகிறது.  புணர்ச்சிமகிழ்தல் அதிகாரத்தில இருக்கிற குறளை பயன்படுத்தியிருக்கார் வைரமுத்து. அந்தக் குறளை வேகமாகப் பாடுமளவு, துல்லியமான குரல் வளம் உடையவர் ஷாகுல் ஹமீத். சரி காமத்துப்பாலில் வருகிற அந்த வரியில் அப்படி என்ன சிறப்பு.  கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்  ஒண்தொடி கண்ணே உள. எனும் குறள் தான் அது. கண்களால்  பார்த்து, செவியால் கேட்டு, நாவால் உண்டு, மூக்கால் மோந்து, உடம்பால் தீண்டி என் ஐம்பொறிகளாலும் அனுபவிக்கும்படும் இன்பம், ஒளிமிக்க வளையல்களை அணிந்த மனைவியிடம் மட்டுமே உண