Skip to main content

Posts

Showing posts from July, 2017

மலரினும் மெல்லிது காமம் 04 - பருகுதல்

Loving is a journey with water and with stars with smothered air and abrupt storms of flour: loving is a clash of lightning-bolts and two bodies defeated by a single drop of honey. - Neruda காதல் மொழியைப் பொறுத்தவரையில், "பருகுதல்" என்கிற சொல் ஒருவித தீவிரத் தன்மையைக் குறிப்பது. காதல் தன் துணையைச் சுமை என்று அறியாது. அதேபோல, உயிர் உறையும் காமத்தில்/காதலில் சகலதும் தூய்மையானது.  பருகுவன்ன காதலொடு திருகி மெய் புகுவன்ன கை கவர் முயக்கம்  பருகுதலை உடைய தீவிரக் காதலில் ஒருவரையொருவர் முயங்கி உறங்குகிறார்கள். இருவரும் ஒருவரே போன்று தழுவி இருக்கிறார்கள். அப்படி இருக்கிறவர்கள்கூட புலம்புகிற அளவுக்குக் கொடியது இந்த மழையும் வாடைக்காற்றும் என்று அகநானூற்றுத் தலைவி சொல்கிறாள். தலைவன் இருந்திருந்தால் மழைத்துளி பட்ட இதழ்களைப் பருகி இருப்பான் என்கிற ஏக்கம் அவளுக்கு இருக்கலாம்.  சங்கப்பாடல்களில் அகநானூறு, பரிபாடல், கலித்தொகை எல்லாம் தலைவன் பரத்தையரோடும் தலைவியரோடும் நீராடுவது பற்றிச் சொல்கின்றன. தலைவன் மார்பை தெப்பம் என்று நினைத்து பெண்கள் ஆடுவர்.  பெண்கள் வைகை