Skip to main content

Posts

Showing posts from 2014

சுஜாதாவிடமிருந்து வாசியுங்கள் 2

'சுஜாதாவிடமிருந்து வாசியுங்கள்' என்ற முதலாவது பதிவு பொதுவானதாக அமைந்திருந்தது.  மேலும் சில உதாரணங்கள், காரணங்களோடு, 'உள்ளம் துறந்தவன்' நாவலை முன்னிலைப்படுத்தி இரண்டாவது பதிவு.. *********************************************************************************  எதிர்பாராத தன்மைதான் அவள் சிறப்பம்சம். இத்தனைக்கும் அழகி என்று உடனே சொல்லிவிடமுடியாது. பத்து நிமிஷம் உற்றுப் பார்த்துப் பேசினால் அவள் உண்மை அழகு புலப்படும். உயரமும் இல்லாமல் குள்ளமும் இல்லாமல் கச்சிதமான உடலமைப்பு. இடக்கைப் பழக்கம், aquiline nose (டிக்க்ஷனரியைப் பாருங்கள்). எல்லாவற்றிலும் ஓரளவுக்கு ஆர்வம். எதில் ஆர்வம் என்பது தினம் தினம் மாறும். ஒருநாள் இகேபானா, ஒருநாள் கர்நாடக சங்கீதம், ஒருநாள் சூடான் நாட்டு பட்டினிக் குழந்தைகள். - சுஜாதா (உள்ளம் துறந்தவன்) மில்லியன் யூரோக்கள் பெறுமதியான தொழில் நிறுவனக் குழுமத்தின் உரிமையாளர் ராகவேந்தர். அவரின்  அன்பிற்குரிய வளர்ப்பு மகள் மஞ்சரி. அந்நிறுவனத்தின் பெரும்பாலான ஷெயார்களை அவள் பேரிலேயே எழுதி வைத்துவிட்டார். ஏழையான அழகேசன் என்பவனைக் காதலிக்கிறாள்.  இந்நி

கம்பரும் கார்க்கியும்..

என் காட்டுக்குள் கிளியாகினாய்  கிளி ஒன்றின் கீச்சாகி.. இலை ஒன்றின் மூச்சாகி.. முகில் ஒன்றின் பேச்சாகி.. எனில் வீழ்கிறாய்! ~ கார்க்கி  யுவனின் இசையமைப்பில் வெளியான 'வை ராஜா வை' திரைப்படத்தின் பாடல்களை சில தினங்களுக்கு முன் கேட்டேன். என்றும் தனித்துவமும் புதுமையும் காட்ட விரும்பும் மதன் கார்க்கியின் வரிகளில் என்றுமுள்ள ஈர்ப்பு இருந்தது. 'பச்சை வண்ணப் பூவே'  பாடலில்  இடம்பெற்ற மேலே குறிப்பிட்ட வரிகள்  ஒரு சினிமாட்டோகிராபருக்கு தேவையான காட்சியையே முன்னே விரித்துப் போகிறது.  அதன் பின்னர் கம்பரும் கார்க்கியும் சேர்ந்து எழுதிய பாடலை இரசித்தேன். வைரமுத்துவும் வாலியும் தமிழ் சினிமாப் பாடல்களில் சங்க இலக்கியத்தை மெதுவாகப் புகுத்தி இரசிக்கச் செய்தவர்கள். அந்த வகையில் மதன் கார்க்கியின் முதல் முயற்சி இதுவென்று நினைக்கிறேன். எல்லோரும் காதல் என்றதும் சங்க இலக்கியத்தைப் பொருத்தினர். கார்க்கி சற்றே வேறுபட்டிருக்கிறார். 'பூக்கமழ் ஒதியர்' பாடலை  'சங்ககாலத்து club song' என்று சொன்னால்  பொருத்தமாக இருக்கும். பெண்ணை மானென்றெண்ணாதே

சுஜாதாவிடமிருந்து வாசியுங்கள்...

தமிழ்ச் சூழலில் இருந்து புதிதாகப் புத்தகங்கள் வாசிக்க வருபவர்களுக்கு எந்தப் புத்தகத்திலிருந்து வாசிப்பினை ஆரம்பிப்பது என்பதில் நிறையக் குழப்பங்கள் இருக்கிறது. யாராவது புத்தகம் வாசிப்பவர்களைக் கண்டால் அவர்கள் கேட்கும் இரண்டாவது கேள்வி இதுதான் என்று நினைக்கிறேன். ஒருசிலரின்  'பிஸி' எனக் காட்டிக்கொள்ள விளையும் செயற்கைத் தன்மையால், அவர்களாகவே வலிந்து ஏற்படுத்திக்கொள்ளும் 'உங்களுக்கு எப்படி நேரம் கிடைக்கிறது?' என்கிற முதலாவது கேள்வியை இப்போதைக்கு ஒத்திப்போடுவோம்.  புத்தகங்களைப் படிக்க விரும்புபவர்கள் சுஜாதாவிடம் இருந்து வாசிப்பினை ஆரம்பிக்கவேண்டும் என்பது என் தனிப்பட்ட கருத்து. இதுவரை நான் படித்த புத்தகங்கள் ஒப்பீட்டளவில் மிகச் சொற்பம். தீவிரமான இலக்கிய வாசகன் என்றெல்லாம் சொல்லிவிடமுடியாது. ஒரு புத்தகத்தை இரண்டு, மூன்று தடவைகள் வாசித்தால் தான் தலைக்கு ஏறும். ஒருபோதும் எண்ணிக்கையினை நோக்கி ஓடி வாசிப்பின் நோக்கத்தைச் சரித்திட முயல்வதில்லை. வார்த்தைகளில் நின்று செல்லும் நிதானமான வாசிப்பு மிகவும் பிடிக்கும். ஒரு எழுத்தாளனை முழுமையாக உள்வாங்கி மரியாதைப்படுத்த வேண்டும் என எ

மீனோட்டம் - லா.சா.ராமாமிர்தம்

லா.சா.ராமாமிருதம் அவர்கள், எழுத்தின் ஒலிப்பு முறையில், வசனங்களில் இருக்கும் கவிநயத்தில் அதிகம் கவனம் செலுத்துபவர். அவர் உருவாக்கும் கதாப்பாத்திரங்களில் உள்ள சோகமும் கவிநயம் மிக்கவை. லா.சா.ராவின் கரைபுரண்டோடும் எழுத்தை நான் முதன்முதலாகக் கண்டுகொண்டது 'அபிதா' என்கிற நாவலில் தான். அவருடைய மற்றைய படைப்புகளையும் படிக்க வேண்டும் என்கிற விருப்பத்தில் நிகழ்ந்தது தான் 'ஜனனி' என்கிற சிறுகதைத் தொகுப்பின் மீதான வாசிப்பு.  இதில் 'மீனோட்டம்' என்கிற சிறுகதைத் தொகுப்பில் உள்ள லா.சா.ராவின் அடையாளங்கள் ஏராளம். "நெஞ்சின் அடிவாரத்தில் ஏதோ புற்று இடிந்து அதனுள் ஜன்மக்கணக்கில் உறங்கிக் கிடந்த ஏதேதோ விஷயங்கள், பேச்சுகள், வாக்கியங்கள், வார்த்தைகள், பதங்கள் பத-ஸரி-க-ஸா-ம-த  ஸ்வரங்கள் ஓசைகள், ஒலிகள், மோனங்கள். திக்கித் திகில்கள். திமிதிமி எழுந்து மிரண்டு ஒன்றுடன் ஒன்று உருண்டு புரண்டு நெஞ்சமுட்டில் கவிந்த நஷத்ர இருட்டில் கருங் குதிரைகள் மின்னிடும் வெண்பிடரிகளை சிலிர்த்துக்கொண்டு தங்கத்துடைப்பம் போன்ற வால்களைச்  சுழற்றிக் கொண்டு இதய விலாசத்தில் ஓடுகையில் திடும் திடும் திடு

காவியத்தலைவன் - அசையும் சித்திரங்கள்

ஒரு வரலாற்று நாவலின் இடையிலுள்ள சித்திரங்களைக் கற்பனையில் அடிக்கடி அசைத்துப் பார்த்திருப்போம்.  அவற்றுக்கு உருவம் கற்பித்த்திருப்போம். பார்க்காத உலகத்தைப் பார்க்கவேண்டும் என்கிற தீராத ஆசையின் விளைவு நம்மை அங்கெல்லாம் கொண்டுசெல்கிறது.  அப்படியான  நிமிடங்களைத் திரட்டி, கண்முன்னே கொண்டுவந்து நம்மை  மகிழ்ச்சிப்படுத்துவது  என்பது எளிதான காரியமாக இருக்க முடியாது. சோர்வு நம்மை நெருங்காது சொல்ல அந்த 'மேஜிக்' பிடிபடவேண்டும். இதனை வெற்றிகரமாகச் செய்துவிட்டாலே சரித்திரப் படங்கள் வெற்றிப்படங்களாகும். வசந்தபாலனின் காவியத்தலைவன் செய்த 'பிரம்மாண்ட மேஜிக்' அதுதான். இது ஒரு கலர்புல் கலையின் கரைதொட்ட சினிமா.  இந்தியாவின் சுதந்திரப் போராட்ட காலத்தில் தமிழ்நாட்டில் நிறைய நாடக சபாக்கள் இயங்கின. அந்த நாடக சபாக்களைச் சேர்ந்த நடிகர்களின் வாழ்க்கை முறையை காதல்,நட்பு, பாசம் போன்ற இயல்பான உணர்ச்சிகளோடு சொல்லும் திரைப்படம். இவை படத்துக்கு வெறும் ஆதாரம் மட்டும்தான். நலல் சினிமாவின் அழகைப் பார்த்துத்தான் உணரவேண்டும். நாடகங்களைப் பற்றி நிறையப் புத்தகங்கள் படித்தும், வேறு வழிகளில் தகவல்கள்

பிரிவோம் சந்திப்போம் : ஆனந்தத் தாண்டவம்

அவ்வப்போது ஆனந்தத்தாண்டவம் படத்தைப் பார்த்து யாராவது சமூக இணையத்தளங்களில் சிலாகித்துக்கொள்வார்கள். அப்போதெல்லாம் எனக்கு சுஜாதா எழுதிய 'பிரிவோம் சந்திப்போம்' நாவல்தான் நினைவுக்கு வரும். என்னைப்பொறுத்தவரை அந்தத் திரைப்படம் நாவலைப் பூர்த்தி செய்யவில்லை என்றே சொல்வேன். உண்மையிலேயே தமிழ்த் திரைப்பட உலகில்  நாவல்களைத் திருப்தி செய்த படமென்று ஒருசிலவற்றைத் தான் குறிப்பிடலாம். அதற்குக் காரணம், நாவலில் இருந்த ஆழமான தன்மை திரைபப்டங்கள்ல இருக்காது.  'இங்கு எல்லாமே மிகைப்படுத்தல்கள் தான்' என நாவலில் ஒரு வசனம் வரும். அது எவ்வளவு பெரிய உண்மை என்பது நான் சந்தித்த, எதிர்கொள்கிற மனிதர்களைப் பார்த்துப் புரிந்துகொண்டேன். மிகைப்படுத்தல்களை கண்மூடித்தனமாக நம்புகிற சமூகமாக மாறி வருகிறது. இவர்களாகவே காதலுக்கென்று ஒரு தியரி அமைத்துக்கொண்டு, எதிர்கால உலகினை  இப்படித்தான் அமைத்துகொள்வார்கள், வாழ்வார்கள்  என சுஜாதா எண்பதுகளிலேயே எழுதிய நாவல் இது. "ரகுபதி ஒரு இஞ்ச் உயரத்தில் மிதந்து சென்று வீட்டுக்கு வந்தான். மதுமிதாவைத் திறந்து மதுமிதாவை முகத்தில் இறைத்துக்கொண்டு, மதுமிதா போ

விடிந்தாலும் பெண்ணழகு!

திருமணமாகிக் கிட்டத்தட்ட நான்கரை நாட்கள் நகர்ந்திருக்கும். இன்றைய அதிகாலைப்பொழுதுவரை கணக்கில் எடுத்துக்கொண்டால் என் கணிப்புச் சரியாக இருக்கும். இருளும் ஒளியும் கலவி கொள்ளும் விடிந்தும் விடியாத பொழுது அது. காற்று அல்ல, என் தலையை அவள்தான் கோதுகிறாள். மூச்சுக்காற்று என்னவோ நெஞ்சில்த்தான் பட்டுப் படர்ந்துகொண்டிருந்தது. அதோடு அவள் விரல் வருடும் சுகமும் பிடித்திருந்தது. இன்னும் கொஞ்சம் வருடட்டுமே என்றுதான் மெதுவாகக் கண் விழித்தேன்.  நிமிர்ந்து, என் கண்களைப் பார்த்துப் புன்னகை செய்தாள். ஆமாம் உதடுகளில் புன்னகையைச் செய்துகொண்டாள். இந்த முறை உதடு மட்டும்தான் சிரிப்புக்குரிய அறிகுறிகளைக் காட்டியதே தவிர, கண்கள் சிரிக்கவில்லை. சிரிக்கும்போது  அவள் கண்கள் ஒரு குட்டி ஹைக்கூ போல இருக்கும்.  இந்தமுறை அந்தக் கண்கள் 'என்னை ஆச்சரியப்படுத்து' எனக் கேட்பதுபோல இருந்தது. அந்தக் கண்கள் இப்படித்தான் புதுமை செய்து என்னை அடிக்கடி ஆச்சரியப்படுத்தும். சற்றும் எதிர்பார்க்காதபோது, ' விடியும் வரை பெண்ணழகு' என்றாரே உங்க கவிஞரு என்று கேட்டாள். அதுவும் இந்த நேரம் இந்தக் கேள்வியை நான் எதிர்பார்த்த

காதல், காமம் : சுஜாதா

இணையத்தில் உலாவியபோது இந்தப் பகிர்வை வாசிக்கக் கிடைத்தது. எழுத்தாளர் சுஜாதாவின் எழுத்தைப் பற்றிச் சொல்லும் உதாரணங்களில் இதுவும் ஒன்று.. // காமத்தை பற்றி எத்தனையோ எழுத்தாளர்கள் என்னென்னமோ எழுதியுள்ளார்கள், எழுதிகிறார்கள். அதுவும் இப்பல்லாம் ரொம்ப நாராசமா, அருவருக்கத்தக்க விதத்தில எழுதுகிறார்கள். சுஜாதாவின் "மனைவி கிடைத்துவிட்டாள்" என்ற கதையில் ஒரு முதலிரவு காட்சி. ஏன் காட்சியென்று சொல்கிறேனா சுஜாதாவின் எழுத்துக்களை படித்தாலே காட்சிகள் கண்ணுக்கு முன்னால் விரிவடையும், அதான் சுஜாதாவின் ஆளுமை. இந்த கதையில் முதலிரவில் கணவனும் மனைவியும் கொஞ்சிக்கொண்டிருக்கும் போது மனைவி கேட்கிறாள், அவளது பெயர் வேணி. //"உங்களுக்கு பிடிச்ச புத்தகம் எது? " "வேணி" "படிங்க" முதலில் அட்டைப்படத்தைப் பார்த்தான், பிரித்தான், பொருள் அடக்கத்தைத் தேடினான், முதல் அத்தியாயத்தில் ஆரம்பித்தான், ஓவியங்களை ரசித்தான், கவிதைகளைத் தொட்டான், வார்த்தைகள், இடைவெளிகள், இடைசெருகல்கள்.// ஒரு முதலிரவை இவ்வளவு எளிமையாக, ரசிக்கத்தக்க வகையில் வேறு யாராலும் எழுதமு

வைரமுத்து : அடுத்த படைப்பு

தந்தி டிவியில் ஒளிபரப்பாகிய வைரமுத்துவுடனான நேர்காணல் நிகழ்ச்சியில், தனது அடுத்த படைப்பைப் பற்றி அவர் கூறிய செய்தி கொஞ்சம் மகிழ்வைத் தந்தது. அடுத்த படைப்பு எப்போது வெளியாகும்! "என்னுடைய அடுத்த படைப்பு 'ஈழத்தமிழ்' என்று முடிவு செய்திருக்கிறேன். ஈழம் தான் என்னுடைய அடுத்த படைப்புக்கான களம். அதுதான் என் நெஞ்சிலும் மூளையிலும் கனத்துக்கொண்டிருக்கிறது. இந்த நூற்றாண்டில் நிகழ்ந்த மிகப்பெரிய மனிதப்படுகொலை ஈழம்தான். அவர்களின் நியாயம் இன்னும் தீரவில்லை. அந்தப் போராட்டம் தோற்றிருக்கலாம், காரணங்கள் இன்னும் தோற்கவில்லை. அந்தப் போராட்டம் முடிந்திருக்கலாம் அல்லது முடிக்கப்பட்டிருக்கலாம் . அதற்கான கண்ணீர் இன்னும் காயவில்லை. அந்தக் கண்ணீரை, ரத்தத்தை, உள்ளிருக்கும் நியாயத்தை போர் முடிந்த பின்னும் தொடரும் அவலத்தை அந்த மனிதகுலத்துக்கான மீட்சியை என் படைப்புக்குள் கருவாக அமைத்து படைக்கவேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். அந்தப் பணி சாதாரணமானதல்ல. ஏதோ கற்பனைக் குதிரையை தட்டிவிட்டால் கவிதை வந்துவிழுந்துவிடும். ஒரு வெண்ணிலா இரவில் மாலை 7 மணிக்கு தொடங்கினால் அதிகாலை 5 மணிக்குள் என் படைப்பு முடிந

விழியும் விழியும் நெருங்கும் பொழுது..

'விழியும் விழியும் நெருங்கும் பொழுது' எனும் பாடலை மிகவும் பிடிக்கும். வித்தியாசாகரின்  இசையில் வரிகளுக்கு எப்போதும் முக்கியத்துவம் இருக்கும். அறிவுமதியின் வரிகள் இன்னும் பிடிக்கும். அதில் ஒரு வரிக்கு இப்படியொரு விளக்கம் பேஸ்புக்கில் படிச்சேன். \\\ ’விழியும் விழியும் நெருங்கும் பொழுது’ - சதுரங்கம் படப்பாடல். கவிஞர் அறிவுமதி எழுதியது. அதில் நாயகன் பாடும் ஒரு வரி: ‘இமையில் நிலவு நுழையும் பொழுது’ இரவு நேரத்தைத்தான் அப்படிக் குறிப்பிடுகிறார் என்று எண்ணினேன். ஒரு சந்தேகமும் வந்தது. “இது உறவின்போது பாடப்படும் பாடல். நாயகியின் கண்களில் நிலவு தெரிகிறதென்றால்.. வெளியிலா நடக்கிறது கலவி? அல்லது பால்கனியோ..” என்றெல்லாம் நினைத்தேன். ஆனால் கவிஞர் சொன்ன விளக்கம் கேட்டு அசந்துவிட்டேன். அதாவது.. கிறக்கத்தில் இருக்கும்போது, நாயகியின் கண் கருமணிகள் மேல் செல்வதால்.. கண்ணைப் பார்க்கும்போது நிலவைப் போலவே இருக்குமாம்! - Parisal Krishna Kumar \\