Skip to main content

Posts

அவனோடு சென்ற என் நெஞ்சே!

பாம்பே திரைப்படத்தில் இடம்பெற்ற, "உயிரே உயிரே" பாடலில், நாயகியின் மனமும் உடலும் நாயகனைத் தேடித் தேடி அலைவதும் உழல்வதுமாக இருப்பதுபோல் மணிரத்னம் காட்சியமைத்திருப்பார். சொல்லிவைத்து ஓவியம் தீட்டியதுபோல, இந்தப் பாடலின் காட்சி அழகுக்கும், சித்ராவின் ஜீவனுக்கும், ரஹ்மானின் இசையமைப்புக்குமிடையில் அத்துணை பொருத்தம். "நான் கரும்பாறை பல தாண்டி வேராக வந்தேன் கண்ணாளன் முகம் பார்க்கவே! என் கடுங்காவல் பல தாண்டி காற்றாக வந்தேன் கண்ணா உன் குரல் கேட்கவே! அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே!" எப்பொழுதும் நாயகனைத் தேடி ஓடும் அவள் மனதில் ஒரு சோகம். இதயத்தில்  கொஞ்சம் கனம். அது அவளுடைய அழகின் கனமாக இருக்கலாம். அல்லது அவளுடைய கட்டுப்பாடு மற்றும் கலாச்சாரத்தின் கனமாகவும் இருக்கலாம். ஆனால், அவளுடைய அழகின் கனத்தையும், அதிலொரு பகுதியான மாரழகின் கனத்தையும், தன் மனதின் கனத்தையும் அவள் தாங்கியபடி, அவனை, தன் தலைவனைத் தேடி ஓடும் அழகை உள்ளார நேசித்து அழகாய் எடுக்கவேண்டும் என்று மணிரத்னத்திற்கு எப்படித் தோன்றியிருக்கும் என்று தெரியவில்லை. அழகினைச் சுமப்பதில் துயரம் இருக்குமா? தலைவனைப் பிரிந்...

தமிழ்க் கனவு

அன்றொரு நாள் என் கனவில் உரையாடலின் பிறழ்வில் அவள் தன் சேலைத் தலைப்பினை தோள்களால் வாரிக்கொண்டு மார்பை மறைத்து மேனியால் சிரித்ததில் நெற்றி வரிகள் கொஞ்சம் நெறி தவறி அசைந்ததில் பிழம்புக் குங்குமங்கள் பூப்போல உதிர்ந்துவிட்டன. அங்ஙனமே வெள்ளைச் சேலை நதியாகி அலையடித்ததில் தென்றல் விளையாடித் தோற்றதில் அவள் பெண்ணழகு மட்டும் வெற்றிகொண்டு கிடந்த அழகினை நான் எப்படிச் சொல்லி மகிழ்வேன்!

தமிழ் மங்கை

என் மன வீட்டினுள்ளே, மருமமாய்ப் பெருகி வளரும் மழையிருட்டுக்கும், வெளிச்ச வாசலுக்குமிடையில், ஓரமாய்ச் சாய்ந்து நிற்கும் ஒருத்தியின் நிழல் உருவத்தைப் பிரதிஷ்டை செய்திருந்தேன். அது ஒரு ரெட்டைப் பின்னல் யுகம். அதிலொன்றை, மார்பெனும் வலது சமஸ்தானத்தில் இட்டுக்கொண்டு வினைகள் பல ஆற்றி நின்றாள். அவள் அழகெனும் அரியணை மேவும் ஆசையிருந்தாலும், விபரீதமாய் எதுவும் செய்ய ஓண்ணாமல், அவள் முலைமுகத்தெழுந்த மலரொளியை என் தமிழ் சென்று மொய்த்திருக்க ஆசை கொண்டேன். புகழுக்குக் கூசும் மங்கையல்லள். இருந்தும் என் தமிழ் புக்க புலனிழக்காளோ? மிகையடுத்துச் சொல்லவில்லை. ஏட்டில் அணியெடுத்து, எழில் மொழியை விளம்பி நான் புனையும் முன்னே, காற்று வந்து திருப்பிய பக்கமாய் என் கனவு கலைந்ததை என் சொல்வேன்.  

மார்கழி ஆடல்

அவள் மண் உறு வளம் எங்கும் ஊறும் பனிச் சிரிப்பினொடு பொன் உறு பூ மேனியை   புனை துகிலாடிப் பொருத்தினள் நனி விண்மீன் நிரை கிள்ளி நுனி வெள்ளி மாலை அள்ளி  சென்னிய மார்வம் சேரும்  அணி நகை பல திருத்தினள் அங்கே அவள்  கண் இரு பெருங் கயலாட  புனற் தாமரைத் தண்டாட தான் உண்டாடவொரு நறுமலரின்றி  வண்டு நின்றாடும் வகை ஒரு  நாட்டியம் எழுதினள்.

அவள் தமிழ் நிறத்தினாள்

காலைக் கருக்கலில்,  மங்கும் பனிமதியில்,  சோலைச் செருக்கில்,  வண்டு சுழன்று ஞிமிறும் ஞால ஒழுங்கில் எல்லாம்,  நாளும் உந்தன் பேரழகு புலருமடி விரியும் மலரில், தோயும் பனியில்,  தென்றல் அணவும் காரியத்தில்,  அமுதமாய் முத்தி விழும் மதுரம் அள்ளி  உன்னைத் தமிழால் மட்டும் தொழுதிருப்பேனோடி

கலாவல்

அவளொரு நல்ல வாசகி. ஒரு மாலை மையலில், ஆடையின் நூலிழை யாவும் பொன்னிழையாகும் நேரத்தில், தன் தேகப் போர்வை மீது ஒரு புத்தகம் வைத்துப் படித்திருந்தாள். அதன் உச்சந்தலையை மார்போடு மூடி அணைத்து, அதன் வகிடு முகந்து, அதன் மூலைத் தாளில் ஏறி முனை திருகப் பார்த்திருந்தாள். திருக மனம் வரவில்லை. இதுவரை கடந்திட்ட பக்கங்களின் கனம் அது தாளவில்லை. அப்படியே அமர்ந்திருந்தாள். கருக்கல் பொழுது வந்து கதிரவனைக் கவ்வ, பொன் ஆர்ந்த மார்பினைப் பூரண நிலவின் புழுக்கம் விழுந்து கவ்வ, பூ ஆர்ந்த கூந்தலைத் தென்றல் மோதிக் கவ்வ, அண்ணாந்து பார்த்தால் அநியாயச் சின்னமாய் மின்னும் மதன நட்சத்திரங்கள்...

அவனும் அவளும்

நாளும் புது விந்தையுடன், வேள் வேட்கையுடன், கவி வாஞ்சையுடனெல்லாம், அவள் திரட்டி வைத்திருந்த அந்த இரகசிய வெற்றிடங்களுக்கெல்லாம் அவன் தேவைப்பட்டான். சிலநேரங்களில் அவளுக்கு, அவனுடனான ஓர் உரையாடலை அள்ளி, மூலவேரில் ஓர் உற்சவம் நிகழ்த்தி, ஆதி இச்சையில் எழுந்த ஆசைத் தேரில் நிறுத்தி, உயிரின் உயிரிலெல்லாம் உழவேண்டும் என்றிருக்கும். மறுகணமே, வாழ்வை நல்ல திருமண நிறுவனமாகவும், காதல் நிறுவனமாகவும், பார்த்துக் கட்டிய தன் காலக் கோட்டைக்கெல்லாம், ஆயுட்காப்புறுதி இட்டு வாழும் இந்தக் காப்புறுதிப் பண்பாட்டுச் சமூகத்தின் முன்னால், வேறொருவனுடன் தன்னைப் பிணைத்துக்கொண்ட அவளுக்கு, அவன்  ஒன்றுமில்லாதவனாக காட்சியளித்தான்.  ஆதலால், அவனுடைய உயிரொன்றும் அவ்வளவு அவசியமில்லை என்கிற பாசாங்குத்தனத்தை அவளுக்குள்ளேயே வளர்த்து, அதில் தன் சுயமரியாதை, சுய இச்சை எல்லாவற்றையும் கட்டிக்காத்து வாழப் பழகினாள். இந்தக் கட்டிக்காப்புக்கும் அவசியத்துக்கும் இடையில் நடைபெறும் போராட்டத்தில் அவனை வெறும் உரையாடல் துணையாக வைத்திருக்க விரும்பினாள். ஓர் உயிரின் தனித்த தேவைக்கும் தேடலுக்கும் முன்னால்,...