Skip to main content

நிறம்

எங்கள் நிறுவனத்தில் வேறு பிரிவிற்கு புதிதாக மனேஜர் ஒருவர் வந்திருக்கிறார். வெளித்தோற்றத்திலேயே ஒரு நல்ல படிப்பாளிக்குரிய விபரங்கள் தெரிந்தது. அதிகமாகப் புத்தகங்கள் வாசிப்பவர் என்று அவருக்கு நெருங்கியவர்கள் சொன்னார்கள். நான் அடிக்கடி வாசித்துக்கொண்டிருப்பதை பார்க்கிறவர்கள் என்கிறபடியால் எனக்கென்று அந்தச் செய்தியை விசேஷமாகச் சொல்வதுபோலச் சொன்னார்கள்.
பொதுவான விடயங்களில் விவாதம் வரும்போது, தன்னைவிட உயர்நிலை அதிகாரிகளுக்கு புத்தகங்களிலிருந்து சில எடுத்துக்காட்டுகளைச் சொல்லி விளங்கப்படுத்துவார். இவர்களும் கைபேசியைத் தடவுவதை நிறுத்திவிட்டு அவர் சொல்வதை ஆர்வமாகக் கேட்டுக்கொண்டிருப்பார்கள். அவர் சொல்கிற விதமும் அப்படியிருக்கும். சிங்களவராக இருந்தபோதிலும் தமிழர்களே தெரிந்துவைத்திருக்க ஆர்வம் காட்டாத தமிழர் வரலாற்றின் நுணுக்கமான விபரங்களை மிகவும் தெளிவாகப் புரியவைப்பதைப் பார்த்திருக்கிறேன். அன்று சோழர்களின் இலங்கை வருகையைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். இருந்தாலும் அதெல்லாம் one-way communication தான். உரையாடல் நீட்சி அடைவதற்கு மற்றப் பக்கத்தில் இருபவருக்கும் கொஞ்சம் விஷயங்கள் தெரிந்திருக்கவேண்டுமே!
ஒருமுறை உணவின்பின்னர் அவரோடு உரையாடக் கிடைத்த நொடிகள் பிடித்திருந்தது. "இந்த பட்டர் பெகான் ஐஸ்கிரீம் என்கிற பெயரில் ஏதோ செய்திருக்கிறார்கள்" என்றேன். ஒருமுறை சிரித்தார். சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி " நீங்கள் புத்தகங்கள் படிப்பீங்களாமே!" என்றேன். இந்த இரண்டாவது கேள்விக்காக முதலாவதாக ஒரு மொக்கை ஜோக்கை வீணாக்கவேண்டியிருந்தது. அதிகம் பேசாதவர் என்பதால் கஷ்டப்படவேண்டியிருந்தது. முதலாவது கேள்வியே அவருக்குப் பிடித்திருக்கும். உடனேயே "இரண்டு புத்தகங்கள் எழுதியிருக்கிறேன்" என்றார்.
"சூப்பருங்க...நாவல் வகையா?"
"இல்லை மார்ஷல் ஆர்ட்ஸ் பற்றி எழுதுவேன். அதில் என்னவோ அதிக ஆர்வம்"
"சிங்களத்திலா ஆங்கிலத்திலா?"
"சிங்களத்தில்... ஆங்கிலத்தில் எழுதவேண்டும்... நீங்களும் வாசிப்பீங்க போல..." என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தோம். நிறைவில் மகிழ்ச்சியாய் இருந்தார். அந்த உரையாடல் மட்டும் one-way communication ஆக இல்லாமல் இருந்தது காரணமாக இருக்கலாம். சொல்லுகிற இடமும் சரியான இடமென்றால்தான் பகிர்தலின் முழு இன்பம் இருக்கும். ஒருவேளை அவருக்கு அது கிடைத்திருக்கலாம்.
வேலை விஷயத்தைத் தவிர பிறருடன் அதிகம் பேசமாட்டார். இப்படிப் பேசிக்கொள்கிறவர்கள் மற்ற மனிதர்களைப் பற்றிப் பேசிக்கொள்ளமாட்டார்கள். மனேஜ்மென்ட்டினை எதிர்த்து பெரிய விளக்கம் ஒன்று எழுத நேர்ந்தபோது, தானும் அதில் ஒருவர் என்பதை மறந்து தொழிலார்கள் பக்கம் நின்று எழுதிக்கொடுத்திருக்கிறார் என்று பலர் சொல்லியிருக்கிறார்கள். தாஸ்தாவெஸ்கி சொன்னமாதிரி அழகுதான் உலகைக் காக்கும். எது அழகு என்பதை அவரவர்தான் தீர்மானம் எடுத்துக்கொள்ளவேண்டும்.

Comments

Popular posts from this blog

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிட...

கங்குபாய் கத்தியவாடி

நாம் எதையெல்லாம் விரும்பிச் செய்கிறோமோ அதன் மீது மரியாதையும் ஒருவிதமான பிடிப்பும் நமக்கு இருக்கவேண்டும். அதில் காமம் மட்டும் விதிவிலக்கல்ல. காமம் தந்து , உடல் தந்து, தானும் மகிழ்ந்து இன்னோர் உயிரை மகிழ்விப்பவரும், காதல், அன்பு, உள்ளமெலாம் உருக்கி உடலாய்த் தந்து மகிழ்விப்பவரும், இரண்டையும் ஒன்றாய்த் தந்து மகிழ்விப்பவரும் மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் ஆணாய் இருந்தாலும், பெண்ணாயிருந்தாலும், மாற்றுப் பாலினத்தவராக இருந்தாலும் மதிக்கப்படவேண்டியவர்கள். இந்த மதிப்பானது, உள்ளப் புரிதலினாலும், மனிதத்தினாலும், தகுந்த புத்தியினாலும், பெற்றுக்கொண்ட விஸ்தாரமான அறிவினாலும், நடத்தையினாலும், வார்த்தையினாலும் உள்ளுக்குள்ளே நிகழும் மாற்றத்தினாலும் எழவேண்டும். கங்குபாய் என்கிற இந்தப் படம், விலைமாதர்களின் வாழ்வியலைப் பேசுகிறது. விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு பெறுமதிக்கு ஏற்றபடி ஒவ்வொரு தரத்தில் இருக்கிறார்கள். நன்கு படித்து வேலைபார்க்கும் விலைமாதர்களும் இருக்கிறார்கள். பகுதியாய் விலைமாதராக இருப்பவர்களும் இருக்கிறார்கள். இப்போதும் அப்போதும், விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருந்தா...

அடியே அடியே என்னை எங்க நீ கூட்டி போற!

கிறிஸ்தவ தேவாலயங்களிலும் அவை சார்ந்த சூழலிலும், கிஸ்தவப் பாடல்களும் இசையும் இசைக்கப்படுவதைச் சிலர் கேட்டிருப்பீர்கள். அப்படிப் இசைக்கப்படும் இசையை Gospel music எனலாம். Gospel என்றால் Good message. பைபிளிலிருந்து கதைகளையும், கதாப்பாத்திரங்களையும் கடவுளின் செய்திகள் என்று நினைத்துச் சொல்லப்படுகிற விடயங்களையும் எளிமையான இசையோடு இசைத்துப் பாடப்படுகிற பாடல்கள். வரிகளுக்கு முக்கியத்துவம் உள்ள பாடல்கள். பெரும்பாலும் நம்பிக்கையை விதைக்கிற செய்திகளைத் தாங்கிவரும் இந்தப் பாடல்களை மனதில் நிறையத் துன்பத்தோடு சென்று பாடுகிறவர்களுக்கு தேவாலயத்தில் ஒரு நிம்மதி கிடைக்கிறது. இந்த இசை துன்பத்தை வாங்கி நம்பிக்கையைத் தருகிறது. பலரும் கடவுள்தான் நம்பிக்கை தந்ததாக நினைத்துக்கொள்வார்கள். பிரச்சாரகர் அழைப்பு விடுக்க மற்றவர்கள் பதிலுரைத்து ஆமோதிப்பார்கள். ஒரு chorus இல் பலரும் பதிலுரைப்பார்கள். இதுதான் இசையின் வார்த்தைகளின் பலம். குறிப்பிட்ட மதங்களிடையே இசை தோன்றினாலும், அவற்றைச் சார்ந்திருந்தாலும், அது அந்தந்த மனிதர்களின் சமூகத்தின் அகவுணர்ச்சி மற்றும் அழகுணர்ச்சியின் வெளிப்பாடே என்பதனை நாம் புரிந்துகொள்ள...