Skip to main content

சில கணங்கள் : அகம்புறம்

ஒரு சில புத்தகங்களை, சுவாரசியமான துப்பறியும் கதையைப் படிப்பது போல  எடுத்த எடுப்பிலேயே படிச்சு மூடி வைச்சிட முடியாது. வாழ்க்கைல எல்லாத்தையுமா ரசிச்சுடுறோம்.நம்முடைய வேகம் அப்படி. அதே வேகத்தை இரசனையான பகிர்வுகளைக் கொண்ட புத்தகங்களின் பக்கங்கள் மேல் காட்ட முடியுறதில்லை. எதை எப்படி வாசிக்கவேண்டுமென ஒரு சில பக்கங்களை தாண்டிய பின் புத்தகங்களே நமக்குச் சொல்லிக்கொடுக்கும்.ஒரு சில புத்தகங்களை  ஒரு நாளைக்கு ஒரு சில பக்கங்கள் எனப் படிப்பது இன்பம். அப்படி ஒரு புத்தகம் தான் வண்ணதாசன் அவர்கள் எழுதிய அகம்புறம்.கடற்கரையோரமாக நடந்து போவதற்கும்,கடலை சலிக்காமல் நின்று பார்த்துக்கொண்டிருப்பதற்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது.சில கணங்கள் மெதுவாகவே நகர வேண்டும்.பக்கங்களும் அப்படித்தான்.இந்த 'மெதுவாக' என்பது போகப் போக இயல்பாகிவிடும்.வாழ்க்கையின் சில கணங்களை மெதுவாக்கிவிடும் இயல்பு இரசனைகளுக்கு உண்டு.குழந்தையைப் பார்க்கும் போது சட்டென்று விரிகிற புன்னகை மாதிரி.

புத்தகத்தை இன்னும் படித்துமுடிக்கவில்லை.இப்போதைக்கு முடிப்பதாகவும் உத்தேசம் இல்லை. அந்தப் புத்தகத்திலிருந்து இதுவரை பகிர்ந்துகொண்ட ஒரு சில பகுதிகளை கீழே தந்திருக்கிறேன்.

'வாழ்க்கை தொடர்ந்து விதிகளைப் பொய்யாக்கிக்கொண்டேதான் இருக்கிறது.இது இப்படித்தான் என்று முடிவுகட்ட முடியாதபடி,தன் காலடிச் சுவடுகளைத் தானே அழித்துக்கொண்டு அது நகர்கிற விதம்,யூகங்களுக்கு அப்பாற்பட்டது. அச்சடித்த புத்தக வரிகளின் மேல் சின்னஞ்சிறு பிள்ளையார் எறும்பு ஊர்வது போல எந்தத் தடங்கலும் இன்றி அது ஊர்ந்துகொண்டு இருக்கிறது.அடுத்த பக்கங்களின் வாசிப்பு அல்ல,ஊர்ந்துகொண்டே இருக்கும் அந்த உயிரின் அழகு முக்கியம் என்று நமக்குப் பிடிபட்டால் போதும்.' - வண்ணதாசன்


சினிமாக் கொட்டகைக்குள் இருக்கும்போது பெய்கிற மழை , ஒரு சாதாரண சினிமாவைக்கூட நல்ல சினிமாவா ஆக்கிவிடும் -#வண்ணதாசன்

நீர்த்தாரையை உள்ளங்கையில் ஏந்துவதற்கும் மழை தான் சொல்லிக்கொடுத்திருக்கும் - வண்ணதாசன் 

Comments

Popular posts from this blog

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிட...

கங்குபாய் கத்தியவாடி

நாம் எதையெல்லாம் விரும்பிச் செய்கிறோமோ அதன் மீது மரியாதையும் ஒருவிதமான பிடிப்பும் நமக்கு இருக்கவேண்டும். அதில் காமம் மட்டும் விதிவிலக்கல்ல. காமம் தந்து , உடல் தந்து, தானும் மகிழ்ந்து இன்னோர் உயிரை மகிழ்விப்பவரும், காதல், அன்பு, உள்ளமெலாம் உருக்கி உடலாய்த் தந்து மகிழ்விப்பவரும், இரண்டையும் ஒன்றாய்த் தந்து மகிழ்விப்பவரும் மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் ஆணாய் இருந்தாலும், பெண்ணாயிருந்தாலும், மாற்றுப் பாலினத்தவராக இருந்தாலும் மதிக்கப்படவேண்டியவர்கள். இந்த மதிப்பானது, உள்ளப் புரிதலினாலும், மனிதத்தினாலும், தகுந்த புத்தியினாலும், பெற்றுக்கொண்ட விஸ்தாரமான அறிவினாலும், நடத்தையினாலும், வார்த்தையினாலும் உள்ளுக்குள்ளே நிகழும் மாற்றத்தினாலும் எழவேண்டும். கங்குபாய் என்கிற இந்தப் படம், விலைமாதர்களின் வாழ்வியலைப் பேசுகிறது. விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு பெறுமதிக்கு ஏற்றபடி ஒவ்வொரு தரத்தில் இருக்கிறார்கள். நன்கு படித்து வேலைபார்க்கும் விலைமாதர்களும் இருக்கிறார்கள். பகுதியாய் விலைமாதராக இருப்பவர்களும் இருக்கிறார்கள். இப்போதும் அப்போதும், விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருந்தா...

அடியே அடியே என்னை எங்க நீ கூட்டி போற!

கிறிஸ்தவ தேவாலயங்களிலும் அவை சார்ந்த சூழலிலும், கிஸ்தவப் பாடல்களும் இசையும் இசைக்கப்படுவதைச் சிலர் கேட்டிருப்பீர்கள். அப்படிப் இசைக்கப்படும் இசையை Gospel music எனலாம். Gospel என்றால் Good message. பைபிளிலிருந்து கதைகளையும், கதாப்பாத்திரங்களையும் கடவுளின் செய்திகள் என்று நினைத்துச் சொல்லப்படுகிற விடயங்களையும் எளிமையான இசையோடு இசைத்துப் பாடப்படுகிற பாடல்கள். வரிகளுக்கு முக்கியத்துவம் உள்ள பாடல்கள். பெரும்பாலும் நம்பிக்கையை விதைக்கிற செய்திகளைத் தாங்கிவரும் இந்தப் பாடல்களை மனதில் நிறையத் துன்பத்தோடு சென்று பாடுகிறவர்களுக்கு தேவாலயத்தில் ஒரு நிம்மதி கிடைக்கிறது. இந்த இசை துன்பத்தை வாங்கி நம்பிக்கையைத் தருகிறது. பலரும் கடவுள்தான் நம்பிக்கை தந்ததாக நினைத்துக்கொள்வார்கள். பிரச்சாரகர் அழைப்பு விடுக்க மற்றவர்கள் பதிலுரைத்து ஆமோதிப்பார்கள். ஒரு chorus இல் பலரும் பதிலுரைப்பார்கள். இதுதான் இசையின் வார்த்தைகளின் பலம். குறிப்பிட்ட மதங்களிடையே இசை தோன்றினாலும், அவற்றைச் சார்ந்திருந்தாலும், அது அந்தந்த மனிதர்களின் சமூகத்தின் அகவுணர்ச்சி மற்றும் அழகுணர்ச்சியின் வெளிப்பாடே என்பதனை நாம் புரிந்துகொள்ள...