Skip to main content

டைம் டிரவல் ( கால பயணம் ) சாத்தியம்!!

டைம் டிரவல் ( கால பயணம் ) எனும் விடயம் எல்லோரும் தலையை பித்துக்கொள்ளும்  விடயம் பலருக்கும் இன்னும் தெளிவில்லை. பலருக்கு இன்னும் இப்படி ஒரு விடயம் இருப்பதே தெரியாது . இறைவன் காலத்தை கடந்தவன் என்று தான் கேள்விப்பட்டிருக்கிறோம் . எம்மாலும்  கடக்க முடியும்.

இறந்த காலத்துக்கு செல்ல முடிந்தால் நாம் இழந்தவற்றை செய்யலாம். பிரபலமானவர்களை பார்க்கலாம் .நாம் தவறவிட்ட யாருடன் வேண்டுமானாலும் கதைக்கலாம் . உதாரனத்திட்க்கு நியூட்டனை சந்திக்கலாம் , ராஜ ராஜ சோழனை சந்திக்கலாம். எதிர் காலத்துக்கு சென்று நம் உலகை கவனிக்கலாம்.


காலத்துக்கு விளக்கம் கேட்டால் ஒருவராலும் விளக்கம் கொடுக்க முடியாது . காலம் என்பது மிக மிக விளங்குவதற்கு கடினமான விடயம் . முடிந்தவரை முயற்ச்சிக்கிறேன் . நேரத்தை பார்க்கவும் முடியாது தொடவும் முடியாது . ஆனால் அதன் விளைவுகளை நாம் உணர முடியும் . எமக்கு வயதாகிறது , மரங்கள் வளருகின்றன போன்றவற்றின் மூலம் காலம் என்ற ஒன்று எம்முடன் நகருவதை நாம் உணரலாம் . நீங்கள் இப்போது மவுசை வைத்து கிளிக் செய்து கொண்டு இருக்கிறீர்கள் அந்த ஒவ்வொரு நொடியும் இமைக்கும் பொழுதில் கடக்கிறது . கடக்கும் நிமிடங்களை நிறுத்த முடியாது . ஆனால் அதை நாம் உணருகிறோம் . ஒவ்வொரு நொடியும் இறந்த காலத்திற்க்கு  செல்கிறோம் .

இன்னும் விரிவாக விளக்க வேண்டுமானால் , நாம் காரில் பயணிக்கும் போது நேர் பாதையில்(நீளம் ) பயணிக்கிறோம் , வளை பாதையில்(அகலம் ) பயணிக்கிறோம் . அதே ஒரு உயரமான மலை பாதையில் வளைந்து வளைந்து ஏறுகிறோம்( உயரம் + நீளம்+அகலம் ) . மூன்று பரிமாணங்கள் உண்டு . நான்காவது பரிமாணம் தான் நேரம். அதாவது நாம் பயணம் செய்யும் காரின் காலத்தை அளவிடலாம் (அதுவும் ஒரு அளவுகோல் தானே ) . அப்படியானால் கண்ணுக்கு தெரியாத மிக மிக குறுகியது தான் நேரம் . இன்னும் எவளவோ பரிமாணங்கள் இருக்கின்றன. 

அதாவது இரு நேரங்களுக்கு இடையில் ஒரு இடைவெளி இருக்கிறது . அவை இரண்டையும் தொடர்பு படுத்துகிறது தான் நேரம் . 

இறந்த காலத்துக்கு கொண்டு செல்லும் டைம்  டிரவல் இயந்திரம் மிகவும் சக்த்தியை உறிஞ்சும் இயந்திரமாக காணப்படும் . ஒவ்வொரு குகைக்குள்ளும் செல்வது போல அமைய வேண்டும் என்பது ஒரு ஊகம் . 


இது சாத்தியம் என்பது ஐங்ஸ்டெயின் ரிலேடிவிட்டி தியரி சொல்கிறது( E =MC ^2 ). அதாவது ஒளியின் வேகத்தில்(3 *10 ^8 ms) சென்றால் நாம் இறந்த காலத்துக்கோ நிகழ் காலத்துக்கோ செல்லலாம் என்பது அந்த தியரி . 

இயற்கையில் எதிர்காலத்துக்கும் இறந்த காலத்துக்கும் எம்மால் போக முடியுமா?
ஒரே பதில் வார்ம்ஹோலேஸ்(வார்ம்ஹோலஸ்) என்பது பவுதீகவியலாலரின் கருத்து .  

ஒவ்வொரு தேடல்களுக்கும் இயற்கையில் நாம் காணும் விடயங்களில் இருந்து விடை கிடைக்கும் . அதே போல நாம் காணும் சடப்பொருட்கள் . உதாரணமாக பூல் விளையாட்டு பார்த்திருப்பீர்கள் . பந்து மிகவும் வழுக்கும் தன்மை உடையது. விளையாடும் மேசையும் மிக மிக தட்டை. ஆனால் அதை மிக மிக தொழில்நுட்பம் பாவித்தால் அங்கு நிறைய துளைகள் காணப்படும். பந்திலும் நிறைய துளைகள் காணப்படும். இவ்வாறன துளைகள்  மூன்று பரிணாமங்களிலும் காணப்படுகிறது. 


ஆனால் இது நான்காவது பரிணாமமான நேரத்திலும் காணப்படுகிறது . அணுவை விட மிக மிக சிறிய  இடைவெளிகள் நேரத்திலும் காணப்படுகிறது .அளவிட மிக சிறியது . மிக மிக சிறிய இடைவெளிகள், விரைவான குறுக்கு பாதை , இரு வேறு நேரத்தையும்  இடத்தையும் அந்த இடைவெளிகள் இணைக்கின்றன . மில்லியன் ட்ரில்லியன் சென்டி மீட்டர் ஒரு சதுர குறுக்குவெட்டு பரப்புக்கு இருக்கலாம் . மனிதனால் போக முடியாதா அளவில் காணப்படுகிறது .     

டைம் டிரவல்  இயந்திரம் செய்ய வேண்டிய வேலை என்ன ?
 இந்த துளைகள் மனிதனால் செல்ல முடியாதவை . பவுதீக விஞ்ஞானிகள் முயற்ச்சி அந்த துளைகளில் ஒன்றை பெரிதாக்கினால் அதனுள் மனிதனை செலுத்தலாம் என்பதே. அதற்க்கான முயற்ச்சிகள் நடை பெற்றுக்கொண்டு இருக்கிறது . மனிதனை செலுத்த  முடியா விட்டாலும் செயற்க்கை கோளை விண் வெளியில் வைத்தே  இவ்வாறு டைம் இயந்திரம் மூலம் எதிர் காலத்திட்ட்க்கு கொண்டு செல்லலாம் .

Comments

அடுத்த பதிவு???
மிகவும் நல்ல பதிவு...ஒளியின் வேகத்தில் நாம் சென்றால் (எந்த திசை என்பதை விடுத்து) உலகம் சுற்றிக்கொண்டேயிருக்கும், ஆனால் எமக்கு வயது போகாது,எனவே நாம் எதிர்காலத்துக்கு போய் விடுவோம்! இது புரிகிறது..!ஆனால் இறந்த காலத்துக்கு எப்படி..? அது என்ன parallel universe Theory..? இணையத்தில் அது பற்றிய தமிழ் பதிவுகளை காணமுடியவில்லை.அதனடிப்படையில் இறந்தகாலத்துக்கும் செல்ல முடியுமாம்! வளாகம் வலைப்பூவில் பார்த்தேன்.அதனை பற்றியும் ஒரு பதிவு போடுங்களேன் ?
shunya prem said…
தமிழில் விஞ்ஞானம் சம்மந்தம்பட்ட செய்திகளை சிறப்பாக எழுதிகொண்டிருக்கிறீர்கள் வாழ்த்துங்கள்.
shunya prem said…
கடந்த காலத்துக்கு செல்வது என்பது கனவுகளில் மட்டும்தான் சாத்தியம்.

ஒளியின் வேகத்தை எது எட்டுகிறதோ அதுவும் ஒளியாகிவிடும். 3 *10 ^8 ms-இந்த வேகத்தை எது எட்டுகிறதோ அதை நாம் ஒளி என்று அழைக்கலாம்.
வேகம்தான் முக்கியம்.
ஒளி என்று நாம் அழைப்பது இந்த வேகத்தை எட்டும் ஒன்றைதான். ஒளி என்று ஒன்று கிடையாது அதற்கு என்று தனிப்பட்ட வேகம் எல்லாம் கிடையாது.உண்மையிலே அந்த குறிப்பிட்ட வேகத்தை எட்டும் ஒன்றைதான் நாம் ஒளி என்கிறோம்.
நல்ல பதிவு..இன்னும் விரிவாக எழுதுங்கள்.

Popular posts from this blog

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு க

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிடத்தில் சரியாக கொண்டு போய் சேர்க்கின்றனர் .  சிறகுகள் அமைப்பின்

கண்ணாளனே...!

சங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன். அகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது.  மலையும் மலை சார்ந்த இடத்திலும்  நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது.  இந்தப் பாடல் காதல் வயப்பட்ட  பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச்  சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.  "நெருநல் எல்லை யேனல் தோன்றித் திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள இ