Skip to main content

Iron dome : இஸ்ரேலின் இரும்புப் பாதுகாப்பு

ஏவுகணைகளுக்கு எதிராக Iron dome 


இஸ்ரேலின் தாக்குதலில், பாலஸ்தீனியர்கள் பலர் கொல்லப்பட்ட செய்திகளை எல்லாம் பார்த்திருப்போம். இதற்கு பதிலடியாக பாலஸ்தீனின் ஹமாஸ் ராணுவம் 1000-2000 வரையான ஏவுகணைகளை இஸ்ரேலிய குடியிருப்பு பகுதிகள் மீது ஏவியது. 

இதனைத் தொடர்ந்து, இஸ்ரேலிய மக்களின் குடியிருப்பு பகுதியில், நகரப் பகுதியில், எச்சரிக்கை மணி ஒலிக்க ஆரம்பித்தது. இஸ்ரேலிய மக்கள் சிலர்  வானவேடிக்கை பார்ப்பது போல வானத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்! ஹமாஸ் ஏவிய பெரும்பாலான ஏவுகணைகள் தரையைத் தொடாமல்  வானத்திலேயே வெடித்துக் கொண்டிருந்தது!  



இத்தனைக்கும், Iron dome எனப்படும் இஸ்ரேலின் இரும்புப் பாதுகாப்புக் கேடயம் தங்களைப் பாதுகாக்கிறது என்று மக்களுக்கு நம்பிக்கை. அதென்ன Iron dome! 

யூதர்களின் உழைப்பைப் போல, நாட்டுப் பற்றைப் போல, விவசாயம் முதல் போர் வரை தொழிநுட்பங்களுக்கும் பெயர் போனது யூதர்களின் இஸ்ரேல். வறண்ட நிலத்தில் விவசாயம் செய்கிறார்கள். கூகிள் முதலான நிறுவனங்களுக்கு மொபைல்  ஜிபிஎஸ் Navigation சிஸ்டங்களை பில்லியன் டாலர்களில் எல்லாம் விற்றிருக்கிறார்கள். சுற்றி இஸ்லாமிய நாடுகள் இருந்தும் தங்கள் பாதுகாப்பை அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் இணைந்து உறுதிப்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். இத்தனைக்கும் உலகெங்கும் சிதறி வாழ்ந்த யூதர்கள், மீண்டும்  ஓரிடத்தில் இணைந்து தங்களுக்கெனக் கட்டியமைத்த புதிய நாடு.   

இப்படித்தான் ஒருமுறை 2006 இல் லெபனானிலிருந்து ஹிஸ்புல்லா அமைப்பு ஏவிய ஏவுகணைகளால் இஸ்ரேலுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டது. உடனே, 2007 இலிருந்து, தங்கள் நகரத்தைப் பாதுகாக்க,  Iron dome இல் வேலைசெய்ய ஆரம்பித்தது இஸ்ரேல். எவ்வகையான பிரச்சனை என்றாலும் உடனே பாடம் கற்றுக்கொள்ளும் இஸ்ரேல், 2011 இல் Iron dome இனைக் கொண்டுவந்தது. இஸ்ரேலின் ராஃபேல் அட்வான்ஸ்ட் டிஃபன்ஸ் சிஸ்டம் இதைத் தயாரித்தது. இற்றை வரைக்கும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஏவுகணைகளை தாக்கி அழித்திருக்கிறது இந்த Iron dome. உலகிலேயே குறுகிய தூர ஏவுகணைகளைத் தாக்கி அழிக்கக்கூடிய சிறந்த சிஸ்டம் இது என்று சொல்கிறார்கள். 

Image Courtesy : Rafael Advanced Defense Systems Ltd


1. முதலில் ராடார் மூலம் ஏவுகணைகளைக் கண்டறிகிறது. 

2. அதன் பின்னர், இந்த ஏவுகணை எந்த இடத்தை இலக்குவைத்து வருகிறது என்று தனது அல்கோரிதங்களை வைத்து விரைவாக ஆராய்கிறது. குடியிருப்புப் பகுதிகளை நோக்கி வருகிறதா? முக்கியமான நிலையங்களை நோக்கி வருகிறதா என்று ஆராய்கிறது. முக்கியமில்லாத இடங்களுக்குச் செல்லும் ஏவுகணைகளைத் தவிர்த்துவிடுகிறது. தாக்கவேண்டிய ஏவுகணைகளை இலக்கு வைக்கிறது.

3. அதன் பின்னர், தாக்கப்படவேண்டிய ஏவுகணைகளை நோக்கி எதிர்ப்பு ஏவுகணைகளை ஏவுகிறது. 




இதன் பாதுகாப்பு மற்றும் வேலைசெய்யும் திறன் கிட்டத்தட்ட 80-90% வரை உறுதிப்படுத்தப்பட்டது. ஆனாலும் ஹமாஸ், இதன் பாதுகாப்புத்திறனை தொடர்ந்து பரிசோதித்துக்கொண்டுதான் இருக்கிறது. இதன் செயற்பாட்டுத் திறனிலிருக்கும் பிழையைக் கண்டுபிடிக்க ஹமாஸ் தொடர்ந்து 1000-2000 வரையிலான ஏவுகணைகளை ஏவிக்கொண்டுதான் இருக்கிறது. 

Comments

Popular posts from this blog

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு க

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிடத்தில் சரியாக கொண்டு போய் சேர்க்கின்றனர் .  சிறகுகள் அமைப்பின்

கண்ணாளனே...!

சங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன். அகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது.  மலையும் மலை சார்ந்த இடத்திலும்  நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது.  இந்தப் பாடல் காதல் வயப்பட்ட  பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச்  சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.  "நெருநல் எல்லை யேனல் தோன்றித் திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள இ