Skip to main content

மலரினும் மெல்லிது காமம் 05 - பயில்தல்

மானாடும் மலைப்பக்கம் ஏரிக்கரை அருகில் 
மயிலாடும் ஜன்னல் கொண்ட மாளிகையின் அறையில் 
கண்ணாடி பார்த்துக்கொண்டே கலை யாவும் பயின்றோம்.
கருநீலப் போர்வைக்குள்ளே இரு நாட்கள் இருந்தோம்.

வைரமுத்து 

கண்ணாடியின்  முன்நின்று (Katoptronophilia) காமத்தின் நுண்கலைகள் பயில்வது காதலைத் தூண்டும். அதேநேரம், அது உணர்வின் கவனத்தைத் திசை திருப்பாமல் இருப்பதும் முக்கியம். 


தனியே, கண்ணாடியில் எமது அழகைக் கடந்திருக்கிறோம். அப்படிக் கடக்கையில், ஒன்று அழகை மெச்சிக்கொள்வோம். இல்லையென்றால், தாழ்வுமனப்பான்மை தோன்றும். நம் அழகை நாமே  மெச்சிக்கொள்வதன் தீவிர நிலை நார்சிஸம். இப்படித் துணையாகக் கண்ணாடியில் பார்த்துக்கொள்வதையும் நார்சிஸம் என்று சிலர் சொல்வார்கள். ஆனால், காமத்தைச் சேர்ந்து கண்ணாடியில் பார்ப்பது ஒருவர் சம்பந்தப்பட்டது கிடையாது. எதுவுமே எல்லைக்குள் இருக்கும்வரை அழகு. கரை மீறாதவரை ஆழி அழகு. உள்ளக் காதலும் அப்படித்தான். எதிலும், நுண்கலை காண்பது காமத்துக்கு அழகு. புதுக் கலைகள் அழகு.



சிலருக்குத் தம் உடல் பற்றிய அதிருப்தி இருந்தால், அவர்கள் தங்கள் உடலைக் கண்ணாடியில் பார்ப்பதை விரும்பமாட்டார்கள். அதனால், துணைக்கும் ஆர்வம் இருந்தால் மட்டுமே இது நிகழவேண்டும். இல்லாவிட்டால், இது ஆர்வத்தைக் குறைத்து அதிருப்தியை ஏற்படுத்தும்.

கண்ணாடியில் பார்த்துக்கொள்வது மொத்தக் காதல் நிகழ்வில் சிலநொடி மட்டுமே நீள்வதாக இருப்பதும் நல்லது. இத்தனை காலக்  கற்பனையும் நிஜமும் சேர்ந்துகொள்ளும் இடம்.

சிலருக்குத் தன் அழகுமீது விருப்பம் இருக்கிறது. பின்னிருந்து கழுத்து வளைவில் அழுத்தி  எழுதும் முத்தத்தின் நீட்சியைப் பாராட்டி, சொருக எண்ணும் கண்களோடு, தன்னைக் கண்ணாடியில் பார்த்து இரசிப்பாள். உணர்வில் மிதக்கும் தன் இதழ் அசைவையும், அவன் சேவை அழகையும் ஒருசேர இரசிப்பாள். ஆடையற்ற உடலில் மயிலிறகு ஸ்பரிசங்கள் வரைவதை இரசிப்பாள். அவள் அழகு ஆராதிக்கப்படுவதையும் பாராட்டப்படுவதையும் இரசிப்பாள்.

இவை யாவும் அவள் இத்தனை காலம் மனக்கண்ணில் சேர்த்து வைத்த கனவுகள். மனக்கண்ணில் நிறைவுறாத காட்சிகளுக்குக் கண்ணாடி உயிர் கொடுக்கும். என்றோ ஒரு தனியறையில், தான் மனதில் கண்டு  திளைத்த  காட்சியை, நினைவு நனைந்ததைக் கண்ணாடியில்  இரசிக்கிறாள். அவள் உணர்வுகளையும் அவன் கண்ணாடியில் பார்க்கிறான். அவன் செயல்களையும் கண்ணாடியில் பார்க்கிறான். இருவர் உணர்வையும்  ஒரு சட்டகத்துக்குள் காட்சி ஊடகத்துக்குள் அழைக்கிறது கண்ணாடி. இத்தனை காலமும் காட்சி ஊடகங்களில் ஏங்கிய காட்சியைக் கண்ணாடி ஒரு ஊடகமாகிக் காட்டுகிறது. பிழைகளைக் காட்டுகிறது. பயில்வோம் என அழைக்கிறது.

மணிரத்னத்தின், 'ஓக்கே கண்மணி', 'காற்று வெளியிடை' என்று கண்ணாடி பார்த்துக் காதல் பயிலும் காட்சிகள் அதிகம். "கள்வரே" பாடலில் நடனத்தைக் கொண்டே உயர் நிலையைக் கலையாகக் காட்டியிருப்பார். கொஞ்சம் தீவிரமும் மென்மையும் கலந்த காமம். "கள்வரே" பாடலில் வீடு முழுவதும் கண்ணாடி இருக்கும். கூடுதலாக ஆர்வமிருப்பவர்கள் வீட்டின் கட்டிலின் மேலேயும்  கண்ணாடி அமைப்பது உண்டு. இவற்றைத் திரையில் கலையாகக் காட்சிப்படுத்துவது என்பது இன்னொரு கலை.

Comments

Anonymous said…
The mirror magic! Do you have any hidden cameras in my home or what??

Popular posts from this blog

குறுந்தொகைக் காதல்!

ஒரு மழைநாளில் குறுந்தொகைப் பாடலை வாசிப்பதுபோல சுகானுபவம் கிடையாது. அதிலும் ஒரு ஈரமான குறுந்தொகைப் பாட்டு அமைந்துவிடுவது வரம். இந்தப் பாடலைப் படிக்கும்போதே,  பிச்சியின் வாசத்தை ஈரக்காற்று சுமந்துவருகிறதென்றால், இதை எழுதியவருக்கும் தமிழுக்கும் வெற்றி என்று கொள்ளுங்கள். மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை  இரும்பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து  பெரும்பெயல் விடியல் விரித்துவிட் டன்ன  நறுந்தண் ணியளே நன்மா மேனி  மழைக்காலத்துல மலருற பிச்சியின் நீர் ஒழுகுகிற மொட்டுகள் எல்லாத்தையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு பனங்குடைல மூடி வைச்சுட்டு, அதை ஒரு அடைமழை பெய்கிற விடியற்காலைல திறந்துவிட்டதுபோல நன்மணமும் குளிர்ச்சியும் உடைய மேனி கொண்டவள் அவள். அவளை எப்பிடி நான் பிரிஞ்சிருப்பேன் . அவளைப் பிரிந்தா ல் என்னால் உயிர் வாழமுடியாது. 'சின்னப் பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம்' என்கிற வைரமுத்து வரிகள்போல கவலைகொள்கிறான் தலைவன். ஆனால் இதிலே வாசம்தான் அவனை வாட்டுகிறது. இதில் 'நறுந்தண்ணியள்‬' என்பது ஈர்ப்புள்ள சொல். காதலனின் மென்மையான அன...

அடியே அடியே என்னை எங்க நீ கூட்டி போற!

கிறிஸ்தவ தேவாலயங்களிலும் அவை சார்ந்த சூழலிலும், கிஸ்தவப் பாடல்களும் இசையும் இசைக்கப்படுவதைச் சிலர் கேட்டிருப்பீர்கள். அப்படிப் இசைக்கப்படும் இசையை Gospel music எனலாம். Gospel என்றால் Good message. பைபிளிலிருந்து கதைகளையும், கதாப்பாத்திரங்களையும் கடவுளின் செய்திகள் என்று நினைத்துச் சொல்லப்படுகிற விடயங்களையும் எளிமையான இசையோடு இசைத்துப் பாடப்படுகிற பாடல்கள். வரிகளுக்கு முக்கியத்துவம் உள்ள பாடல்கள். பெரும்பாலும் நம்பிக்கையை விதைக்கிற செய்திகளைத் தாங்கிவரும் இந்தப் பாடல்களை மனதில் நிறையத் துன்பத்தோடு சென்று பாடுகிறவர்களுக்கு தேவாலயத்தில் ஒரு நிம்மதி கிடைக்கிறது. இந்த இசை துன்பத்தை வாங்கி நம்பிக்கையைத் தருகிறது. பலரும் கடவுள்தான் நம்பிக்கை தந்ததாக நினைத்துக்கொள்வார்கள். பிரச்சாரகர் அழைப்பு விடுக்க மற்றவர்கள் பதிலுரைத்து ஆமோதிப்பார்கள். ஒரு chorus இல் பலரும் பதிலுரைப்பார்கள். இதுதான் இசையின் வார்த்தைகளின் பலம். குறிப்பிட்ட மதங்களிடையே இசை தோன்றினாலும், அவற்றைச் சார்ந்திருந்தாலும், அது அந்தந்த மனிதர்களின் சமூகத்தின் அகவுணர்ச்சி மற்றும் அழகுணர்ச்சியின் வெளிப்பாடே என்பதனை நாம் புரிந்துகொள்ள...

கங்குபாய் கத்தியவாடி

நாம் எதையெல்லாம் விரும்பிச் செய்கிறோமோ அதன் மீது மரியாதையும் ஒருவிதமான பிடிப்பும் நமக்கு இருக்கவேண்டும். அதில் காமம் மட்டும் விதிவிலக்கல்ல. காமம் தந்து , உடல் தந்து, தானும் மகிழ்ந்து இன்னோர் உயிரை மகிழ்விப்பவரும், காதல், அன்பு, உள்ளமெலாம் உருக்கி உடலாய்த் தந்து மகிழ்விப்பவரும், இரண்டையும் ஒன்றாய்த் தந்து மகிழ்விப்பவரும் மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் ஆணாய் இருந்தாலும், பெண்ணாயிருந்தாலும், மாற்றுப் பாலினத்தவராக இருந்தாலும் மதிக்கப்படவேண்டியவர்கள். இந்த மதிப்பானது, உள்ளப் புரிதலினாலும், மனிதத்தினாலும், தகுந்த புத்தியினாலும், பெற்றுக்கொண்ட விஸ்தாரமான அறிவினாலும், நடத்தையினாலும், வார்த்தையினாலும் உள்ளுக்குள்ளே நிகழும் மாற்றத்தினாலும் எழவேண்டும். கங்குபாய் என்கிற இந்தப் படம், விலைமாதர்களின் வாழ்வியலைப் பேசுகிறது. விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு பெறுமதிக்கு ஏற்றபடி ஒவ்வொரு தரத்தில் இருக்கிறார்கள். நன்கு படித்து வேலைபார்க்கும் விலைமாதர்களும் இருக்கிறார்கள். பகுதியாய் விலைமாதராக இருப்பவர்களும் இருக்கிறார்கள். இப்போதும் அப்போதும், விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருந்தா...