Skip to main content

வைரமுத்து : அடுத்த படைப்பு

தந்தி டிவியில் ஒளிபரப்பாகிய வைரமுத்துவுடனான நேர்காணல் நிகழ்ச்சியில், தனது அடுத்த படைப்பைப் பற்றி அவர் கூறிய செய்தி கொஞ்சம் மகிழ்வைத் தந்தது. அடுத்த படைப்பு எப்போது வெளியாகும்!


"என்னுடைய அடுத்த படைப்பு 'ஈழத்தமிழ்' என்று முடிவு செய்திருக்கிறேன். ஈழம் தான் என்னுடைய அடுத்த படைப்புக்கான களம். அதுதான் என் நெஞ்சிலும் மூளையிலும் கனத்துக்கொண்டிருக்கிறது. இந்த நூற்றாண்டில் நிகழ்ந்த மிகப்பெரிய மனிதப்படுகொலை ஈழம்தான். அவர்களின் நியாயம் இன்னும் தீரவில்லை. அந்தப் போராட்டம் தோற்றிருக்கலாம், காரணங்கள் இன்னும் தோற்கவில்லை. அந்தப் போராட்டம் முடிந்திருக்கலாம் அல்லது முடிக்கப்பட்டிருக்கலாம். அதற்கான கண்ணீர் இன்னும் காயவில்லை. அந்தக் கண்ணீரை, ரத்தத்தை, உள்ளிருக்கும் நியாயத்தை போர் முடிந்த பின்னும் தொடரும் அவலத்தை அந்த மனிதகுலத்துக்கான மீட்சியை என் படைப்புக்குள் கருவாக அமைத்து படைக்கவேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். அந்தப் பணி சாதாரணமானதல்ல. ஏதோ கற்பனைக் குதிரையை தட்டிவிட்டால் கவிதை வந்துவிழுந்துவிடும். ஒரு வெண்ணிலா இரவில் மாலை 7 மணிக்கு தொடங்கினால் அதிகாலை 5 மணிக்குள் என் படைப்பு முடிந்துவிடும் என்றெல்லாம் நான் சொல்லிவிடமாட்டேன். இதற்கு குயில் சத்தங்கள் வேண்டாம். தோட்டாக்களின் சத்தங்கள் என் காதுகளில் கேட்டிருக்கவேண்டும். இதற்கு கண்ணீரையும் இரத்தத்தையும் நான் உணர்ந்திக்க வேண்டும். அந்த முள்ளிவாயக்காலில் சென்று நான் நடந்து பழகவேண்டும். அந்த ஈரக்காற்று, திறந்த வானம், மக்களின் அவலம் அங்கு நிகழ்ந்த சோகங்களில் தடம் தடையம் எல்லாம் சேகரித்து ஏற்கனவே உள்ளிருக்கும் வலியை, நான் ரணத்தை ஆற்றிக்கொள்ளகூடிய காரணங்களை அறிந்துகொண்டுதான் அந்தப் படைப்பை நான் படைக்க வேண்டும். அதற்கு கொஞ்சம் கால அவகாசம் வேண்டும். அதற்கான பணியை தொடங்கிவிட்டேன்."

- வைரமுத்து(தந்தி டிவி பேட்டியில்)

Comments

Popular posts from this blog

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிட...

கங்குபாய் கத்தியவாடி

நாம் எதையெல்லாம் விரும்பிச் செய்கிறோமோ அதன் மீது மரியாதையும் ஒருவிதமான பிடிப்பும் நமக்கு இருக்கவேண்டும். அதில் காமம் மட்டும் விதிவிலக்கல்ல. காமம் தந்து , உடல் தந்து, தானும் மகிழ்ந்து இன்னோர் உயிரை மகிழ்விப்பவரும், காதல், அன்பு, உள்ளமெலாம் உருக்கி உடலாய்த் தந்து மகிழ்விப்பவரும், இரண்டையும் ஒன்றாய்த் தந்து மகிழ்விப்பவரும் மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் ஆணாய் இருந்தாலும், பெண்ணாயிருந்தாலும், மாற்றுப் பாலினத்தவராக இருந்தாலும் மதிக்கப்படவேண்டியவர்கள். இந்த மதிப்பானது, உள்ளப் புரிதலினாலும், மனிதத்தினாலும், தகுந்த புத்தியினாலும், பெற்றுக்கொண்ட விஸ்தாரமான அறிவினாலும், நடத்தையினாலும், வார்த்தையினாலும் உள்ளுக்குள்ளே நிகழும் மாற்றத்தினாலும் எழவேண்டும். கங்குபாய் என்கிற இந்தப் படம், விலைமாதர்களின் வாழ்வியலைப் பேசுகிறது. விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு பெறுமதிக்கு ஏற்றபடி ஒவ்வொரு தரத்தில் இருக்கிறார்கள். நன்கு படித்து வேலைபார்க்கும் விலைமாதர்களும் இருக்கிறார்கள். பகுதியாய் விலைமாதராக இருப்பவர்களும் இருக்கிறார்கள். இப்போதும் அப்போதும், விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருந்தா...

அடியே அடியே என்னை எங்க நீ கூட்டி போற!

கிறிஸ்தவ தேவாலயங்களிலும் அவை சார்ந்த சூழலிலும், கிஸ்தவப் பாடல்களும் இசையும் இசைக்கப்படுவதைச் சிலர் கேட்டிருப்பீர்கள். அப்படிப் இசைக்கப்படும் இசையை Gospel music எனலாம். Gospel என்றால் Good message. பைபிளிலிருந்து கதைகளையும், கதாப்பாத்திரங்களையும் கடவுளின் செய்திகள் என்று நினைத்துச் சொல்லப்படுகிற விடயங்களையும் எளிமையான இசையோடு இசைத்துப் பாடப்படுகிற பாடல்கள். வரிகளுக்கு முக்கியத்துவம் உள்ள பாடல்கள். பெரும்பாலும் நம்பிக்கையை விதைக்கிற செய்திகளைத் தாங்கிவரும் இந்தப் பாடல்களை மனதில் நிறையத் துன்பத்தோடு சென்று பாடுகிறவர்களுக்கு தேவாலயத்தில் ஒரு நிம்மதி கிடைக்கிறது. இந்த இசை துன்பத்தை வாங்கி நம்பிக்கையைத் தருகிறது. பலரும் கடவுள்தான் நம்பிக்கை தந்ததாக நினைத்துக்கொள்வார்கள். பிரச்சாரகர் அழைப்பு விடுக்க மற்றவர்கள் பதிலுரைத்து ஆமோதிப்பார்கள். ஒரு chorus இல் பலரும் பதிலுரைப்பார்கள். இதுதான் இசையின் வார்த்தைகளின் பலம். குறிப்பிட்ட மதங்களிடையே இசை தோன்றினாலும், அவற்றைச் சார்ந்திருந்தாலும், அது அந்தந்த மனிதர்களின் சமூகத்தின் அகவுணர்ச்சி மற்றும் அழகுணர்ச்சியின் வெளிப்பாடே என்பதனை நாம் புரிந்துகொள்ள...