Skip to main content

அறிந்துகொண்டவற்றில் பகிர்ந்துகொண்டவை ! தொகுப்பு (14/04 - 22/04 )

சென்ற வாரம்(15/04 - 22/04) பேஸ்புக்கிலும் டுவிட்டேரிலும் பகிர்ந்த சில முக்கிய தகவல்களை இதில் தொகுத்துள்ளேன் .

என் பகிர்வுகளை தவற விடுபவர்கள் வாராவாரம் இந்த வலைப்பதிவில் வந்து பார்க்கலாம் .

========================================================================
எழுத்தாளர் சுஜாதா அவர்களுடன் கோபிநாத் அவர்கள் மேற்கொண்ட அரிய கலந்துரையாடல் இது .

தனக்கு எழுத்தின் மீது எப்படி ஆர்வம் உண்டானது என்பது பற்றியும் , தன் படைப்புகள் பற்றியும் ஆரம்பம் பற்றியும் மனம் திறக்கிறார் சுஜாதா அவர்கள் .




========================================================================

தில் படத்தில் ஒரு பாடலில் " ஹிட்லர் காலத்தில் அந்த சாலி சாப்ளின் தில் " என்று ஒரு வரி வரும் . அந்த கவிஞர் என்ன சொல்ல வருகிறார் என அறிய கீழே உள்ள தகவலை வாசியுங்க .


சார்லி சாப்ளினை அனைவருக்கும் நகைச்சுவையாளனாக தான் அறிந்திருப்பீர்கள் . ஆனால் அவரின் சிந்தனைகள் உயரியவை . உலகை மாற்றும் ,சமாதானத்தை கொண்டுவருவதற்காக தயாரிக்கும் வீடியோக்கள் அனைத்திலும் சாப்ளினின் இந்த வார்த்தைகள் இல்லாமல் வருவதை கவனித்ததில்லை .

ஹிட்லர் தனது சர்வாதிகாரத்தை நிறுவிக்கொண்டிருந்த காலகட்டத்தில் சார்லி சாப்ளின் ஹிட்லேரை விமர்சித்து "The Great Dictator " எனும் திரைப்படத்தை எடுத்தார் . ஆனால் இவை இப்போதும் உயிர்ப்புடன் இருக்கும் வசனங்கள் . ஏழு நிமிட வீடியோ இது .





========================================================================
சென்ற வாரம் முக்கியமான நிகழ்வாக இந்திய /உலக அரங்கில் பேசப்பட்டது அக்னி ஏவுகணை V பற்றியே .

அக்னி II 2000 கிலோ மீடேர்களில் உள்ள இலக்கை தாக்க கூடியது . அக்னி III 3500 , அக்னி V 5000 கிலோமீடர்களை தாண்டக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது . ஆனால் சீனாவோ இது ஐரோப்பா வரை சென்று தாக்கும் வல்லமை படைத்தது .8000 கிலோ மீட்டர்கள் வரை செல்லும் என கூறியது .

அக்னி ஏவுகணையை உருவாக்க முக்கிய பங்காற்றியவர் டெஸ்ஸி தாமஸ் என்கிற பெண்மணி என்பது குறிப்பிடத்தக்க விடயம் . [மேலதிக தகவல்களுக்கு : BBC ]






========================================================================


இசை / ரகுமான் பிரியர்களுக்கான பகிர்வாக இது அமைந்தது . வழக்கம் போல இசை தேடலை  மேற்கொள்ளும் போது அகப்பட்டது . 


ரோஜா முதல் எந்திரன் வரை 350 பாடல்களில் இருந்து இசை தொகுப்புகளாக . 80 நிமிடங்கள் நீள்கிறது இந்த தொகுப்பு . 






========================================================================

ஒரு மொழியின் முக்கியத்துவத்தை சொல்லும் மிக முக்கியமான நிகழ்வு இது . இதனை செல்லினம் அறிமுகப்படுத்திய முத்துநெடுமாறன் அவர்கள் ஒரு செவ்வியில் பகிர்ந்திருந்தார். செல்பேசிகளில் தமிழ் குறுஞ்செய்திகளை அனுப்பும் மென்பொருள் தான் செல்லினம் .

செல்லினத்தை 2005 ஆம் ஆண்டு பொதுப்பயனீட்டுக்காக வெளியிட்ட நாளுக்கு மறுநாள் பலர் செல்லினத்தை நேரடியாகத் தரவிறக்கும் சிக்கல் ஏற்பட்டது. அதில் ஒருவரை நேரடியாகச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. 

அவர் காண்ட்ராக்ட் தொழிலாளியாக இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு வந்து வேலை செய்துகொண்டிருந்தார். அவர் என்னிடம் வந்து தன்னுடைய Samsung போனைக் கொடுத்து இதில் தமிழ் போட்டுக்கொடுங்க எனக்கு ரொம்ப அவசியமாத் தேவைப்படுது நான் வந்து வீட்டுக்கு அடிக்கடி தொடர்பு கொள்ளணும்னு.

நான் உடனே “இப்பதான் நீங்க போனில் அழைப்பதற்கான வாய்ப்புக்கள் சுலபமாக இருக்கே காலேல ஒருதடவை போன் பண்ணிக்கலாம், சாயந்திரம் இன்னொரு வாட்டி அழைக்கலாம் இப்படி உங்க மனைவி கிட்ட ஒவ்வொரு நாளும் பேசலாமே இப்படி இருக்கையில் இந்த செல்லினத்தை ஏன் முக்கியமாகக் கருதுறீங்க என்று நான் கேட்ட போது அவர் சொன்னார்.


“என் மனைவிக்குப் பேச வராதுங்க”

கண்கலங்கிப் போய்விட்டேன். பல பொதுமேடைகளில் எனக்கு அங்கீகாரம் எனக்குக் கிடைத்திருக்கின்றது ஆனால் இவருடைய சந்திப்பு மறக்கமுடியாதது. என்றார் முத்து நெடுமாறன்


பகிர்வுகள் தொடரும் .........






Comments

பாலா said…
பகிர்வுகள் அருமை. சார்லிசாப்ளினின் அந்த படம் கிட்டத்தட்ட 23ஆம் புலிகேசியை ஒத்திருக்கும். ஹிட்லரியும், முசோலினியையும் செமையாக கலாய்த்திருப்பார்.
Dhamodharan.p said…
ரொம்ப நல்லா இருக்கு நண்பா .... இந்த முயற்சிகள் தொடரட்டும்......
Dhamodharan.p said…
ரொம்ப நல்லா இருக்கு நண்பா .... இந்த முயற்சிகள் தொடரட்டும்......
பாலா said...

//பகிர்வுகள் அருமை. சார்லிசாப்ளினின் அந்த படம் கிட்டத்தட்ட 23ஆம் புலிகேசியை ஒத்திருக்கும். ஹிட்லரியும், முசோலினியையும் செமையாக கலாய்த்திருப்பார். ///

நன்றி பாலா :-)
Dhamodharan.p said.

//ரொம்ப நல்லா இருக்கு நண்பா .... இந்த முயற்சிகள் தொடரட்டும்...... /// ]

மிக்க நன்றி தாமோதரன் . நிச்சயம் உங்கள் விருப்பப்படி தொடரும் :)

Popular posts from this blog

குறுந்தொகைக் காதல்!

ஒரு மழைநாளில் குறுந்தொகைப் பாடலை வாசிப்பதுபோல சுகானுபவம் கிடையாது. அதிலும் ஒரு ஈரமான குறுந்தொகைப் பாட்டு அமைந்துவிடுவது வரம். இந்தப் பாடலைப் படிக்கும்போதே,  பிச்சியின் வாசத்தை ஈரக்காற்று சுமந்துவருகிறதென்றால், இதை எழுதியவருக்கும் தமிழுக்கும் வெற்றி என்று கொள்ளுங்கள். மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை  இரும்பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து  பெரும்பெயல் விடியல் விரித்துவிட் டன்ன  நறுந்தண் ணியளே நன்மா மேனி  மழைக்காலத்துல மலருற பிச்சியின் நீர் ஒழுகுகிற மொட்டுகள் எல்லாத்தையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு பனங்குடைல மூடி வைச்சுட்டு, அதை ஒரு அடைமழை பெய்கிற விடியற்காலைல திறந்துவிட்டதுபோல நன்மணமும் குளிர்ச்சியும் உடைய மேனி கொண்டவள் அவள். அவளை எப்பிடி நான் பிரிஞ்சிருப்பேன் . அவளைப் பிரிந்தா ல் என்னால் உயிர் வாழமுடியாது. 'சின்னப் பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம்' என்கிற வைரமுத்து வரிகள்போல கவலைகொள்கிறான் தலைவன். ஆனால் இதிலே வாசம்தான் அவனை வாட்டுகிறது. இதில் 'நறுந்தண்ணியள்‬' என்பது ஈர்ப்புள்ள சொல். காதலனின் மென்மையான அன...

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிட...

வைரமுத்து : தேடல் உதிர்த்த வரிகள்

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பிறந்தநாள் இன்று. கவிஞனுக்குக் கவிதை எழுதி வாழ்த்துவதா !  நினைச்சுப் பார்க்க  முடியவில்லை .அதனால் இந்தப் பதிவு.  வரிகளை / இசையோடு சேர்ந்துகொள்ளும் தமிழ்ச் சொற்களின்  அழகை   இரசிக்கும்  பெரும்பாலானோர்களிடம் போய் எந்த வரிகள் அதிகம் பிடிக்கும் எனக் கேட்டால், உடனே ' நறுமுகையே நறுமுகையே' என்று பதில் வரும். விதிவிலக்காக யாராவது இருந்தால் மன்னிக்க :) . அந்தளவுக்கு இலக்கியப் பாடல் வரிகளையும் சினிமாப் பாடல்களில் தைரியமாகப் புகுத்தி இரசிக்க  வைத்தவர்.  'தீண்டாய் மெய் தீண்டாய்' பாடல் தொடங்கி  'நறும்பூக்கள் தேடும் திருத் தும்பியே' வரை சில பாடல்களை சங்கத் தமிழ் கலந்து எழுதினார். காதலன் படத்தில் சில நிமிடங்கள் வரும் பாடலில் குற்றாலக் குறவஞ்சியையும், தீண்டாய் மெய் தீண்டாய் பாடலின் ஆரம்பத்தில்  குறுந்தொகையையும் அப்படியே பயன்படுத்தியிருப்பார். வரவிருக்கும்  கோச்சடையானில் கூட  இலக்கியத் தமிழில்  பாடல் எழுதுவதாகப் பகிர்ந்திருந்தார். இலக்கியத்தையும் அவர் பயன்படுத்திய உவமைகளையும் விட்டுவிட்டு கொஞ்சம் விஞ்...