Skip to main content

எது செய்ததாலும் பிழைக்குதா? - விதி இல்லை- முர்பியின் விதி

ஒரு உதாரணத்தோடு தொடங்கலாம் ....

நீங்கள் ஒரு தெருவில் வாகனத்தில் ஒரு வரிசையில் காத்திருக்கும் போது அருகில் இருக்கும் வரிசையில் வாகனங்கள்  நகரும் . அருகில் இருக்கும் வரிசைக்கு மாறினால் அந்த வரிசை நின்றி விடும் . ஏனைய வரிசைகள் யாவும் வாகனங்கள்  அசையும் .

இன்னொரு உதாரணம் சொல்லலாம் . யாருக்காவது கால் பண்ணலாம் எண்டு பார்த்தா அந்த நேரம்பார்த்து பண மீதி போதாததா இருக்கும் . இல்லாவிட்டால் பட்டெரி தீர்ந்து  விடும் .

முர்பியின் விதி இதை தான் சொல்க்கிறது .ஒருவிடயம் பிழையாக செல்ல வேண்டுமானால் பிழையாகவே செல்லும் . மொழி நடையில் சொன்னால் , சுதப்பினால் தொடர்ந்து சுதப்புவது பற்றி தான் அந்த விதி சொல்கிறது . இது அனைவருக்கும் நடந்திருக்கும் .

உண்மையில்  மூர்பியின் விதி முன்னரே பிரபல்யம் அடையவில்லை . முர்பி எனும் அமெரிக்கா விமான படை அதிகாரி ஒருவர் இருந்தார்(இறந்த வருடம் 1990 ) .


அவர் விமான பாதுகாப்பு பற்றி ஆராய்ச்சி மேட்க்கொள்ளும் போது  விமான விபத்தில் மனிதர்களின் நிலையை அறியும் பரிசோதனையும்  நடை பெற்றது .  அதற்ட்க்கு ஒரு மனிதர் தேவைப்பட்டார் . அதற்க்கு முர்பியையே தெரிவு செய்தனர் . அந்த பரிசோதனையை செய்ய முன்னர் பல கருவிகள் நிலையை அளவிட பொருத்தப்பட்டிருந்தன . பரிசோதனை  நிகழ்ந்த போது முதல் சந்தர்ப்பத்தில் பதிவுகள் மேட்க்கொள்ளப்படவில்லை . பூச்சிய வாசிப்பையே காட்டியது . அதற்க்கான காரணத்தை கண்டறிந்தார் முர்பி .

இரண்டு வயர்களையும் மாற்றி பொருத்தியதால் இந்த விளைவு ஏற்ப்பட்டது . அப்போது முர்பி  கூறியது ." ஒரு வேலை செய்வதற்கு இரண்டு வழிகள் இருந்தால்  ,ஏதாவது ஒரு வழி தவறாக இருக்கும் , அதே வழியில்  தான் நாம் செய்வோம்  ". இந்த கூற்றை பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தளபதி ஒருவர் இவ்வாறு கூறினார் .  பிழையாக செல்வது நிச்சயம் பிழையாகியே தீரும் . 


இதன் பின்னரே  முர்பியின் விதிக்கு வரவேற்ப்பு கிடைத்தது . 


கூடுதலாக நிகழ்தகவு அடிப்படையில் இந்த நிகழ்வுகள் நடந்தாலும் பெரும்பாலும் சிலசான்றுகள் பல விதிகளுடன் ஒன்றிணைந்து  நிற்கின்றன  . நாம் அனைவரும்  அன்றாட வாழ்வில் உணர்ந்திருப்போம் இதை .

மறக்காமல் ஓட்டை போடுங்கள் . தகவல் அனைவரையும் சென்றடையட்டும் . 

Comments

ஃஃஃ...நீங்கள் ஒரு தெருவில் வாகனத்தில் ஒரு வரிசையில் காத்திருக்கும் போது அருகில் இருக்கும் வரிசையில் வாகனங்கள் நகரும் . அருகில் இருக்கும் வரிசைக்கு மாறினால் அந்த வரிசை நின்றி விடும் . ஏனைய வரிசைகள் யாவும் வாகனங்கள் அசையும் ...ஃஃஃ நல்ல விளக்கம் ஒன்றுடன் அருமையாக ஒரு விதியை விளக்கியுள்ளீர்கள்...

Popular posts from this blog

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு க

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிடத்தில் சரியாக கொண்டு போய் சேர்க்கின்றனர் .  சிறகுகள் அமைப்பின்

கண்ணாளனே...!

சங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன். அகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது.  மலையும் மலை சார்ந்த இடத்திலும்  நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது.  இந்தப் பாடல் காதல் வயப்பட்ட  பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச்  சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.  "நெருநல் எல்லை யேனல் தோன்றித் திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள இ