Skip to main content

ட்ரோஜன் குதிரைகள் - இணைய பாதுகாப்பு

ற்றோஜோன் ஹோர்செஸ் வைரஸ்கள் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் சிலர் . ஆனால் அவை எவ்வாறு இயங்குகின்றன எப்படி தடுக்கலாம் பார்ப்போம் . இவை சாதாரண வைரஸ்கள் போல  அல்ல . 


 முதலில் ஒரு கதையை சொல்லி விட்டு பின்னர் தகவலை வழங்கினால் விளங்கும் என்று எண்ணுகிறேன்  . 

கிரேக்கர்கள் ஒரு காலத்தில் ற்றோஜங்களிடம் மிகப்பெரிய குதிரையை கொண்டு செல்ல முயன்றனர் . அந்த மரத்தாலான பெரிய குதிரையை பார்த்தவர்கள் அதை தமது வெற்றி பரிசு என்று எண்ணி உள்ளே வரவைத்தனர் .

அதன்  பின்னர் அந்த குதிரைக்குள் இருந்த கிரேக்கர்கள் படபடவென இறங்கி சண்டை இட தொடங்கினர் .
இந்த கதை அனைவரும் கேட்டிருப்பீர்கள் . 

அதே போல தான் இந்த ற்றிஜோன் குதிரை வைரஸ்களும் .

சாதாரண வைரஸ்களை கணனியின் fire wall (பயர் வோல்) அனுமதிப்பதில்லை . அதனால் இவை வேறு ஒரு வடிவிலோ அல்லது எமக்கு தெரிந்த பழகிய ஏதாவது ஒன்றாகவோ உள்ளே நுழைய பார்க்கும் . முக்கியமாக அவை எம்மை கவரும் வகையிலே பெரும்பாலும் இருக்கும் . 

  

இவை உள்ளே வந்தவுடன் தமது வேலையை ஆரம்பிக்கும் .  எமது கணனியில் உள்ள தகவல்களை அதன் உரிமையாளருக்கு அனுப்பி வைக்கும் . அவரால் எங்கிருந்தும் கணனியை இயக்க முடியும்.

ஒரு தடவை கணனியில் இன்ஸ்டால் செய்து விட்டால் தனது வேலையை தொடங்கிவிடும் . பயர்  வோல் மூலம் ப்ரோக்ராம்களை அனுமதிக்கும் போது கவனமாக இருக்கவும் .
ஆனால் இது வைரஸ் அல்ல ... வைரஸ் செயல்பாட்டில் இருந்து முற்றிலும் வேறுபட்டது . ஆபத்தானது கூட . 

இவை கூடுதலாக மெயில் மூலமாகவே பரவுகின்றன . மெயில்களுக்கு வைரஸ் பாதுகாப்பு முக்கியம் . தெரியாதவர்களிடம் இருந்து வரும் மெயில்களையோ அல்லதுவித்தியசமான மெயில்களையோ  திறக்காமல் அழிப்பது நல்லது .

ஏதாவது ப்ரோக்ராம் பதிந்த பின்னர் ட்ரோஜன் ஆபத்து கண்டறிந்தால் இணைய இணைப்பை துண்டித்து விட்டு . அந்த பயிலை அகற்றுவது நல்லது . இல்லாவிட்டால் உங்கள் கணணியை மீள் இன்ஸ்டால் செய்தால்  சரி .

Comments

சகோதரா இதை யாரும் பிடிக்கலை என்று சொன்னால் அவன்........... ஒரு......... தான்
மிக்க நன்றி ..ஊக்கத்திற்கு மிக்க நன்றி :))

Popular posts from this blog

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிட...

கங்குபாய் கத்தியவாடி

நாம் எதையெல்லாம் விரும்பிச் செய்கிறோமோ அதன் மீது மரியாதையும் ஒருவிதமான பிடிப்பும் நமக்கு இருக்கவேண்டும். அதில் காமம் மட்டும் விதிவிலக்கல்ல. காமம் தந்து , உடல் தந்து, தானும் மகிழ்ந்து இன்னோர் உயிரை மகிழ்விப்பவரும், காதல், அன்பு, உள்ளமெலாம் உருக்கி உடலாய்த் தந்து மகிழ்விப்பவரும், இரண்டையும் ஒன்றாய்த் தந்து மகிழ்விப்பவரும் மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் ஆணாய் இருந்தாலும், பெண்ணாயிருந்தாலும், மாற்றுப் பாலினத்தவராக இருந்தாலும் மதிக்கப்படவேண்டியவர்கள். இந்த மதிப்பானது, உள்ளப் புரிதலினாலும், மனிதத்தினாலும், தகுந்த புத்தியினாலும், பெற்றுக்கொண்ட விஸ்தாரமான அறிவினாலும், நடத்தையினாலும், வார்த்தையினாலும் உள்ளுக்குள்ளே நிகழும் மாற்றத்தினாலும் எழவேண்டும். கங்குபாய் என்கிற இந்தப் படம், விலைமாதர்களின் வாழ்வியலைப் பேசுகிறது. விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு பெறுமதிக்கு ஏற்றபடி ஒவ்வொரு தரத்தில் இருக்கிறார்கள். நன்கு படித்து வேலைபார்க்கும் விலைமாதர்களும் இருக்கிறார்கள். பகுதியாய் விலைமாதராக இருப்பவர்களும் இருக்கிறார்கள். இப்போதும் அப்போதும், விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருந்தா...

அடியே அடியே என்னை எங்க நீ கூட்டி போற!

கிறிஸ்தவ தேவாலயங்களிலும் அவை சார்ந்த சூழலிலும், கிஸ்தவப் பாடல்களும் இசையும் இசைக்கப்படுவதைச் சிலர் கேட்டிருப்பீர்கள். அப்படிப் இசைக்கப்படும் இசையை Gospel music எனலாம். Gospel என்றால் Good message. பைபிளிலிருந்து கதைகளையும், கதாப்பாத்திரங்களையும் கடவுளின் செய்திகள் என்று நினைத்துச் சொல்லப்படுகிற விடயங்களையும் எளிமையான இசையோடு இசைத்துப் பாடப்படுகிற பாடல்கள். வரிகளுக்கு முக்கியத்துவம் உள்ள பாடல்கள். பெரும்பாலும் நம்பிக்கையை விதைக்கிற செய்திகளைத் தாங்கிவரும் இந்தப் பாடல்களை மனதில் நிறையத் துன்பத்தோடு சென்று பாடுகிறவர்களுக்கு தேவாலயத்தில் ஒரு நிம்மதி கிடைக்கிறது. இந்த இசை துன்பத்தை வாங்கி நம்பிக்கையைத் தருகிறது. பலரும் கடவுள்தான் நம்பிக்கை தந்ததாக நினைத்துக்கொள்வார்கள். பிரச்சாரகர் அழைப்பு விடுக்க மற்றவர்கள் பதிலுரைத்து ஆமோதிப்பார்கள். ஒரு chorus இல் பலரும் பதிலுரைப்பார்கள். இதுதான் இசையின் வார்த்தைகளின் பலம். குறிப்பிட்ட மதங்களிடையே இசை தோன்றினாலும், அவற்றைச் சார்ந்திருந்தாலும், அது அந்தந்த மனிதர்களின் சமூகத்தின் அகவுணர்ச்சி மற்றும் அழகுணர்ச்சியின் வெளிப்பாடே என்பதனை நாம் புரிந்துகொள்ள...