Skip to main content

மெய்தொட்டுப் பயிறல் - கவிதாஞ்சலி 4





இலக்கியத்தில் களவொழுக்கத்தின்போது   தலைவியின் வேட்கையை உணர்ந்த தலைவன் எண்வகைச் செயல்களை ஆற்றுவான். தலைவிக்கும் காதல் உடன்பாடு இருக்கிறது. ஆனால் அவள் பெண்மையின் நலன்கள் அவளைத் தடுக்கிறது. அவற்றை நீக்கவேண்டும். அதன்பின்னரே கூடல் நிகழும்.இவற்றை மெய்தொட்டுப் பயிறல்,பொய்பாராட்டல்,இடம்பெற்றுத்தழாஅல்,இடையூறு கிளத்தல்,நீடுநினைந்திரங்கல்,கூடுதலுறுதல்,சொல்லியநுகர்ச்சி,தீராத்தேற்றம் என்று எண்வகைச் செயல்களாக வகைப்படுத்துகின்றன.

தலைவியின் அச்சமும் மடமும் நாணமும் நீங்கும் பொருட்டு அவளைத் தீண்ட முற்படல் மெய்தொட்டுப் பயிறல் எனப்படும். 'பயிறல்' என்பது தீண்ட முயலுதல் எனும் பொருள் கொள்ளும் என்கின்றனர். இவ்வாறு முயலும்போது தலைவியிடம் பலவகை மாற்றங்கள் நிகழும். "நிலவே கேளு! உன்  ஒளி இவளின்  முகத்தை விட பிரகாசமாய் இருந்தால் நான் உன்னையே மணப்பேன்" என்றெல்லாம் பொய்பாராட்டல்  நிகழும். இதில் பொய் சொல்லி நெருங்குதல் பற்றிக் கூறும் பாடல்கள் நிறைய இருக்கின்றன. அவள் மேல் அமர்ந்த வண்டைத் துரத்தும் சாக்கில் அவள் கூந்தல் திருத்தி, நுதல்  தடவி, வண்டினையும் ஓட்டிவிட்டு மெல்லடிகளைத் தடவுகிறான். 'இடம்பெற்றுத்தழாஅல்' என்பது பொய்பாராட்டலை தலைவி கேட்டுக்கொண்டே இருக்கும்போது அந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவளை நெருங்குதலைக் குறிக்கும்.

இந்திரா படத்தில் இடம்பெற்ற "தொடத் தொட மலர்ந்ததென்ன" பாடலில் இந்த அழகியலைக் காணலாம். அத்தனை மெலிதான வரிகள். "தொடத்தொட மலர்ந்ததென்ன பூவே" என்று இலக்கியம் சொல்லும் மெய்தொட்டுப் பயிறலை வரிகளில் அத்தனை நயம்பட சொல்கிறது  வைரமுத்து வரிகள். "மழை வர பூமி மறுப்பதென்ன" எனத் தொழுகிறான். "பனிதனில் குளித்த பால்மலர் காண இருபது வசந்தங்கள் விழி வளர்த்தேன்" என்று பொய்பாராட்டி நெருங்குகிறான்."இலை மூடும் மலராக இதயத்தை மறைக்காதே.மலர் கொள்ளும் காற்றாக இதயத்தை உலுக்காதே"  என்கிற வரிகள் இடையூறு கிளத்தலை அழகாகச் சொல்கிறது. "இடையூறு கிளத்தல்" என்பது தலைவி நாணி தன்னை மறைத்துக்கொள்ளுதலை சொல்கிறது.

இந்தப் பாடலில் வார்த்தைகளை உச்சரிப்பதற்கு ஒரு கண்ணியமான ஆண் குரல் வேண்டும். காரணம், கவிதையில் காமம் மட்டும் இல்லை . அன்பும் மிகுந்து இருக்கிறது. இதையெல்லாம் சேர்த்து  வார்த்தைகளில் தெய்வத்தன்மையைக் கொண்டுவந்தது பாலசுப்ரமணியத்தின் குரல்.

Comments

Popular posts from this blog

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிட...

கங்குபாய் கத்தியவாடி

நாம் எதையெல்லாம் விரும்பிச் செய்கிறோமோ அதன் மீது மரியாதையும் ஒருவிதமான பிடிப்பும் நமக்கு இருக்கவேண்டும். அதில் காமம் மட்டும் விதிவிலக்கல்ல. காமம் தந்து , உடல் தந்து, தானும் மகிழ்ந்து இன்னோர் உயிரை மகிழ்விப்பவரும், காதல், அன்பு, உள்ளமெலாம் உருக்கி உடலாய்த் தந்து மகிழ்விப்பவரும், இரண்டையும் ஒன்றாய்த் தந்து மகிழ்விப்பவரும் மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் ஆணாய் இருந்தாலும், பெண்ணாயிருந்தாலும், மாற்றுப் பாலினத்தவராக இருந்தாலும் மதிக்கப்படவேண்டியவர்கள். இந்த மதிப்பானது, உள்ளப் புரிதலினாலும், மனிதத்தினாலும், தகுந்த புத்தியினாலும், பெற்றுக்கொண்ட விஸ்தாரமான அறிவினாலும், நடத்தையினாலும், வார்த்தையினாலும் உள்ளுக்குள்ளே நிகழும் மாற்றத்தினாலும் எழவேண்டும். கங்குபாய் என்கிற இந்தப் படம், விலைமாதர்களின் வாழ்வியலைப் பேசுகிறது. விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு பெறுமதிக்கு ஏற்றபடி ஒவ்வொரு தரத்தில் இருக்கிறார்கள். நன்கு படித்து வேலைபார்க்கும் விலைமாதர்களும் இருக்கிறார்கள். பகுதியாய் விலைமாதராக இருப்பவர்களும் இருக்கிறார்கள். இப்போதும் அப்போதும், விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருந்தா...

அடியே அடியே என்னை எங்க நீ கூட்டி போற!

கிறிஸ்தவ தேவாலயங்களிலும் அவை சார்ந்த சூழலிலும், கிஸ்தவப் பாடல்களும் இசையும் இசைக்கப்படுவதைச் சிலர் கேட்டிருப்பீர்கள். அப்படிப் இசைக்கப்படும் இசையை Gospel music எனலாம். Gospel என்றால் Good message. பைபிளிலிருந்து கதைகளையும், கதாப்பாத்திரங்களையும் கடவுளின் செய்திகள் என்று நினைத்துச் சொல்லப்படுகிற விடயங்களையும் எளிமையான இசையோடு இசைத்துப் பாடப்படுகிற பாடல்கள். வரிகளுக்கு முக்கியத்துவம் உள்ள பாடல்கள். பெரும்பாலும் நம்பிக்கையை விதைக்கிற செய்திகளைத் தாங்கிவரும் இந்தப் பாடல்களை மனதில் நிறையத் துன்பத்தோடு சென்று பாடுகிறவர்களுக்கு தேவாலயத்தில் ஒரு நிம்மதி கிடைக்கிறது. இந்த இசை துன்பத்தை வாங்கி நம்பிக்கையைத் தருகிறது. பலரும் கடவுள்தான் நம்பிக்கை தந்ததாக நினைத்துக்கொள்வார்கள். பிரச்சாரகர் அழைப்பு விடுக்க மற்றவர்கள் பதிலுரைத்து ஆமோதிப்பார்கள். ஒரு chorus இல் பலரும் பதிலுரைப்பார்கள். இதுதான் இசையின் வார்த்தைகளின் பலம். குறிப்பிட்ட மதங்களிடையே இசை தோன்றினாலும், அவற்றைச் சார்ந்திருந்தாலும், அது அந்தந்த மனிதர்களின் சமூகத்தின் அகவுணர்ச்சி மற்றும் அழகுணர்ச்சியின் வெளிப்பாடே என்பதனை நாம் புரிந்துகொள்ள...