Skip to main content

வடக்கின் தேவை : Entrepreneurship or Social entrepreneurship ? : சிறுபேச்சு 2

நேற்றைய டெய்லி மிரர் பத்திரிகையில்  "Moving from aid to entrepreneurship" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதப்பட்டு இருந்தது. வடக்கின் பொருளாதாரத்தை மீளவும் கட்டியெழுப்பவேண்டியதன் அவசியத்தைச் சொல்லியிருந்தது அந்தக் கட்டுரை. இருந்தாலும் உள்ளிருக்கும் சமூகப் பிரச்சனைகளை எதிர்கொண்டு முன்னேறுவது பற்றி அந்தக் கட்டுரையில் ஏதும் குறிப்பிடப்படவில்லை. ஒரு பொருளாதார அறிவுரையாளரிடம் இருந்து  எல்லாவற்றையும்  எதிர்பார்க்கவும் முடியாது.

நிறையத் தன்னார்வ நிறுவனங்களும், சில நாடுகளும் வடக்கிற்குத் தேவையான உதவிகளையும், வழிகாட்டல்களையும் செய்யக் காத்திருக்கின்றன. ஆனால் அந்தந்தச் சமூகத்தில் இருக்கிற மக்கள்தான் அதற்கு ஆர்வம் காட்டவேண்டும். வருகிற உதவிகளை எப்படிப் பயன்படுத்துவது எனத் தெரியாமல் பலர்  இருக்கிறார்கள். அரச  வேலைவாய்ப்புத்தான் வேண்டுமென்று கேட்கிறார்கள். அது கிடைக்கும்வரையாவது சுயதொழில் முயற்சிகளில் இறங்கமாட்டேன் என்கிறார்கள். தங்களுடைய அரசியல் இலாபங்களுக்காக, உலகில் தோற்றுப்போன கொள்கைகளைப் பரப்பி இளைஞர்களைத் திசைதிருப்புபவர்கள் மலிந்துபோயிருக்கிறார்கள். 

சமூகத்தின் உள்ளிருந்து  புதிதாகத் தொழில் முனைவோர்கள் வரவேண்டும். குறிப்பாக வெளியிலிருந்து முதலிடுபவர்கள்  எல்லோராலும் சமூகப் பிரச்சனைகளை உள்வாங்கி அதற்குத் தீர்வுதரும் வகையில் செயற்படமுடியாது. என்னைப் பொறுத்தவரை உள்ளிருந்து நிறைய Social entrepreneurs உருவாகவேண்டும். Social entrepreneurship என்பது சமூகத்தின் பிரச்சனைகளை உள்வாங்கி அதற்குரிய தீர்வுகளை வியாபாரத்தின் மூலம் வழங்குவதாகும். சாதாரண தொழில்முனைவோர் இலாபத்தை மட்டுமே முக்கிய குறிக்கோளாகக் கொண்டிருப்பர். Social entrepreneurship வெறுமனே இலாபத்தை மட்டும் நோக்காகக் கொள்ளாது, சமூகத் தீர்வுகளையும் வழங்குகிற வியாபார முறைமை. சமூகத்தின் பிரச்சனைகளை உள்வாங்கிக்கொண்ட முறைமை.

Comments

Popular posts from this blog

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு க

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிடத்தில் சரியாக கொண்டு போய் சேர்க்கின்றனர் .  சிறகுகள் அமைப்பின்

கண்ணாளனே...!

சங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன். அகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது.  மலையும் மலை சார்ந்த இடத்திலும்  நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது.  இந்தப் பாடல் காதல் வயப்பட்ட  பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச்  சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.  "நெருநல் எல்லை யேனல் தோன்றித் திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள இ