Skip to main content

வன்புணர்வின் உளவியல்

யாழ்ப்பாணத்தில் மாணவி ஒருவர் வன்புணரப்பட்ட சம்பவத்துக்கு அந்தச் சமூகமே குரல் கொடுக்க எழுந்து நிற்கிறது. வன்புணர்வு செய்தவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தித் தண்டிக்கவேண்டும் என்கிறார்கள். இப்படியான தண்டனைகள் அவசியம். இவற்றுக்கு இன்னொரு பக்கமும் உண்டு. இந்தமாதிரிப் பிரச்சனைகளை உளவியல் நிபுணர்களைக்கொண்டு ஆராய்கிற கலாச்சாரத்துக்குள் நம் ஊடகங்கள்கூட காலடி எடுத்துவைக்கவில்லை. மேலோட்டமான அலசலும் பார்வையுமே இருக்கிறது. வெறுமனே  சட்ட இரீதியாக அணுகினால் போதும் என்றும், தற்காலிகத் தீர்வு அவசியம் என்கிற கோஷமுமே முன்வைக்கப்படுகிறது. ஒரு சமூகத்துக்கு அறிவினை வழங்குவது மட்டும் நிரந்தரத் தீர்வு ஆகாது. குறைக்கலாம். தனிநபர்களின் உளவியல் பிரச்சனைகளுக்கு தீர்வுகள் எட்டப்படும் வகையில் நடவடிக்கைகள் அமையவேண்டியது அவசியம். 

சில விஷயங்களைப் பேசமுதல் சில  உண்மைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும்.காதல் திருமணம் செய்துகொண்ட பெண்கள்  வன்புணர்வுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். நிச்சயிக்கப்பட்ட திருமணங்களின் பின்னும் வன்புணர்வு நிகழ்கிறது. வீட்டில் உள்ள பெண்கள் மீதும்  வன்புணர்வு நடக்கிறது. வெளியில் வருகிற, ஊடகங்கள் பிரபலப்படுத்துகிற வன்புணர்வுகளைவிட பதிவு செய்யப்படாத வன்முறைகள், சிறுவர் துஷ்பிரயோகங்கள், வன்புணர்வுகள்தான் அதிகம். காரணம், வீட்டில் இருக்கிறவர்களோ, தெரிந்தவர்களோ அதை மேற்கொள்வதுதான். இதைப் பற்றிய முறைப்பாடுகள் வருவதில்லை. காதலும் தாலியும் என்றும் புனிதம் என்கிற பரிசோதிக்கப்படாத தியரி இங்கு உறுதியாக இருக்கிறது. இருவேறுபட்ட செக்சுவல் ஆர்வம் உள்ளவர்கள் இணையும்போதும் கட்டாயப்படுத்துதல்கள், பிரச்சனைகள் எழுவதுண்டு. 

செக்ஸ் வைத்துக்கொள்வதற்கும் அதைப்பற்றிய பரஸ்பர புரிந்துணர்வுக்கும் இடையிலான வித்தியாசத்தையும் பலரும் அறிவதில்லை. காதலர்கள் தங்களுடைய அந்தரங்கமான செக்ஸ் விருப்பங்களைப் பற்றி முன்னமே வெளிப்படையாக பேசிக்கொள்வதில்லை. விஞ்ஞானத்தின் படி காதலின் அடிப்படை அதுவாக இருந்தாலும், ஒரு புனித பிம்பம்தான் இருக்கிறது. திருமணத்தின்பின் அதை முதன்முறையாக எதிர்கொள்ளும்போது சமநிலையற்று விவாகரத்துவரை  வந்து நிற்பார்கள். பெரும்பாலானவர்கள் தாங்கள் விவாகரத்து செய்துகொள்வதற்கான உண்மையான காரணத்தை வெளியில் சொல்வதில்லை என்பதைக் கவனிக்கவேண்டும். பலரும் விவாகரத்துச் செய்வது பண்பாடில்லை என்றும் வன்புணர்வுக்கு ஒத்துழைப்பதே  பண்பாடு என்றும் சகித்துக்கொண்டு வாழ்வதுண்டு. ஒரு பெண்ணைத் தெரிந்திருந்தால், அவரின் விருப்பமின்றி அவரை அணுகுவது வன்புணர்வு இல்லை என்பதே பலருடையை நிலைப்பாடு என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். 

இந்த வன்புணர்வினை மேற்கொள்கிறவர்கள் பற்றி நிறைய ஆய்வுகள் வெளியாகியிருக்கின்றன. குறிப்பாக, இதுதான் காரணம் என்று இவர்களை வகைப்படுத்திட முடியாது என்கிறார் போஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உளவியல் பேராசிரியர் Prentky . இந்தச் சிக்கலான விடயத்தில் நிறைய பதில்கள் கிடைத்திருக்கின்றன. வன்புணர்வு மேற்கொள்பவர்களில் குறிப்பிட்ட வீதமானோர் சிறுவயதில்  துஷ்பிரயோகத்திற்கு ஆளானவர்கள் என்று சொல்லுகிறார்கள். இங்கு சிறுவர் துஷ்பிரயோகத்தையும் சட்ட ரீதியாக அணுகும் கலாச்சாரம்தான் இருக்கிறது. துஷ்பிரயோகம் செய்தவருக்கும் ஆளானவருக்கும் சரியான உளவியல் பயிற்சி கொடுக்கப்படுவதில்லை. பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு  Posttraumatic stress disorder ஏற்படுகிறது.

இதில் கவனிக்கப்படவேண்டிய விடயம் என்னவென்றால், வன்புணர்வில் ஈடுபட்டவர்களில் Sexual sadism disorder உள்ளவர்கள் மிகவும் குறைவானோர். இந்த சாடிஸ மனநிலை உள்ளவர்களுக்கு, துன்புறுத்தலுக்கு உள்ளாகிறவரின்  பய உணர்வுதான் தூண்டுகோலாக இருக்கும் என்று உளவியல் சொல்லுகிறது. 

ஒருசில வன்புணர்வாளர்கள் உலகத்தின் மீது கோபம் உள்ளவர்கள் என்கிறார்கள். அதையெல்லாம் ஒரு பெண்ணின்மீது பிரயோகிக்கும் இவர்கள் அதிகமாக கொலை, கொள்ளை என ஏனைய வன்முறைகளிலும் ஈடுபடுபவர்கள் என்கிறது ஆய்வு. சிலர் வழமைக்கு மாறான ரொமான்டிக்  கற்பனைகளில் ஈடுபடுகிறவர்கள் என்கிறார்கள். இவர்களைப் பொறுத்தவரை வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பெண் தன்மீது காதல் கொள்வாள் என்கிற எண்ணம் உண்டாம். இப்படியானவர்கள் பாதிக்கப்பட்டோரை மீண்டும் சந்திக்க முற்படுபவர்கள் என்கிறார்கள்.

இப்போதும்  பெண்களின் ஆடைகள் மீதும், நடத்தையின் மீது மட்டுமே குறை சொல்லப்படுகிறது. பெண்ணியவாதிகள் சொல்வதுபோல பெண்கள்மீதான அடக்குமுறை என்றும் சுருக்கிவிடமுடியாது. சிலர்தான் சாடிஸ மனப்பான்மையில், பெண்கள் மீதான வெறுப்பினை வெளிப்படுத்த வன்புணர்வில் ஈடுபடுபவர்கள் எனவும் பெரும்பாலானவர்கள்  சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்கிறவர்கள் என்கிறார்கள். பெண்கள் தங்களை அவமானப்படுத்தியதால் கோபத்தில் செய்தோம் என்று அடிக்கடி சொல்லுபவர்களும் இருக்கிறார்கள் என்கிறார்கள்.

தற்போதையை பெண்கள் சற்று முற்போக்குச் சிந்தனை உள்ளவர்கள்  என்கிறபடியால், சாட்சியினை இல்லாமல் செய்ய வன்புணர்வின் பின்பு கொலையையும் மேற்கொள்கிறார்கள். பரந்துபட்ட முறையில் ஆராயப்படவேண்டிய சமூக உளவியல் பிரச்சனை இது. இவற்றை மேலோட்டமாக அணுகுவதோ, அரசியல் சார்ந்து அணுகுவதோ சமூகத்திற்கு மிகவும் பாதிப்பான விடயம். Sadistic fantacies உள்ளவர்கள் நிறையப்பேர் சமூகத்துக்குள்ளேயே இருப்பார்கள். இதனைச் சரியாக இனங்கண்டுகொள்ளும் அளவுக்கு தெளிவு அவசியம். இனங்கண்டபின் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

Comments

Popular posts from this blog

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு க

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிடத்தில் சரியாக கொண்டு போய் சேர்க்கின்றனர் .  சிறகுகள் அமைப்பின்

கண்ணாளனே...!

சங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன். அகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது.  மலையும் மலை சார்ந்த இடத்திலும்  நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது.  இந்தப் பாடல் காதல் வயப்பட்ட  பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச்  சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.  "நெருநல் எல்லை யேனல் தோன்றித் திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள இ