Skip to main content

உயிரே! காதலின் உச்சம்

ஒருகாலத்தில் மணிரத்னம் இயக்கிய  திரைப்படங்களில் இணைந்து இயங்கிய  கூட்டணிபோலப்  பொருத்தமான கூட்டணிகள் எல்லோருக்கும் அமையவில்லை. தன்னைச்சுற்றி ஒரு நல்ல குழுவினை அமைத்துக்கொண்டார் எனலாம். ஒவ்வொரு காட்சியமைப்பிலும் அவர் பேணுகிற அமைதி, அது தருகிற  ஆழம், இடைவெளிகள் , கவித்துவம் என்பன அவரின் தனித்துவம். அதனாலேயே  அவற்றை மீண்டும் பார்க்கவேண்டும் என்கிற ஆர்வத்தைத்  தவிர்க்கமுடிவதில்லை.  அப்படியான, குறிப்பிடத்தக்க படங்களில் ஒன்றான உயிரே திரைப்படத்தைப்  பற்றிச்  சில விஷயங்களைச் சொல்லியாகவேண்டும்.

                              


ஒரு போராட்டக் குழுவினைச் சேர்ந்த பெண்ணுக்கும், ஆணுக்கும் இடையில் ஏற்படுகிற காதல்,காமம்,ஏக்கம்,போராட்டம் போன்றவற்றுக்கான பதிலை அவற்றினூடே காட்ட முயற்சித்த படம்.  அதில் மனிஷாவின்(மேக்னா ) பாத்திரம்தான் கவனிக்கப்படவேண்டியது. அதனால், தன்னுடைய சிறிய வயதிலேயே வன்புணர்வுக்கு உள்ளாகிய, Posttraumatic stress disorder இருக்கிற ஒரு பெண்ணுக்கும்   ஆணுக்கும் இடையிலான காதல்க்கதை  என்றால் இன்னமும் பொருத்தமாக இருக்கும். உளவியல் பாதிப்புக்கு உள்ளான ஒரு பெண், காதலினால் எப்படித் தன்னை மீளவும் அமைத்துக்கொள்ள முயற்சிக்கிறாள் என்பதைக் காட்சியமைப்புகளினூடு சொல்லியிருப்பார். அதாவது ஒரு பெண்ணைப் பாதிப்பிலிருந்து படிப்படியாக மீட்பதுதான் திரைப்படம் முழுதும் காதலாக வியாபித்திருக்கிறது.

ஒரு Rape trauma syndrome உள்ள பெண்ணாக மனிஷாவின் நடிப்பைச் சொல்லியாகவேண்டும். காதல், காமத்தின் மீது விருப்பமிருந்தாலும் தன்னுடைய பழைய பாதிப்புகளிலிருந்து மீளமுடியாத பெண்ணை அவரின் நடிப்பில் பார்க்கலாம். வன்புணர்வினால் பாதிக்கப்பட்டோருக்கு  hapnophobia இருக்கும். அதாவது தொடுதலும் தீண்டப்படுதலும் பிடிக்காது.  Anxiety attacks அதிகம் ஏற்படும். மூச்சுவிடுதலில் சிரமமிருக்கும்.  அமர் மேக்னாவைத் தொட முற்படும்போதெல்லாம் மேக்னா ஒருவித எதிர்ப்பைக் காட்டுவார். அந்த எதிர்ப்பே அன்புக்கும் உளவியல் பாதிப்புக்கும் இடையிலான போராட்டமாக இருக்கும். இதையெல்லாம் மணிரத்னம் திரைப்படத்தில் கவனமாகக் கையாண்டிருப்பார். கூடுதலாக மக்கள் நடமாட்டம் அற்ற வெளிகளை அவர்கள் விரும்பமாட்டார்கள். ஆனால் ஒரு ஆணின் மீதும், தனிமையின் மீதும் மேக்னா நம்பிக்கை கொள்ளும்படி காட்சியமைப்புகள் அமைந்திருக்கும்.

அதில் மேக்னாக்கு இருக்கிற உளவியல் பாதிப்புகள் பற்றி அமருக்கு (ஷாருக் ) தெரியாது. பாதிக்கப்பட்டவர்கள், அந்த விடயத்தை இன்னொருவரிடம் இலேசில் பகிர்ந்துகொள்ளமாட்டார்கள். பகிர்ந்துகொள்வதில் அவர்களுக்கு விருப்பமிருக்காது. அதனால் ஒரு ஆணின் ஏக்கம், வேண்டுகோள், கேள்விகள் எல்லாவற்றையும் பாடல்களில், தன் வரிகளினூடு கொண்டுவந்திருப்பார் வைரமுத்து. "கண்ணில் ஒரு வலி இருந்தால் கனவுகள் வருவதில்லை
உள்ளத்தில் ரணமிருந்தால் உறவுகள் மலர்வதில்லை" என்று பாலைவன மணலில் அவள் எழுதிவிட்டுப்போகிற கவிதை வரிகள் போதும். அந்த இடத்தில் வருகிற  ரஹ்மானின் பின்னணி இசையைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

                      


இந்தப் படத்தின் திரைக்கதையில் சுஜாதாவின் பங்கு உண்டு. வசனங்களில், மற்றவர்களைப் போல வாழ்க்கை அமைத்துக்கொள்ள ஏங்கும் ஒரு பெண்ணின் ஏக்கம் இருக்கும். கீழே குறிப்பிட்டிருக்கிற வசனங்கள் ஒரு உதாரணம்.

"சிரிச்சா அழகா இருக்க . அப்புறம் ஏன் உம்னு! சிரிக்க மாட்டேங்கிற!"
"பாட்டிம்மா,எட்டு வயசுல இருந்து என் சிரிப்பெல்லாம் எங்கயோ போயிடிச்சு "
"உள்ள என்ன பூட்டி வைச்சிருக்கிற"
"ஒன்னுமில்லை, துக்கம்"
"பொண்ணுக்கு துக்கம் கூடாது. என் பேரன் மாதிரி ஒருத்தனை பாத்து கட்டிக்க"
"என் தலைஎழுத்து அப்பிடி இல்லை"
"தலை எழுத்தா! எல்லாம் நாமளே எழுதிக்கிறதுதான்"


"என்னைப் பாத்தா பயமா!"
"பயமா! பயத்தைப் பத்தி உனக்கென்ன தெரியும்!"

"உலகத்துல உனக்கு எது பிடிக்கும்"
"அம்மா உள்ளங்கை, எங்க ஊர் கோயில் மாடத்துப்புறா, கவிதை"

"உலகத்துல எது பிடிக்காது"
"நீ இவ்ளோ கிட்ட வர்றது பிடிக்கல"
"பொய் சொல்ற"
"உன் சிரிப்பு, உன் அதிகப்பிரசங்கித்தனம், உனக்குள்ள இருக்கிற இந்த சந்தோஷம்" 

காமத்தையும் காதலையும் சொற்களிலும், கவிதையிலும் வெளிப்படுத்திய பக்குவம் வைரமுத்துவையும் சுஜாதாவையும் சாரும். அந்தத் திரைப்படத்தில் ஏற்படுகிற காமத்தின் இடைவெளியைப் பாடல்க் காட்சியமைப்புகளின் மூலம் அமைத்துக் காட்டியது மணிரத்தின் சிறப்பு.

Exoticism!



This is a phenomenon called the "liminal space of dreaming" in that the terrorist woman cannot fulfill her sexual desire so the songs fill the void of this desire by "their sumptuousness and exotic locales" in the Ladakh region. -  Elleke Boehmer and Stephen Morton

Comments

ப்ப்பா என்ன சுகித்தல்ய்யா

அகமகிழ்வு

Popular posts from this blog

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு க

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிடத்தில் சரியாக கொண்டு போய் சேர்க்கின்றனர் .  சிறகுகள் அமைப்பின்

கண்ணாளனே...!

சங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன். அகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது.  மலையும் மலை சார்ந்த இடத்திலும்  நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது.  இந்தப் பாடல் காதல் வயப்பட்ட  பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச்  சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.  "நெருநல் எல்லை யேனல் தோன்றித் திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள இ