Skip to main content

பகிர்வுகள் - சுஜாதா - கலைச்சொற்கள் 1

தமிழ்மொழியை அடுத்த நிலைக்கு கொண்டுசெல்வது பற்றி எழுத்தாளர் சுஜாதா அவர்கள் பகிர்ந்துகொண்ட   ஆக்கபூர்வாமான செயற்திட்டங்கள் பல உண்டு.

அவற்றில் அவர்  கலைச்சொற்களின் முக்கியத்துவம் பற்றி பகிர்ந்த சில விடயங்களை பகிர்கிறேன்..

'களஞ்சியம்' இதழில் முனைவர் ப.அர நக்கீரன் கட்டுரைகள் போன்றவை நமக்கு அதிகம் தேவை. மாட்டு வண்டியின் பல உறுப்புகளை குறிப்பிடும் கலைச் சொற்களை ஆராய்ந்திருக்கிறார்.இந்தச் சொற்கள் பண்டிதர்கள் யாரும் உட்காராமல் இயல்பாக, தேவை ஏற்பட்டு அமைந்தவை.

நுகத்தடி , பூட்டுத்துளை ,சுள்ளாணி ,முகமுட்டு ,பார்/பார்பட்டை கோணாவட்டம் ,மையக்கட்டை ,சக்கரம்,உழல்வாய் (குடத்தில் உள்ள உராய்வினால் தேய்ந்து விரிவடையாமல் இருக்கப் பயன்படும் இரும்பினால் ஆன குழாய் ) ,ஆரக்கால்,வட்டை ,இருசு,கடையாணி,கூசு,தொட்டிக்கூண்டு,சவாரிக் கூண்டு. எத்தனை வார்த்தைகள் !

நாம் இன்னும் மாட்டுவண்டி யுகத்திலே இருக்க விரும்புகிறாரா சுஜாதா ,என்று கடிதம் எழுத உடனே சில பேனாக்கள் திறக்கப்படும் சப்தம் கேட்கிறது.

இந்த வார்த்தைகள் அனைத்தும் சக்கரங்கள் உள்ள Mechanical Engineering சாதனத்துக்கும் பயன்படுத்தலாம்.

ஆங்கிலக் கலைச்சொற்கள் பல அப்படித்தான் அமைக்கப்பட்டன.அவைகளின் ஆரம்ப அர்த்தங்களை துறந்து வந்தவை அவை. எலக்ட்ரான் எனும் வார்த்தை அம்பாற அரக்கு. Ballot என்கிற வார்த்தை கூழாங்கல். ஆரம்ப காலத்தில் கூழாங்  கற்களை கொண்டுதான் ஒட்டு எடுத்தார்களாம்!

நாம் நம் குடவோலையைத் தொலைத்துவிட்டோம் !

அவர் பகிர்ந்துகொண்ட சில கலைச்சொற்கள்


Comments

Popular posts from this blog

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு க

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிடத்தில் சரியாக கொண்டு போய் சேர்க்கின்றனர் .  சிறகுகள் அமைப்பின்

கண்ணாளனே...!

சங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன். அகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது.  மலையும் மலை சார்ந்த இடத்திலும்  நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது.  இந்தப் பாடல் காதல் வயப்பட்ட  பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச்  சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.  "நெருநல் எல்லை யேனல் தோன்றித் திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள இ