Skip to main content

ஏரியா 51

சுற்றி சுற்றி பார்த்தா எப்பிடியும் ஏலியன்ஸ் க்கும்  எல்லாத்துக்கும் தொடர்பு எப்படியோ வருகிறது .  படித்தவற்றை தொகுத்தவற்றை இங்கே தொகுக்கிறேன் .

ஏலியன்ஸ் இருக்கிறதா இல்லையா என்பது பற்றிய வாதங்கள் நடந்துகொண்டிருக்கிறது . ஏலியன்ஸ் யாரும் நேரே பார்க்கவில்லை ஆனால் பறக்கும் தட்டு ? வீடியோக்களில் கூட கண்டு விட்டோம் .  ((UFO ) Unidentified flying object ) என அழைக்கப்படுகிறது. அதாவது கண்டுகொள்ளப்படாத பறக்கும் பொருள் . அது எங்கிருந்து வருகிறது ? உண்மையில் ஏலியன்ஸ் எனும்வேற்றுக்கிரக வாசிகளுடையதா ?

கற்பனைக்கு  எட்ட முடியாத உலகின் தொழில்நுட்பம் நிறைந்த மிக மிக ரகசியமான ஒருவரும் போக முடியாத இடம் தான் ஏரியா 51 . 1990 வரை அமெரிக்க அரசு இப்படியொரு இடம் இருப்பதையே மறைத்து வந்தது .  மிக பெரிய ரகசிய இராணுவத்தளம் . இது லெஸ் வேகஸ்( அமெரிக்காவின் லொஸ் என்ஜெல்சில் இருந்து 250 மயில்கள்  ) நகரத்திலிருந்து சுமார் 100 மயில்களுக்குள் அமைந்துள்ளது . இந்த இடத்தின் மேலே ஒரு விமானம் கூட பறக்க முடியாது . இன்று வரை யாரும் அங்கு சென்றது கிடையாது .  




1955 ,1960  களில் உருவாக்கப்பட்ட இந்த தளம் முன்னர் (NTC ) என அழைக்கப்பட்டது . இதில் 1 -30 வரையான பிரிவுகள் காணப்பட்டது . இந்த பெயர் பெற காரணம் சில வேளைகளில் 15 ஆவது தளத்துக்கு அருகில் அமைந்திருப்பதாக இருக்கலாம் . சகோதர தளமாகையால் 1 ஐயும் 5 ஐயும் ( 51 ) மாற்றி மாற்றி வைத்திருக்கலாம் . 

அப்பிடி என்ன தான் இங்கிருக்கிறது? மிக மிக நவீன தொழில்நுட்பப விமானங்கள் நவீன ஆயுதங்கள் , மிக மிக நவீன நமக்கு தெரியாத பல கண்டுபிடிப்புகள் இருக்கலாம் . ஏன் அனைவரையும் ஆச்சரியத்தில் வியக்க வைக்கும் பறக்கும் தட்டு இங்கிருந்தும் வரலாம்!! . வெளிவராத எவளவோ தொழில்நுட்பங்கள் அரசால் மறைத்து வைக்கப்பட்டுள்ளது .இவளவு ரகசிய தன்மைக்கு  காரணம் அது தான் . ஒரு வேளை  ஒளிக்கு இணையான வேகத்தில் அல்லது மிக வேகத்தில்  செல்லும் பொருட்களை கண்டு பிடிக்கும் முயற்ச்சி அங்கு நடைபெறுவதாக சில தகவல்கள் உத்தியோகபூர்வம் இல்லாது  கிடைத்துள்ளது . 


முக்கியமாக பல ஏக்கர்கள் பரப்பு கொண்ட பாரிய தளம் . அனேகமாக நிலத்துக்கு அடியில்  மிகப்பெரிய பல தளங்கள் இருக்கலாம் என சொல்லப்படுகிறது . இதுவரை யாரும்  செல்லமுடியாத இடத்து செய்மதி புகைப்படங்கள் தான் கிடைத்துள்ளது . இங்கு பணியாற்றுபவர்கள் சத்திய வாக்குறுதி(வெளியில் எவருக்கும் சொல்ல மாட்டோம் ) எடுத்து தான் கடமையாற்றுகின்றனர் .

முக்கியமாக ஏலியன்ஸ் வந்த பறக்கும் தட்டு கண்டெடுக்கப்பட்டு அதை பற்றிய பரிசோதனைகள் இடம் பெறுவதாக ஊகிக்கப்படுகிறது . சில வேளை இவர்களுடைய கண்டுபிடிப்பாகவும் இருக்கலாம் . ஆளில்லாத விமான கண்டுபிடிப்பில் மிகவும் மும்முரம்  காட்டி வருகிறது ஏரியா 51 .     இஸ்ற்றேல்த்(strealth )  ஜெட்டின் இன் ஆரம்ப கட்ட வடிமைப்பு 1977 இலேயே வடிவமைக்கப்பட்டிருந்தாலும் 1990 இல் அமெரிக்க அரசு உத்தியோகபூர்வமாக அறிவுக்கும் 
வரை  யாருக்கும் இப்படியொரு விமானம் தயாராவது தெரியாது .

 F117-A 



பின்னர்  தெரிய வந்த SR-71 Blackbird என்ற ஜெட் ஒரு மணித்தியாலத்தில் 2300 மயில்களை கடக்கும் . 90 ,௦௦௦ அடி உயரம் வரை செல்லக்கூடியது .

SR-71 Blackbird


TR3A Black Manta எனும் ஆளில்லாத விமானம் தாக்குதல் நடத்த ( இது வரை வேவு மட்டுமே செய்யப்பட்டது ) ஏரியா 51 இல் தயாராகுவதாக செய்தி . அதன் வேகம் ஒரு  மணித்தியாலத்துக்கு 3100 மயில்கள். தயாரிக்க திட்டமிட்டிருக்கும் விமானம் ஹைபெர்சொனிக் (சுமார் 4600 மயில் வேகம் ).   

அதி தொழில்நுட்பப  விமானங்கள்  அனைத்தும் உருவாக்கப்பட்டு பரீட்ச்சிக்கப்படும் இந்த ஏரியா  51 இன்னொரு அதி உச்ச தொழில்நுட்ப்பத்திட்க்கு தயாராவது தெரியவருகிறது . அது தான் பறக்கும் தட்டு . சிலர் பறக்கும் தட்டு இரவு வேளையில் அங்கிருந்து புறப்படுவதை அவதானித்து உள்ளனர் .


ஏலியன்ஸ் க்கும்  இந்த ஏரியா 51 க்கும் தொடர்புண்டா ? ஏலியன்ஸ் உலகம் ஒன்று அடித்தளத்தில் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. அது முழுவதும் ஏலியன்ஸ் தொழில் நுட்பம் நிறைந்ததாக கூறப்படுகிறது . 


வழமையாக பறக்கும் தட்டுகள் செய்தி வரும் போது அதை நாசா மறுப்பதும் , வழமை போல அமெரிக்க அதை பூசி மறைப்பதுமே  வழமை . வழமை போல பலூன் என கூறுகிறது அமேரிக்கா .ஆனால் இது வரை ஏரியா 51 பற்றிய எந்த அறிவிப்பும் அமெரிக்க அரசால் வெளியிடப்படவ்வில்லை . 

இந்த ஏரியா 51 பற்றியும் ஏலியன்ஸ் க்கும் அதட்க்குமான தொடர்பு பற்றியும் அடுத்த பதிவில் இடுகிறேன் . மேலும் பல நவீன தொழில் நுட்பங்களும் காணப்படும் அடித்தள ஏலியன்ஸ் தொழில் நுட்பம் பற்றியதாகவும் அமையும் . 

பிடித்திருந்தால் தகவல் அனைவரையும் சென்றடைய ஓட்டை கிளிக் செய்து அளிக்கவும்  .

கேள்விகள் ஏதாவது இருந்தால் மறக்காமல் பின்னூட்டத்தை அளிக்கவும் ..

Comments

shammi's blog said…
very interesting and eagerly expecting your next
vivek said…
amzg... leave more about area 51

Popular posts from this blog

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு க

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிடத்தில் சரியாக கொண்டு போய் சேர்க்கின்றனர் .  சிறகுகள் அமைப்பின்

கண்ணாளனே...!

சங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன். அகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது.  மலையும் மலை சார்ந்த இடத்திலும்  நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது.  இந்தப் பாடல் காதல் வயப்பட்ட  பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச்  சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.  "நெருநல் எல்லை யேனல் தோன்றித் திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள இ