Skip to main content

உரையாடல்கள் - Concise dialogues

சுஜாதாவின் 'இரண்டாவது காதல் கதை' என்கிற நாவலைப் படித்துக்கொண்டிருக்கிறேன். சினிமாவிலும், நிஜத்திலும் நல்ல உரையாடல்கள் என்பது அரிது. மணிரத்னம் படங்களில் காதலர்கள்கூட புத்திசாலித்தனமாக பேசிக்கொள்வார்கள். சுருக்கமாகப் பேசினால் 'என்ன மணிரத்னம் படம் மாதிரி பேசுற. ஒன்னுமே புரியல' ம்பாங்க. இப்போது ஒன்னுமே புரியல என்பது 'முயற்சிப்பது' என்பதைத் தாண்டி கேலியாக மாறிவிட்டது. 

 'Concise dialogues' னு சொல்லலாம். இதை எழுதுறதுல மணிரத்னமும் சுஜாதாவும் வல்லவர்கள். இலத்தீன் வார்த்தையான 'concisus' இலிருந்து உருவானது. ரியாலிட்டிக்கு கொஞ்சம் ஒத்துவராதது போலத் தெரிந்தாலும், அப்படிப் பேசுபவர்கள் இருக்கிறார்கள். வார்த்தை விரயமின்றி ஒருசில வார்த்தைகளிலேயே நிறையத் தகவல்களை உள்ளடக்கி சொல்லவருகிற விஷயத்தைச் சொல்லுவது முக்கியம். தட்டையாக இல்லாமல் அடுத்தவருக்குக் கொஞ்சம் மூளையும் மேலதிகமாக வேலை செய்யும். ஒரு புதிர் மாதிரியும் இருக்கலாம். அதை உடைப்பது சுவாரசியம். முரண்பாட்டை உரையாடல்களில் நேர்த்தியாக வெளிப்படுத்தும்போது ஒரு வாசகரைக் கொட்டாவி விடாமல் வைத்திருக்கலாம். அதிர்ச்சிக்கு உள்ளாக்குதல் அடிக்கடி நிகழும்.


'உங்களுக்கு 'ஸ்பைஸ் கேர்ள்ஸ்' பிடிக்குமா?'
'ஏன்!'
'சும்மாதான் நீங்க என்ன டைப்புனு தெரிஞ்சுக்க'
'இல்ல.. நித்யஸ்ரீ'
'கொரியா ஏறக்குறைய தமிழ்நாடு சைஸ் , மக்கள் தொகையும் ஏறத்தாழ நாலு கோடி அறுபத்தஞ்சு லட்சம். எழுதப் படிக்கத் தெரிஞ்சவங்க 98 பர்சன்ட்! தமிழ்நாடு மாதிரித்தான் விவசாயம் பண்ணிக்கிட்டிருந்தவங்க. திடீர்னு கப்பல், மோட்டார் கார், டெக்ஸ்டைல், எலெக்ட்ரோனிக்ஸ்னு தாவினாங்க. ஆயிரம் மடங்கு ஏற்றுமதி அதிகப்படுத்தினாங்க.'
'எக்ஸ்கியூஸ் மீ ... எதுக்காக இதெல்லாம் என்கிட்ட சொல்றீங்க'
'சும்மா இம்பிரெஸ் பண்ணலாம்னுட்டு'
'நான் இம்பிரஸ் ஆகல... இந்தப் புள்ளி விபரம்லாம் மனோரம்மா இயர்புக்ல கிடைக்கும்.'
'வார்றீங்களே.. நித்யஸ்ரீ குரல்ல ஒரு அழுத்தம், அதட்டல் இருக்கும். எனக்கும் பிடிக்கும்.
இருவருக்கும் காப்பி எடுத்துக்கொண்டு வந்து சோபாவில் ஆவலுடன் உட்கார்ந்தான்.
*****
திரைப்படத்தில் இதன் பங்கு முக்கியமானது. நிறைய உதாரணங்களைக் காட்டலாம். ஆய்த எழுத்து படத்துக்காக சுஜாதா எழுதிய வசனங்கள் சிறப்பு.
"How about a coffee"
"அர்ஜுன் ! எனக்கு கல்யாணம் நிச்சயம் ஆகிடிச்சு! புரியுதா!"
"Just a coffee. ஒரு கப். புனிதம் கெடாத coffee. whats the problem?"

"கல்யாணங்கிற institution எல்லாம் சும்மா. சொஸைட்டிக்காக.. ஊர்ல ஒத்துக்கணும்னு.. நாமதான் சொஸைட்டிக்காக எதுவுமே செய்றதில்லையே! இதை மட்டும் எதுக்கு செய்யணும்?"

Comments

Popular posts from this blog

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிட...

கங்குபாய் கத்தியவாடி

நாம் எதையெல்லாம் விரும்பிச் செய்கிறோமோ அதன் மீது மரியாதையும் ஒருவிதமான பிடிப்பும் நமக்கு இருக்கவேண்டும். அதில் காமம் மட்டும் விதிவிலக்கல்ல. காமம் தந்து , உடல் தந்து, தானும் மகிழ்ந்து இன்னோர் உயிரை மகிழ்விப்பவரும், காதல், அன்பு, உள்ளமெலாம் உருக்கி உடலாய்த் தந்து மகிழ்விப்பவரும், இரண்டையும் ஒன்றாய்த் தந்து மகிழ்விப்பவரும் மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் ஆணாய் இருந்தாலும், பெண்ணாயிருந்தாலும், மாற்றுப் பாலினத்தவராக இருந்தாலும் மதிக்கப்படவேண்டியவர்கள். இந்த மதிப்பானது, உள்ளப் புரிதலினாலும், மனிதத்தினாலும், தகுந்த புத்தியினாலும், பெற்றுக்கொண்ட விஸ்தாரமான அறிவினாலும், நடத்தையினாலும், வார்த்தையினாலும் உள்ளுக்குள்ளே நிகழும் மாற்றத்தினாலும் எழவேண்டும். கங்குபாய் என்கிற இந்தப் படம், விலைமாதர்களின் வாழ்வியலைப் பேசுகிறது. விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு பெறுமதிக்கு ஏற்றபடி ஒவ்வொரு தரத்தில் இருக்கிறார்கள். நன்கு படித்து வேலைபார்க்கும் விலைமாதர்களும் இருக்கிறார்கள். பகுதியாய் விலைமாதராக இருப்பவர்களும் இருக்கிறார்கள். இப்போதும் அப்போதும், விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருந்தா...

அடியே அடியே என்னை எங்க நீ கூட்டி போற!

கிறிஸ்தவ தேவாலயங்களிலும் அவை சார்ந்த சூழலிலும், கிஸ்தவப் பாடல்களும் இசையும் இசைக்கப்படுவதைச் சிலர் கேட்டிருப்பீர்கள். அப்படிப் இசைக்கப்படும் இசையை Gospel music எனலாம். Gospel என்றால் Good message. பைபிளிலிருந்து கதைகளையும், கதாப்பாத்திரங்களையும் கடவுளின் செய்திகள் என்று நினைத்துச் சொல்லப்படுகிற விடயங்களையும் எளிமையான இசையோடு இசைத்துப் பாடப்படுகிற பாடல்கள். வரிகளுக்கு முக்கியத்துவம் உள்ள பாடல்கள். பெரும்பாலும் நம்பிக்கையை விதைக்கிற செய்திகளைத் தாங்கிவரும் இந்தப் பாடல்களை மனதில் நிறையத் துன்பத்தோடு சென்று பாடுகிறவர்களுக்கு தேவாலயத்தில் ஒரு நிம்மதி கிடைக்கிறது. இந்த இசை துன்பத்தை வாங்கி நம்பிக்கையைத் தருகிறது. பலரும் கடவுள்தான் நம்பிக்கை தந்ததாக நினைத்துக்கொள்வார்கள். பிரச்சாரகர் அழைப்பு விடுக்க மற்றவர்கள் பதிலுரைத்து ஆமோதிப்பார்கள். ஒரு chorus இல் பலரும் பதிலுரைப்பார்கள். இதுதான் இசையின் வார்த்தைகளின் பலம். குறிப்பிட்ட மதங்களிடையே இசை தோன்றினாலும், அவற்றைச் சார்ந்திருந்தாலும், அது அந்தந்த மனிதர்களின் சமூகத்தின் அகவுணர்ச்சி மற்றும் அழகுணர்ச்சியின் வெளிப்பாடே என்பதனை நாம் புரிந்துகொள்ள...