Skip to main content

கங்கை கொண்ட சோழபுரம் பயணம் - பகுதி 1

ஒரு வரலாற்று இடத்தின் சிறப்பை கேள்விப்பட்டு , அந்த தகவல்களை கொண்டு அந்த இடம் இப்படித்தான் இருக்குமென  மிகப்பெரிய  பிம்பத்தை முன்கூட்டியே ஏற்படுத்திக்கொண்டு அங்கு எப்போது செல்வோமென  எதிர்பார்த்திருப்பது ஒரு தனி சுகம் என்றால் , அதை நேரில் பார்த்து பிரமிக்கும் சந்தர்ப்பம் கிடைப்பது என்பது அதை விட அதீத மகிழ்ச்சியும் ஆச்சரியமும்  தரும் .

அப்படியானதொரு சந்தர்ப்பம் ,  இரண்டாவது முறையாக இந்தியாவுக்கு  பிரயாணம் செய்த போது கிட்டியது . இந்த தடவை கங்கை கொண்ட சோழபுரம் முதல்  தராசுரம் ,தஞ்சைப் பெருங்கோயில், மதுரை , குமரிமுனை  வரை செல்வதென  நீண்ட தெரிவை மேற்க்கொண்டேன்.

முதலாவது இலக்கு சென்னையிலிருந்து அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் நோக்கியதாக அமைந்திருந்தது . சென்னை நோக்கி மீண்டும் திரும்பி வரும் வழியில் மாமல்லபுரம் செல்லலாம் என எண்ணமிருந்தது.

வாகனம் கங்கை கொண்ட சோழபுரத்தை நெருங்கிக்கொண்டிருந்த போது சோழப்பேரரசு பற்றிய எண்ண  ஓட்டமும் மனதில் தொற்றிக்கொண்டது .

தரையில் தன் பேரரசை நிறுவியதோடு மட்டுமல்லாது மிகப்பெரிய கப்பற்படை கொண்டு கடல் தாண்டி மலேசியா , இலங்கை என அனைத்து நாடுகளையும் தன் வசமாக்கிய சோழ பேரரசை நெருங்குகிறேன் என்பது மனதில் பெருமையையும் , எதிர்பார்ப்பையும் அதே நேரம் ஏக்கத்தையும் கொடுத்திருந்தது .

ஒரு டைம் மெஷின் கிடைத்தால் , 1000 ஆண்டுகள் பின்னால் சென்று சோழர் கால தமிழர்களையும் , களிறுகளுடன் நிற்க்கும் சோழர் படைகளையும் காண வேண்டுமென ஆவல் எழுந்தது. மனதிற்க்குள்ளேயே ஒளியை விட  வேகமான ஒரு டைம் மெஷின் இருக்கிறதே . அதில் ஒரு 1000 வருடங்கள் பின்னால் செல்வது போல கற்பனை ஓடிக்கொண்டிருந்தது .

இந்நகரம் இராசேந்திர சோழனால் ,கங்கையை வெற்றி கொண்டதை  கொண்டாட கட்டப்பட்டது . இராசேந்திர சோழன் இந்தியாவின் கிழக்கு கடற்கரை முழுவதையும் வென்று கங்கையையும் வென்றதால் கங்கை கொண்ட சோழன் எனவும் அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது . 

பெரியதொரு கோட்டையின் வாயிலூடாக (சிதைந்திருந்தது ) உள் வீதியில் நுழைந்த போது பாரிய சிற்ப்பக்கலையும் கட்டடக்கலையும் மெய் சிலிர்க்க   வைத்தது .


ஏறக்குறையை 250 ஆண்டுகள் சோழர்கள் கங்கை கொண்ட சோழபுரத்தை (இப்போது ஜெயங்கொண்டம் ) தலைநகராக்கி ஆண்டார்கள் எனப்படுகிறது. தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்டு 20 ஆண்டுகளில் கங்கை கொண்ட சோழபுரம் கட்டப்பட்டது .

அழகுடன் 160 அடி உயர விமானத்துடன் பிரம்மாண்டமாக நின்ற கோவிலை பார்க்கும் போது சோழர்களின் கட்டிடக்கலை மெய் சிலிர்க்க வைத்தது. தஞ்சை பெருங் கோவில் பிரம்மாண்டமானது என்றால் கங்கை கொண்ட சோழபுரம் அழகு மிகுந்தது .




விமானத்தின் அமைப்பு நேர்கோடாக இல்லாமல் நெளிவுகளாக இருக்கும் . அதனால் தான் இதை பெண்மையின் அழகு கவர்ந்து இழுக்கிறது என்பார்கள் போல . இந்த கோயிலின் சிவலிங்கம்  4 மீட்டர் உயரமுடையது.


 சுற்றி இயற்கையால் கொடுக்கப்பட்ட அழகும் கோவிலை மேலும் அழகாக காட்டியது. நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த இடங்களை புகைப்பட கருவி வாங்கிக்கொண்டது. கூடவே நிறைய மேல்நாட்டு பிரஜைகளும்  சிற்ப வேலைப்பாடுகளில் மூழ்கியிருந்தனர் . நம்மவர்கள் அங்கு பெரும்பாலாக  இல்லை .


ஒரு வேளை  வரம் அள்ளித்தரும் சாமி,நினைத்தது நடக்கும்  என கட்டுக்கதைகள் கட்டப்பட்டு வியாபார உத்திக்குள்  சிக்காமல் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம் . 


மனது உள் வாங்கிக்கொண்ட  இதன் அழகை மூளையும் காலமும் நினைவு வைத்திருக்க சில புகைப்பட நினைவுகளையும் கொண்டு  அங்கிருந்து புறப்பட்டோம் .


எடுக்கப்பட்டபுகைப்படங்களில் சில ...



1000 வருட தமிழ் எழுத்துகள்


நந்தி






Comments

அடுத்த முறை தமிழ்நாட்டுக்கு வரும் பொழுது கண்டிப்பாக சொல்லவும் நண்பா .
அடுத்த முறை தமிழ்நாட்டுக்கு வரும் பொழுது கண்டிப்பாக சொல்லவும் நண்பா .
நிச்சயமாக நண்பரே :-)
இந்த இடத்தை பார்க்க வேண்டிய நேரம் வந்து விட்டது...

Popular posts from this blog

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு க

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிடத்தில் சரியாக கொண்டு போய் சேர்க்கின்றனர் .  சிறகுகள் அமைப்பின்

கண்ணாளனே...!

சங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன். அகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது.  மலையும் மலை சார்ந்த இடத்திலும்  நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது.  இந்தப் பாடல் காதல் வயப்பட்ட  பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச்  சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.  "நெருநல் எல்லை யேனல் தோன்றித் திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள இ