Skip to main content

விமர்சனம் - எந்திரன்- சுஜாதா ?! அறிவியல் ?!!

திரைப்படங்கள், சிறந்த படைப்பு என்பது வெறுமனே ஒரு தனிமனிதனை மட்டும் கொண்டு நிர்மாணிக்கப்படுவதில்லை. ஆனால்  எல்லா வியாபார நோக்கர்களும் சேர்ந்தால் ஒரு படம் எப்படி வரும் என்பது எந்திரனில் தெரிகிறது . வெறும் ரஜனி என்கிற மாயையை வைத்து ஒரு சிறந்த எழுத்தாளர் கற்பனையை  மழுங்கடிக்கும் நிகழ்வு எந்திரனில் நடந்தேறியிருக்கிறது . தொழில்நுட்பம் பாவித்தமை ,சுஜாதாவின் எழுத்தை பாவித்தமைக்கு மட்டுமே பாராட்டுகள் .

எந்திரனை அனைத்து திறமையுடனும் உருவாக்கும் விஞ்ஞானி ரஜனி , அதற்க்கு தேவை ஏற்ப்படும் போது உணர்வுகள் பற்றி  சொல்லி கொடுக்க ஐஸ்வர்யாராயை காதலிக்கிறது . இதனால் அதே விஞ்ஞானி ரஜனி அந்த எந்திர ரஜனியை அழிக்க ,அதே எந்திர ரஜனி வேறொரு விஞ்ஞானியால் இன்னொரு வில்லன் ரஜனியாக உருவெடுக்கிறார் . எல்லாமே ரஜனி மயம் . இது போதாதென்று அந்த ரஜனி உருவாக்கும் நூற்றுக்கணக்கான எந்திரன்களும் ரஜனி தான் . முழுவதுமாக ரஜனி தான் .அந்த கதையே ரஜனி கதை தான் . சுஜாதாவினது அல்ல .

படத்தின் முதல் பாதி நேர்த்தியாக சென்றது .பல இடங்களில் சுஜாதாவின் வசனங்கள்  மின்னியது . வீதி  போலிஸ்  உன்னுடைய முகவரி என்ன என எந்திரனிடம் கேட்க்க  எனக்கு முகவரி கிடையாது ஐ பி முகவரி தான் .192 .68 .௦.1. என்பது என்ன நக்கலா என்ற போது நிக்கல் என்பதும் சரி அனைத்தும் பாமரனையும் தொழில்நுட்பம்  அடையவேண்டும் என்ற ஒரே நோக்கில் சுஜாதாவின் எழுத்துக்கள் தெரிந்தன .ஆனால் திரைப்படம் எவ்வாறு என்பது நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் .

கடைசி இறுதி நிமிட தொழில்நுட்பம் சிறுபிள்ளைத்தனமாக இருந்தாலும் தொழில்நுட்பத்தை  பாவித்தமைக்கு பாராட்டுகள் . இதை தான் தேர்மினட்டர் ,அவதார் தொழில்நுட்ப்பவியலாலர்களிடமிருந்து எடுக்க முடிந்திருக்கிறது .

ரகுமானின் பாடல்கள் செவிவழி மட்டும் கேட்க்கும் போதே மிகவும் தரமாக இருந்தது ஆனால் வழமையான ஷங்கர் பாடல் காட்ச்சியமைப்புகளில் ரசனையற்ற தன்மையே வெளிப்பட்டது .
அதே பின்னாலே நூறு பேர் ஆடும் பாணி .இது தான் பிரம்மாண்டமா? இதுவரை மனிதர்கள் இப்போது நூறு எந்திரங்கள் .
பாடல்கள் ரகுமானால் உயர் தரத்தில் அமைக்கப்பட்டிருந்தாலும் காட்ச்சியமைப்புகள் கீழ்த்தரமான ரசனையை கொண்டவை . பணம் இருந்தால் யாரும் எடுக்க முடியும் என்ற காட்ச்சியமைப்புகள் சிறப்பானதாக இல்லை .

 தொப்புள் கோடி குழந்தையை சுற்றியவுடன்  பழைய பாட்டி கால முறை போல இதில் விலா எலும்பை நகர்த்தி பிரசவம் பார்க்கும் வழி  முறையை எந்திரன் செய்வது போல காட்சி  ஒன்று அமைக்கப்பட்டிருக்கும் . இதில் சுஜாதாவின் பங்கே இருப்பது தெரிகிறது . ஆனாலும் பாராட்டப்பட வேண்டிய காட்சி செருகல் .
சுஜாதாவின் என் இனிய இயந்திராவும் , மீண்டும் ஜீநோவும் வாசித்தவர்களுக்கு இன்னும் ஏமாற்றம் தான் ,...
இது முழுக்க முழுக்க மசாலா கலந்த ஒரு குறிப்பிட்ட ரசனை உள்ள ரசனையாளர்களை திருப்திப்படுத்த எடுக்கப்பட்ட படம் . எந்திரன் பற்றிய தகவலோ அறிவியலோ மக்களை போய் சேரவேண்டிய இடத்தில் ரஜனியே போய் சேர்ந்திருக்கிறார் . - இதை உலகத்தரத்துக்கு(இந்தியாவை தாண்டி ) ஏற்றி அவமானப்படுத்துவதன் காரணம் தெரியவில்லை .

Comments

எந்த ஊரில இதுக்குபேரு நடுநிலை விமர்சனம்?
எந்திரன்- ரசிகர்களுக்கு சுவீட்டு, எதிரிகளுக்கு வேட்டு. வயது திறமைக்கு தடை இல்லை என்பதற்கு ரஜினியின் வேகமும் ஐஸின் நடனமும் உதாரணமாக கூறலாம்.
சரியாக சொன்னீர்கள்
என்ன தலைவா.. நாங்கெல்லாம் படம் பாத்திட்டு நல்லாயிருக்குன்னு எழுதியிருகோம்... நீங்க...!!!!
நன்றி எப்பூடி ....//
நான் நடுநிலை விமர்சனம் என்று கூறியது ..ரஜனி ரசிகனாக இல்லாமல் சினிமா ரசிகனாக எழுதிய பதிவை ..

நன்றி ஜீவதர்சன் //
எந்த ரசிகர்களுக்கு சுவீட்டு ? ரஜனி ரசிகர்களுக்கு தானே ?
பாலாஜி சங்கர் said...
சரியாக சொன்னீர்கள்//
நன்றிகள் பாலாஜி
ஹாய் தல..
எங்க நான் பிழையா எழுதீட்டனோ என்று நினைத்தேன்..
நான் கரெக்ட்டுன்னு ப்ரூவ் ப‌ண்ணீட்டின்ங்க...
வாழ்த்துகள்...
இதே கருத்தை தான் நானும் சொன்னேன்.கன சனம் என்னை லூசா எண்டு வேற சொல்லீற்றாங்க.மொத்தத்தில இது impress பண்ணல.போட்ட பிலட் அப்புக்கு பெருசா காச சிலவழிச்சிருக்காங்க.தலைவர்ட ஸ்ரைல கொஞ்சம் பாத்தம்.ரஜனி ரசிகனா அது ஒரு குட்டி சந்தோசம்.அவ்ளோதான்.தமிழன் படைச்ச உலக தரம் எண்டு சொல்லி தமிழண்ட மனத்த வித்திடாதீங்க
TechShankar said…
Thanks 4 sharing Your Review - உங்கள் விமர்சனத்திற்கு நன்றி

by
TS



டாப் 60 ரோபோட் எந்திரன் ஸ்டில் படங்கள்
150 கோடி பணம் ஒரு வீண் செலவு
நம்ம ஊர்ல இன்னும் படிக்காத படிக்க முடியாத நிலைல இருக்க
ஒரு 1000 மாணவர்களை படிக்க வைத்து இருக்கலாம்.
சூப்பர் ஸ்டார்,சன் டிவி போன்ற பணம் இருக்கும் இடம் பணம் பெருகும்.,

அனைத்து நடிகர்களும் சூர்யாவை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மையை
சூர்யா - அஹரம் - விதை
http://enpakkangal-rajagopal.blogspot.com/2010/10/blog-post_3041.html

Popular posts from this blog

கங்குபாய் கத்தியவாடி

நாம் எதையெல்லாம் விரும்பிச் செய்கிறோமோ அதன் மீது மரியாதையும் ஒருவிதமான பிடிப்பும் நமக்கு இருக்கவேண்டும். அதில் காமம் மட்டும் விதிவிலக்கல்ல. காமம் தந்து , உடல் தந்து, தானும் மகிழ்ந்து இன்னோர் உயிரை மகிழ்விப்பவரும், காதல், அன்பு, உள்ளமெலாம் உருக்கி உடலாய்த் தந்து மகிழ்விப்பவரும், இரண்டையும் ஒன்றாய்த் தந்து மகிழ்விப்பவரும் மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் ஆணாய் இருந்தாலும், பெண்ணாயிருந்தாலும், மாற்றுப் பாலினத்தவராக இருந்தாலும் மதிக்கப்படவேண்டியவர்கள். இந்த மதிப்பானது, உள்ளப் புரிதலினாலும், மனிதத்தினாலும், தகுந்த புத்தியினாலும், பெற்றுக்கொண்ட விஸ்தாரமான அறிவினாலும், நடத்தையினாலும், வார்த்தையினாலும் உள்ளுக்குள்ளே நிகழும் மாற்றத்தினாலும் எழவேண்டும். கங்குபாய் என்கிற இந்தப் படம், விலைமாதர்களின் வாழ்வியலைப் பேசுகிறது. விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு பெறுமதிக்கு ஏற்றபடி ஒவ்வொரு தரத்தில் இருக்கிறார்கள். நன்கு படித்து வேலைபார்க்கும் விலைமாதர்களும் இருக்கிறார்கள். பகுதியாய் விலைமாதராக இருப்பவர்களும் இருக்கிறார்கள். இப்போதும் அப்போதும், விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருந்தா...

அடியே அடியே என்னை எங்க நீ கூட்டி போற!

கிறிஸ்தவ தேவாலயங்களிலும் அவை சார்ந்த சூழலிலும், கிஸ்தவப் பாடல்களும் இசையும் இசைக்கப்படுவதைச் சிலர் கேட்டிருப்பீர்கள். அப்படிப் இசைக்கப்படும் இசையை Gospel music எனலாம். Gospel என்றால் Good message. பைபிளிலிருந்து கதைகளையும், கதாப்பாத்திரங்களையும் கடவுளின் செய்திகள் என்று நினைத்துச் சொல்லப்படுகிற விடயங்களையும் எளிமையான இசையோடு இசைத்துப் பாடப்படுகிற பாடல்கள். வரிகளுக்கு முக்கியத்துவம் உள்ள பாடல்கள். பெரும்பாலும் நம்பிக்கையை விதைக்கிற செய்திகளைத் தாங்கிவரும் இந்தப் பாடல்களை மனதில் நிறையத் துன்பத்தோடு சென்று பாடுகிறவர்களுக்கு தேவாலயத்தில் ஒரு நிம்மதி கிடைக்கிறது. இந்த இசை துன்பத்தை வாங்கி நம்பிக்கையைத் தருகிறது. பலரும் கடவுள்தான் நம்பிக்கை தந்ததாக நினைத்துக்கொள்வார்கள். பிரச்சாரகர் அழைப்பு விடுக்க மற்றவர்கள் பதிலுரைத்து ஆமோதிப்பார்கள். ஒரு chorus இல் பலரும் பதிலுரைப்பார்கள். இதுதான் இசையின் வார்த்தைகளின் பலம். குறிப்பிட்ட மதங்களிடையே இசை தோன்றினாலும், அவற்றைச் சார்ந்திருந்தாலும், அது அந்தந்த மனிதர்களின் சமூகத்தின் அகவுணர்ச்சி மற்றும் அழகுணர்ச்சியின் வெளிப்பாடே என்பதனை நாம் புரிந்துகொள்ள...

குறுந்தொகைக் காதல்!

ஒரு மழைநாளில் குறுந்தொகைப் பாடலை வாசிப்பதுபோல சுகானுபவம் கிடையாது. அதிலும் ஒரு ஈரமான குறுந்தொகைப் பாட்டு அமைந்துவிடுவது வரம். இந்தப் பாடலைப் படிக்கும்போதே,  பிச்சியின் வாசத்தை ஈரக்காற்று சுமந்துவருகிறதென்றால், இதை எழுதியவருக்கும் தமிழுக்கும் வெற்றி என்று கொள்ளுங்கள். மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை  இரும்பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து  பெரும்பெயல் விடியல் விரித்துவிட் டன்ன  நறுந்தண் ணியளே நன்மா மேனி  மழைக்காலத்துல மலருற பிச்சியின் நீர் ஒழுகுகிற மொட்டுகள் எல்லாத்தையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு பனங்குடைல மூடி வைச்சுட்டு, அதை ஒரு அடைமழை பெய்கிற விடியற்காலைல திறந்துவிட்டதுபோல நன்மணமும் குளிர்ச்சியும் உடைய மேனி கொண்டவள் அவள். அவளை எப்பிடி நான் பிரிஞ்சிருப்பேன் . அவளைப் பிரிந்தா ல் என்னால் உயிர் வாழமுடியாது. 'சின்னப் பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம்' என்கிற வைரமுத்து வரிகள்போல கவலைகொள்கிறான் தலைவன். ஆனால் இதிலே வாசம்தான் அவனை வாட்டுகிறது. இதில் 'நறுந்தண்ணியள்‬' என்பது ஈர்ப்புள்ள சொல். காதலனின் மென்மையான அன...