Skip to main content

மரணம் -வாழ்க்கையின் பின்னரான வாழ்க்கை

மரணம் எனும் பதம் இன்னமும் இறை நம்பிக்கையை ஊன்றுவதற்கு இன்னும் சாதகமாக இருக்கிறது. ஆனாலும் விஞ்ஞானிகள் சௌகரியமாக எல்லாமே இறைவன் என ஒரு முடிவு எடுத்து விட்டு அமைதியாக இருப்பதில்லை  . சிந்தனை ஆற்றலை பரிமாணத்தின் உச்சத்தில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளவர்கள் .

மரணமும் கனவும் அன்றாடம் சந்திக்கும் ,ஆனால் மனித மனங்கள்  சிந்திக்கும் ஆற்றலை பயன்படுத்தாத  விடயங்கள் .


மரணத்தின் விளிம்பை தொட்டு வந்தவர்கள் பலர் உண்டு . மனித முயற்சியின்  உச்சத்தில் இருக்கும் விஞ்ஞானம் ,அறிவியல்  பரிமாணம் அடையாத கடவுள் மனங்களின் சௌகரியமும் ஆயுதமான மரணத்தை அடைய , அறிய முயற்சிகிறது .

வரைவிலக்கணம் கொடுக்க முடியாத மரணம் எனும்  பதம் இலகுவாக உடலை உயிர் விட்டு பிரிகிறது எனலாம் . உடல் என்று இருப்பது உண்மை ஆனால் உயிர் ?

உயிர் அல்லது மனது என்பார்கள் சிலர் .. மூளையும் செயல்ப்பாடு அற்றுப்போதல் முழுமையான மரணம் எனலாம் .ஆனால் உயிர் அப்படியே இருக்குமா ? அல்லது மேலே அலுவலகம் வைத்திருக்கும் கடவுளிடம் சென்று நரகம் ,சொர்க்கம் என செய்த வேலைகளை டேட்டா பேசில் பார்த்து கடவுள் தண்டனை கொடுப்பாரா ?

சமய ரீதியாகவும் ,விஞ்ஞான ரீதியாகவும் சற்று அலசுவோம் ......

மரணத்தை நெருங்கியவர்கள் (Near death experience )

அதாவது இறந்துவிட்டார்கள் என மருத்துவ ரீதியாக முடிவு செய்த பின்னர் ,சில நிமிடங்களில் மீண்டும் உயிர் பெற்று வந்தவர்கள் கூறிய கருத்துகள் கிட்டத்தட்ட ஒன்றே ...
1 . குகையினூடான பிரயாணம்
2 .அமைதியும் பிரகாசமான ஒளியும் நிரம்பிய இடம்
3 . ஒருவித சாந்தி ,இதுவரை உணராத அமைதி நிலை ...
4 . ஒன்றும் கேட்க்க முடியவில்லை ,ஆனால் பிரகாசமான ஒளி தெரிந்தது 

மருத்துவம் 
மருத்துவ வாதங்கள் வேறுபட்டு தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன . மூளையின் செயல்ப்பாடு இருக்கும் போது ,மருத்துவத்தின் போது அவர்களுக்கு கொடுக்கப்படும்  மருந்துகள் போன்றவை இவ்வாறான தூண்டல்களை ஏற்ப்படுத்தலாம்.


ஆனால் மருத்துவ ரீதியான ஆதாரங்களை இதில் திரட்டுவதில் மருத்துவர் பின் வான் லோமேல் (Pin van lommel ,cardiologist  Ph .D) முன்னணியானவர் .

மூளை நினைவுகளையும் ,ஆழ்மனதையும் உற்ப்பத்தி செய்கிறது . அந்த வகையில் அதன் செயல்ப்பாடு அற்ற நிலையில் மனத்தால் ஒரு வித மாயத்தோற்றம் (Illusion ) உணரப்படுகிறது என்கிறது சில மருத்துவ தரப்பு .

மனோதத்துவவியலாளர் பேராசிரியர் புரூஸ் க்ரேசன் (Bruce greson ) மரணத்தின் பின்னரான வாழ்க்கை , மரணத்தின் விளிம்பு போன்றவற்றை ஆராய்வதில் முனைப்பு காட்டும் இன்னொருவர் .

இவர் மரணத்தின் விளிம்பு வரை சென்று மீண்டு வந்தவர்களிடம் பெற்ற மேலும் பல குறிப்புகள் ....
1 .திரும்ப முடியாத ஒரு எல்லைகோட்டில் நிற்றல்
2 .உடல் தொடர்பான கவனத்தன்மையை இழத்தல்  .
3 .இன்னொரு பரிமாணத்துக்குள் நுழைந்தமை
4 . நேரம் நிற்ப்பதை உணர்தல்

இதில் முக்கியமான விடயம் சாதாரண வாழ்க்கையை விட அது மிகவும் அமைதி தன்மையாகவும் ஆனால் மிகவும் சக்தியானவர்களாகவும் இருந்திருக்கின்றனர் /உணர்ந்திருக்கின்றனர் .

உதாரணமாக சிலருக்கு தாம் இறந்து விட்டோம் என்பது தெரிந்திருந்திருக்கிறது .
1 . நேரம் ஆர்முடுகியது .
2 . தான் யார் என்ற உணர்வு இழப்பு
3 .பிரபஞ்ச அமைதி
சிலருக்கு தாம் வெளியில் மிதப்பதும் அவர்களை யாரோ இழுப்பதும் போன்ற உணர்வு ஏற்ப்பட்டுள்ளது  .

இதில் சிலருக்கு அமானுஷ்யமான பல விடயங்கள் நிகழ்திருக்கிறது .அதில் சிலரால் பல ஆயிரம்  வருடங்களுக்கு முன்னரான பார்வையையும் பல ஆயிரம் வருடங்களுக்கு பின்னரான பார்வையையும் பார்க்க முடிந்துள்ளது . ஆனால் இரண்டுமே ஒன்றாக இருந்துள்ளது .

இதை அறிவியலுடன்  ஒப்பிட முடியுமா ? அல்லது மூளையில் செயல்பாடுகள் தான் காரணமா ? இன்னொரு உலகத்தை இப்போதே அறியும் நோக்கோடு .... தொடரும் ..... 

Comments

Unknown said…
என்னய்யா இப்பிடி பயப்பிடுத்திறீங்க !!
விரைவில் மிகுதியையும் பதிவுசெய்யுங்கள்...

Popular posts from this blog

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு க

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிடத்தில் சரியாக கொண்டு போய் சேர்க்கின்றனர் .  சிறகுகள் அமைப்பின்

கண்ணாளனே...!

சங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன். அகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது.  மலையும் மலை சார்ந்த இடத்திலும்  நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது.  இந்தப் பாடல் காதல் வயப்பட்ட  பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச்  சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.  "நெருநல் எல்லை யேனல் தோன்றித் திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள இ