Skip to main content

விவேகானந்தர் சொன்ன கதைகள் ....

விவேகானந்தர் சாதாரண குருமார்கள் சுவாமிமார்கள் வழியில் அல்லாது தான் கடவுள் என்ற பேச்சுக்கு அப்பால் நீங்கள் நீங்கள் தான் சிறந்தவர்கள் என கூறியவர் . மிகவும் தைரியசாலி ஆனால் ஆழ்ந்த சிந்தனை உடையவர் . அவரிடம் ரசித்த சில கதைகள் ..


ஒரு முறை தனது தோழியுடன் குளக்கரையில் இருந்த போது அவள் குளத்தில் இருந்த நீரை தனது ஒரு கையால் அள்ளி எடுத்து வைத்துக்கொண்டு ....

" பார்த்தீர்களா இந்த நீர் எனது கைக்குள் அடக்கமாக உள்ளது, இது தான் காதலின் அடையாளம் " என்றாள் 

பொறுமையாக பார்த்து விட்டு சிந்திக்கலானார் விவேகானந்தர் ...

உள்ளே இருக்கும் அந்த நீர் கையை அதே போல திறந்து இலேசாக விடும் போது எப்போதும் அதனுள்ளேயே இருக்கும் ...

ஆனால் அதை அழுத்தி பிடிக்க முற்ப்படும் போது அது காணும் முதல் துவாரத்திநூடோ வெடிப்பினூடோ  வெளியேறும் .

அதே போல தான் அன்பும் காதலும் , முழுமையான சுதந்திரம் அன்பிற்கு இருக்க வேண்டும் . முடிந்தவரை கொடுக்க வேண்டும் ..எதிர்பார்ப்பில்லாது ..

யார் மீதாவது அன்பு செளுத்துவோராக இருந்தால்....

"அன்பை கொடுங்கள் -எதிர்பார்க்க வேண்டாம் "
"அறிவுரை சொல்லலாம் - கட்டளையிட வேண்டாம் "
"கேளுங்கள் - பிடிவாதம் வேண்டாம் "

எந்தவித எதிர்பார்ப்பும் எல்லையுமற்ற அரவணைப்பையும் அன்பையும் வெளிக்காட்டுங்கள் ..

விவேகானந்தர்  மிகவும் நகைச்சுவை உணர்வும் , தைரியமும் உடையவர் கூட ..ஆனால் சிந்தித்து  பொறுமையாக , ஆழமாக முடிவெடுப்பார் ...

விவேகானந்தர் ரயில் பிரயாணத்தின் போது சௌகரியமாக செல்வார் எப்போதும் . இராண்டாம் வகுப்பை தேர்வு செய்து ரயிலில் சென்றார் .

அங்கிருந்த வெள்ளைகாரனுக்கு இவரை பிடிக்கவில்லை .. காவி உடை அணிந்தவர்கள் மீது அவன் மதிப்பு குறைவாகவே இருந்தது . எங்கே ஆங்கிலம் தெரியப்போகிறது என ஆங்கிலத்திலும் திட்டினான் .

விவேகானந்தர் குட்டி தூக்கம் ஒன்று போட்ட  பின்னர் அவரின் சப்பாத்துக்களை தூக்கி அவன் வெளியே எறிந்து விட்டான் ..

சிறிது நேரத்தில் எழுந்த விவேகானந்தர் அவன் பிடிக்காமல் எறிந்திருப்பான்  என  உணர்ந்தார் . சிறிது நேரத்தில் வெள்ளைக்காரன்  உறங்க சென்ற பின் அவன் மேலங்கியை விவேகானந்தர் வெளியே எறிந்து விட்டார் .

வெள்ளைக்காரன் எழுந்து தன் மேலங்கி எங்கே ன்று கேட்க்க " அது எனது சப்பாத்துகளை தேடி போய் விட்டது" என ஆங்கிலத்தில் கூறினார் .

Comments

roshaniee said…
\\வெள்ளைக்காரன் எழுந்து தன் மேலங்கி எங்கே ன்று கேட்க்க " அது எனது சப்பாத்துகளை தேடி போய் விட்டது" என ஆங்கிலத்தில் கூறினார்\\

ஆத்திரப்படுபவனுக்கு நல்ல பதில் .
BoobalaArun said…
அருமையான நகைச்சுவை உணர்வு மிக்க மனிதர்.

ரொம்ப நல்ல இருக்கு

Popular posts from this blog

கங்குபாய் கத்தியவாடி

நாம் எதையெல்லாம் விரும்பிச் செய்கிறோமோ அதன் மீது மரியாதையும் ஒருவிதமான பிடிப்பும் நமக்கு இருக்கவேண்டும். அதில் காமம் மட்டும் விதிவிலக்கல்ல. காமம் தந்து , உடல் தந்து, தானும் மகிழ்ந்து இன்னோர் உயிரை மகிழ்விப்பவரும், காதல், அன்பு, உள்ளமெலாம் உருக்கி உடலாய்த் தந்து மகிழ்விப்பவரும், இரண்டையும் ஒன்றாய்த் தந்து மகிழ்விப்பவரும் மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் ஆணாய் இருந்தாலும், பெண்ணாயிருந்தாலும், மாற்றுப் பாலினத்தவராக இருந்தாலும் மதிக்கப்படவேண்டியவர்கள். இந்த மதிப்பானது, உள்ளப் புரிதலினாலும், மனிதத்தினாலும், தகுந்த புத்தியினாலும், பெற்றுக்கொண்ட விஸ்தாரமான அறிவினாலும், நடத்தையினாலும், வார்த்தையினாலும் உள்ளுக்குள்ளே நிகழும் மாற்றத்தினாலும் எழவேண்டும். கங்குபாய் என்கிற இந்தப் படம், விலைமாதர்களின் வாழ்வியலைப் பேசுகிறது. விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு பெறுமதிக்கு ஏற்றபடி ஒவ்வொரு தரத்தில் இருக்கிறார்கள். நன்கு படித்து வேலைபார்க்கும் விலைமாதர்களும் இருக்கிறார்கள். பகுதியாய் விலைமாதராக இருப்பவர்களும் இருக்கிறார்கள். இப்போதும் அப்போதும், விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருந்தா...

அடியே அடியே என்னை எங்க நீ கூட்டி போற!

கிறிஸ்தவ தேவாலயங்களிலும் அவை சார்ந்த சூழலிலும், கிஸ்தவப் பாடல்களும் இசையும் இசைக்கப்படுவதைச் சிலர் கேட்டிருப்பீர்கள். அப்படிப் இசைக்கப்படும் இசையை Gospel music எனலாம். Gospel என்றால் Good message. பைபிளிலிருந்து கதைகளையும், கதாப்பாத்திரங்களையும் கடவுளின் செய்திகள் என்று நினைத்துச் சொல்லப்படுகிற விடயங்களையும் எளிமையான இசையோடு இசைத்துப் பாடப்படுகிற பாடல்கள். வரிகளுக்கு முக்கியத்துவம் உள்ள பாடல்கள். பெரும்பாலும் நம்பிக்கையை விதைக்கிற செய்திகளைத் தாங்கிவரும் இந்தப் பாடல்களை மனதில் நிறையத் துன்பத்தோடு சென்று பாடுகிறவர்களுக்கு தேவாலயத்தில் ஒரு நிம்மதி கிடைக்கிறது. இந்த இசை துன்பத்தை வாங்கி நம்பிக்கையைத் தருகிறது. பலரும் கடவுள்தான் நம்பிக்கை தந்ததாக நினைத்துக்கொள்வார்கள். பிரச்சாரகர் அழைப்பு விடுக்க மற்றவர்கள் பதிலுரைத்து ஆமோதிப்பார்கள். ஒரு chorus இல் பலரும் பதிலுரைப்பார்கள். இதுதான் இசையின் வார்த்தைகளின் பலம். குறிப்பிட்ட மதங்களிடையே இசை தோன்றினாலும், அவற்றைச் சார்ந்திருந்தாலும், அது அந்தந்த மனிதர்களின் சமூகத்தின் அகவுணர்ச்சி மற்றும் அழகுணர்ச்சியின் வெளிப்பாடே என்பதனை நாம் புரிந்துகொள்ள...

ஸ்கொட்லாந்தில் நிக்கோலா ஸ்டெர்ஜன் வெற்றி! அவர்களுடைய தேர்தல் முறை எப்படி வேலை செய்கிறது?

ஸ்கொட்லாந்து தேர்தலில் SNP எனப்படுகிற ஸ்கொட்லாந்து தேசிய கட்சி, தொடர்ந்து நான்காவது முறையாக வெற்றி பெற்றிருக்கிறது. பாராளுமன்றத்தில், 129 இல் 64 இடங்களைப் பெற்றிருக்கிறது.  2016ம் ஆண்டுத் தேர்தலில் பெற்றதை விடவும் இந்தமுறை  ஒரு இடம் அதிகமாகப் பெற்றிருந்தாலும், பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை விடவும் ஒரு இடம் குறைவாகப் பெற்றிருக்கிறது.  ஸ்கொட்லாந்தின் தேர்தல் முறை எந்த ஒரு கட்சியும் இலகுவில் பெரும்பான்மையைப் பெற்றுவிட முடியாதபடி அமைக்கப்பட்டது. எல்லாக் கட்சிகளும் நாடாளுமன்றத்தில் இணைந்து மக்களுக்காக வேலை செய்யவேண்டும் என்கிற வகையில் அமைக்கப்பட்டது.  ஸ்கொட்லாந்து நாடாளுமன்றத்தில் மொத்தம் 129 இடங்கள். ஆனால் மொத்தத்  தொகுதிகளோ வெறும் 73 தான்! அப்படியானால் மிகுதி உறுப்பினர்களை எப்படித் தெரிவு செய்கிறார்கள்?   வாக்குச் செலுத்தும்போது இரண்டு நிறங்களில் வாக்குச்சீட்டு வழங்கப்படும். ஒன்று, ஊதா நிறத்தில் உள்ள படிவத்தில் உங்கள் தொகுதியில் உங்களுக்குப் பிடித்த உறுப்பினரைத் தெரிவு செய்யலாம். இன்னொன்று, peach நிறத்தில்...