Skip to main content

வீராவின் காதல் - மணிரத்னம்


பேஸ்புக்கில் எழுதிய பதிவு
ஆண்டாளுக்கு, கண்ணன்மீது நெருக்கமான காதல் உணர்வு இருந்தது. இதை, 'Limerence' என்றும் சொல்லலாம். வேட்கை அதிகமுள்ள காதல். அவனுடைய மார்பில் அணிந்த மாலையைக் கொணர்ந்து என் மார்பில் புரட்டுங்கள் என்று கேட்பாள். அவன் மார்பு தொட்டாடிய பூக்களைத் தன் மார்புமீது பூசிக்கொள்வாள். 
இன்னும் கொஞ்சம் மோகத்தோடு, அவனின் அரையில் தவளும் ஆடையைக் கொண்டுவந்து அங்கமெங்கும் வீசுங்கள் என்பாள். அந்த வாசத்திலே தன் வாட்டம் தணியும் என்று சொல்வாள். அவள் நினைவு மற்றும் உடலெங்கும் அவனின் நினைவே சூழ்ந்திருக்கும். 
வைரமுத்து எழுதிய, "துருவி என்னைத் துளைச்சுப்புட்ட தூக்கம் இப்போ தூரமய்யா
தரைக்கு வெச்சு நான் படுக்க அழுக்கு வேட்டி தாருமய்யா" என்கிற வரிகளில் எல்லாம் கொஞ்சம் ஆடையின் நேசம் உண்டு. விஞ்ஞானத்தின்படி, ஆடையில் ஆடும் வியர்வை வாசனைகளை இந்தக் காதல் நெருக்கம் விரும்பும்.

எப்பொழுதும் உடலைத் தொட்டாடும் ஆடைகளென்றால் காதலுக்கு மிகப்பிடித்தம். உள்ளாடை இறுக்கங்கள்மீது முத்தம் வைக்குமளவு உம்மத்தம் வளர்க்கும். காதலியின் உள்ளாடைகளை, உள்ளங்கைக்குள் செலுத்தித் துவைப்பதையும் விரும்பும்.
பிரிவுத் துயரால் வாடும்போதும், கற்பனைகள் வளர்த்துக் காத்திருக்கும்போதும் அந்த ஆடைகள் மீதான மோகம் இன்னும் அதிகமாகும். அவளிடமிருந்து கொஞ்சம் தள்ளிநின்று கனவுகளை வளர்க்கும்போது, "உன் ஆடையின் பொன் நூலிலே என் ஜீவனும் துடிக்கும்" என்கிற கவிதை வரியின் பொருள் விளங்கும்.
இந்த நெருக்கமான காதல் உணர்வினைக் கொண்டு, ராவணன் சீதையின் ஆடைமீது கொள்ளும் மோகத்தின் அழகினை அடுத்தடுத்த காட்சிகளில் அழகாய் மொழிந்திருப்பார் மணிரத்னம்.

Comments

Popular posts from this blog

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிட...

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒர...

கங்குபாய் கத்தியவாடி

நாம் எதையெல்லாம் விரும்பிச் செய்கிறோமோ அதன் மீது மரியாதையும் ஒருவிதமான பிடிப்பும் நமக்கு இருக்கவேண்டும். அதில் காமம் மட்டும் விதிவிலக்கல்ல. காமம் தந்து , உடல் தந்து, தானும் மகிழ்ந்து இன்னோர் உயிரை மகிழ்விப்பவரும், காதல், அன்பு, உள்ளமெலாம் உருக்கி உடலாய்த் தந்து மகிழ்விப்பவரும், இரண்டையும் ஒன்றாய்த் தந்து மகிழ்விப்பவரும் மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் ஆணாய் இருந்தாலும், பெண்ணாயிருந்தாலும், மாற்றுப் பாலினத்தவராக இருந்தாலும் மதிக்கப்படவேண்டியவர்கள். இந்த மதிப்பானது, உள்ளப் புரிதலினாலும், மனிதத்தினாலும், தகுந்த புத்தியினாலும், பெற்றுக்கொண்ட விஸ்தாரமான அறிவினாலும், நடத்தையினாலும், வார்த்தையினாலும் உள்ளுக்குள்ளே நிகழும் மாற்றத்தினாலும் எழவேண்டும். கங்குபாய் என்கிற இந்தப் படம், விலைமாதர்களின் வாழ்வியலைப் பேசுகிறது. விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு பெறுமதிக்கு ஏற்றபடி ஒவ்வொரு தரத்தில் இருக்கிறார்கள். நன்கு படித்து வேலைபார்க்கும் விலைமாதர்களும் இருக்கிறார்கள். பகுதியாய் விலைமாதராக இருப்பவர்களும் இருக்கிறார்கள். இப்போதும் அப்போதும், விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருந்தா...