Skip to main content

அருத்தி

முற்றத்தில் இறங்கிய குழந்தையின், முறையற்ற முதல் நடைபோல, மனக் களிப்பும் பித்தமும் கொண்டேனடி
உந்தன் சாய்மனைக் கழுத்தில் சாய்ந்துகொள்ளப் பற்பல செந்தமிழ் வார்த்தைகள் உதிர்த்தேனடி
முன்சென்மம் நான் முகர்ந்த, முன்தானை வாசம் காட்டி, நான் துஞ்ச ஒரு கதை சொல்லடி
பின், உன் குரலால் தமிழ் பிதற்றி, நற்செவியின்பம் தந்தெனை மடியடியில் கிடத்தி வெல்வாயடி
கட்டளைத் தலைவி உந்தன் கட்டுக்குழல் சுருக்கை, என் கழுத்திலிட்டுக் காமம் கொல்வாயோ. இல்லை, கருவறை இருள்காட்டி எனை ஆற்றுப்படுத்தும் செயல்பல செய்குவாயோ
எவை புரிகினும், சிற்றம்பலம் வாழும் ஈசன் பதம் வைத்து நெஞ்சை அணைத்து ஆட்கொள்ளடி. துயர் எரித்து, நீறுபோல் எனை அள்ளி நெற்றியில் பூசிக்கொள்ளடி
மூர்க்கத்தில் நிகழும் வழுவும், முத்தத்தில் நிகழும் ஒழுக்கும், இதில் புனிதமெது பாவமெதுவென்று இங்கு எவர் சொல்வாரடி. அன்பின் அரங்கிலே புலன் ஆயிரம் திறந்து பூஜிக்க, பேறொன்று வேண்டுமடி
இப்படி, பூக்களும் பணியும்படி மென்மைத் தமிழ் உரைத்து உன்னைச் சேருவது இன்பமடி
பாசுரங்கள் பல நெஞ்சை அள்ளுவதுபோல் உனை அள்ள, ஆயிரம் பசுங்கரங்கள் வேண்டுமடி
கருத்திலும் சேருவதே பெருங்காமமென்று, என் உயிர்கொள்ளக் காத்திருக்கும் உயர்பெண்மை நீயுமன்றோ
அதைக் கண்ணுற்று நோக்கத் தெரிந்த கருவக் கவிஞன் நானுமன்றோ
செல்வத்தில் உயர்ந்தது பெண்செல்வமுமன்றோ, அதைப் பண்ணொடு பயிலவே, நான்கு வேதத்திலும் உயர்ந்த நற்றமிழ் வேதங்கள் பல உரைத்திட்டேன் கேளாய்.

Comments

Popular posts from this blog

குறுந்தொகைக் காதல்!

ஒரு மழைநாளில் குறுந்தொகைப் பாடலை வாசிப்பதுபோல சுகானுபவம் கிடையாது. அதிலும் ஒரு ஈரமான குறுந்தொகைப் பாட்டு அமைந்துவிடுவது வரம். இந்தப் பாடலைப் படிக்கும்போதே,  பிச்சியின் வாசத்தை ஈரக்காற்று சுமந்துவருகிறதென்றால், இதை எழுதியவருக்கும் தமிழுக்கும் வெற்றி என்று கொள்ளுங்கள். மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை  இரும்பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து  பெரும்பெயல் விடியல் விரித்துவிட் டன்ன  நறுந்தண் ணியளே நன்மா மேனி  மழைக்காலத்துல மலருற பிச்சியின் நீர் ஒழுகுகிற மொட்டுகள் எல்லாத்தையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு பனங்குடைல மூடி வைச்சுட்டு, அதை ஒரு அடைமழை பெய்கிற விடியற்காலைல திறந்துவிட்டதுபோல நன்மணமும் குளிர்ச்சியும் உடைய மேனி கொண்டவள் அவள். அவளை எப்பிடி நான் பிரிஞ்சிருப்பேன் . அவளைப் பிரிந்தா ல் என்னால் உயிர் வாழமுடியாது. 'சின்னப் பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம்' என்கிற வைரமுத்து வரிகள்போல கவலைகொள்கிறான் தலைவன். ஆனால் இதிலே வாசம்தான் அவனை வாட்டுகிறது. இதில் 'நறுந்தண்ணியள்‬' என்பது ஈர்ப்புள்ள சொல். காதலனின் மென்மையான அன...

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிட...

வைரமுத்து : தேடல் உதிர்த்த வரிகள்

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பிறந்தநாள் இன்று. கவிஞனுக்குக் கவிதை எழுதி வாழ்த்துவதா !  நினைச்சுப் பார்க்க  முடியவில்லை .அதனால் இந்தப் பதிவு.  வரிகளை / இசையோடு சேர்ந்துகொள்ளும் தமிழ்ச் சொற்களின்  அழகை   இரசிக்கும்  பெரும்பாலானோர்களிடம் போய் எந்த வரிகள் அதிகம் பிடிக்கும் எனக் கேட்டால், உடனே ' நறுமுகையே நறுமுகையே' என்று பதில் வரும். விதிவிலக்காக யாராவது இருந்தால் மன்னிக்க :) . அந்தளவுக்கு இலக்கியப் பாடல் வரிகளையும் சினிமாப் பாடல்களில் தைரியமாகப் புகுத்தி இரசிக்க  வைத்தவர்.  'தீண்டாய் மெய் தீண்டாய்' பாடல் தொடங்கி  'நறும்பூக்கள் தேடும் திருத் தும்பியே' வரை சில பாடல்களை சங்கத் தமிழ் கலந்து எழுதினார். காதலன் படத்தில் சில நிமிடங்கள் வரும் பாடலில் குற்றாலக் குறவஞ்சியையும், தீண்டாய் மெய் தீண்டாய் பாடலின் ஆரம்பத்தில்  குறுந்தொகையையும் அப்படியே பயன்படுத்தியிருப்பார். வரவிருக்கும்  கோச்சடையானில் கூட  இலக்கியத் தமிழில்  பாடல் எழுதுவதாகப் பகிர்ந்திருந்தார். இலக்கியத்தையும் அவர் பயன்படுத்திய உவமைகளையும் விட்டுவிட்டு கொஞ்சம் விஞ்...