Skip to main content

யானை மரம்


கடந்த மாதம் யாழ்ப்பாணக் குடாநாட்டைச் சேர்ந்த ஏழு தீவுகளில் ஒன்றான நெடுந்தீவுப் பகுதிக்குப் போயிருந்தேன். இந்தத் தீவு யாழ்ப்பாண நகரிலிருந்து மிகவும் தொலைவில் அமைந்திருக்கிறது. 'குறிகட்டுவான்' எனும் பகுதியிலிருந்து கடல் வழியாக நீண்டதூரம் பயணிக்கவேண்டும். இது இந்தியாவின் ராமேஸ்வரத்திலிருந்து 38 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது.

கடலும் கடல் சார்ந்த இடமுமாகையால் அங்கு வாழ்கிற  மக்கள் சுவர்களை அமைப்பதற்குக்கூட பவளப்பாறைகளைப் பயன்படுத்துகின்றனர். அங்கு இடிந்த நிலையில்  காணப்படும்  டச்சுக்காரர்களின் கோட்டைகூட பவளப்பாறைகளால் அமைக்கப்பட்டிருக்கிறது. 

இந்தத் தீவில்  பல நூற்றாண்டுகள் பழமையான மிகப்பெரிய பெருக்கு மரமொன்று நிற்கிறது. இதை "யானை மரம்" என்றும் அழைப்பார்கள். 'Adansonia' எனப்படுகிற தாவரவியல் பேரினத்தைச் சார்ந்தது. இந்தத் தாவரவியல் இனத்தைச் சார்ந்த மரங்கள் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு மேலே  வாழும். இந்த மரத்துக்கென்று சிறப்பான தன்மை இருக்கிறது. இந்த மரம் மழை பெய்யும் பொழுது ஏராளமான நீரை தனது தண்டுப் பகுதியில் சேமித்து வைத்துக்கொள்ளும். கிட்டத்தட்ட 120,000 லீட்டர் நீரை சேமித்து வைத்துக்கொள்ளக்கூடியது. வெளித்தோற்றத்துக்கு பட்டை உறுதியாக இருந்தாலும் உள்ளே பஞ்சு போல மெதுமெதுன்னு இருக்கும். இந்த இயல்பால் அதிகளவு நீரை சேமித்து வைத்துக்கொள்கிறது. அதிக வரட்சியான காலங்களிலும் தாக்குப்பிடிக்கும். அப்படியான காலங்களில் இந்த மரம் அதிகமாக யானையின் தாக்குதலுக்கு உள்ளாவதாகச் சொல்லப்படுகிறது. யானை ஒரு மிகப்பெரிய துளையிட்டு பட்டையை உரித்து நீரை எடுத்துக்கொள்ளும். இப்போதும் பத்துப் பேர் உள்ளே நுழையக்கூடிய அளவுக்கு மிகப்பெரிய துளை காணப்படுகிறது. ஆபிரிக்கக் காட்டுப் பகுதியில் யானைக்கும் இந்த மரத்துக்கும் இடையில்  போரே நடக்கும் என்பார்கள்.  

இந்த மரத்தைப் பற்றிக் கேள்விப்பட்டபோது  ஒரு குறுந்தொகைப் பாடல் நினைவுக்கு வந்தது.

நசைபெரிது உடையர் நல்கலும் நல்குவர்
பிடிபசி களைஇய பெருங்கை வேழம்
மென்சினை யாஅம் பொளிக்கும்
அன்பின தோழி அவர்சென்ற ஆறே

"தோழி, உன் காதலன் உன்மேல மிகுந்த அன்புடையவர். நீர் இல்லாத பாலை நிலத்துல தன் பெண் யானையின் பசியைப் போக்க ஆண் யானை என்ன செய்யும் தெரியுமா? பெரிய துதிக்கை கொண்டு யாமரத்தைத் துளைசெய்து, சிரமப்பட்டுப் பட்டையை உரிச்சு, அதுலருந்து வர்ற தண்ணிய தன்னோடை பெண் யானைக்குக் கொடுக்கும். இதை அவர் போற வழியில் பார்ப்பார். அப்போ உன்னையும் பாதுகாக்கணுங்கிற நெனப்பு அவருக்கு வரும். அப்போ திரும்பி வந்திடுவார். கவலைப்படாதே"ன்னு தலைவிக்கு ஆறுதல் சொல்வதாக அந்தப் பாடல் அமைகிறது.ஆனால், இது யாமரம் கிடையாது. யாமரம் போலவே இதன் உட்புறம் நீர்த்தன்மை மிக்கது. ஆகவே யானை உரித்து உண்ணும் . இதன் பழம் மருத்துவக்குணம் மிக்கது.
இந்தப் பெருக்கு மரம் பெரும்பாலும் ஆபிரிக்கா, இந்தியா, இலங்கை, அவுஸ்திரேலியா போன்ற பிரதேசங்களில் காணப்படுகிறது. இந்த நில அமைப்புகள் எல்லாம் ஒருகாலத்தில் ஒன்றாக இணைந்து இருந்ததற்கு இதுவும் ஒரு சான்று என்பது சில ஆய்வாளர்கள் வெளியிட்ட கருத்து. ஆனால், "இந்த மரமானது ஏழாம் நூற்றாண்டு அளவில் அரேபியர்களால் கொண்டுவரப்பட்டது என நம்பப்படுகிறது" என்று பதிவு செய்திருக்கிறார்கள். இவை இந்த நில அமைப்புகளில் இயல்பாகவே வளரக்கூடியவை என்பதால் இந்தச் செய்தி ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டியது.

Comments

Popular posts from this blog

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு க

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிடத்தில் சரியாக கொண்டு போய் சேர்க்கின்றனர் .  சிறகுகள் அமைப்பின்

கண்ணாளனே...!

சங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன். அகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது.  மலையும் மலை சார்ந்த இடத்திலும்  நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது.  இந்தப் பாடல் காதல் வயப்பட்ட  பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச்  சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.  "நெருநல் எல்லை யேனல் தோன்றித் திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள இ