Skip to main content

முத்தாடு: முத்த இலக்கணம்





கவிஞர் வைரமுத்து எழுதிய "சுத்தி சுத்தி வந்தீக" என்கிற பாடல் காதலோடு இயைந்த காமத்தை அழகியலாக உரைக்கும். "முத்தாடும் ஆசை முத்திப்போக" என்றுவிட்டு, எங்கெல்லாம் முத்தமிட்டுக்கொள்வோம் என, அன்பானவர்கள் உரையாடிக்கொள்வதுபோல  எழுதியிருப்பார்.

என் காது கடிக்கும் பல்லுக்கு 
காயம் கொடுக்கும் வளைவிக்கு 
மார்பு மிதிக்கும் காலுக்கு 
முத்தம் தருவேன்  

மார்பு மிதிக்கும் காலுக்கு முத்தம் தருவது என்பது காதலைத் தொழும் வகையைச் சார்ந்தது. "உன் உடல் மீதும், உன் உயிர் மீதும் மரியாதை வைத்து உன்னைத் தொழுகிறேன். இத்தனை காலமும் உன்னைச் சுமந்த பாதங்கள் மீது எனக்குக் காதல்." என்று சொல்லாமல் சொல்வதுதான் பாத முத்தம். ஆனால், காது கடிக்கும் பற்களுக்கு ஏன் முத்தம் தரவேண்டும்! வெறுமனே, இதழ்கள் உரசிக்கொள்வது மட்டுமே  முத்தத்திற்கு இலக்கணம் ஆகாது என்கிறது நம் இலக்கியங்கள்.

இலக்கியம் கூறும் முத்தத்திலேயே பலவகை உண்டு. "சிவந்த உன் கடைக்கண் பார்வையையும் உன் கூரிய பற்களிலே ஊறும் நீரினையும் சுவைக்காமல் உன்னுடைய அன்புக்குரியவனால் இருக்க முடியாது. விரைவில் உன்னைத் தேடி வருவான்" என்று தோழி தலைவிக்கு ஆறுதல் சொல்வதாக ஒரு அகநானூற்றுப் பாடல் சொல்கிறது.

"கடை சிவந்து ஐய அமர்த்த உண்கண் நின் வை ஏர் வால் எயிறு ஊறிய நீர்"

இதையே வள்ளுவன், "பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலெயிறு ஊறிய நீர்" என்று சொல்லுகிறார். அதாவது, செல்ல மொழி பேசுபவளின் பற்களில் ஊறிய நீரின் சுவை, தேனோடு பால் கலந்தாற்போல இருக்கும் என்கிறார். அவள் உச்சரிக்கும் மொழியை உண்பது போலல்லவா ஆழமான முத்தம் இது. முத்தமென்பது உயிர் உண்ணவேண்டும். உயிர்க் காதல் இல்லையென்றால் இந்த ஆழம் சாத்தியமாகாது. "ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி" என்கிற படத்தில் ஒரு பாடல் இந்தக் குறளோடு ஆரம்பமாகும்.

பற்களில் ஊறிய நீரினை உண்பது பற்றி மட்டும் இலக்கியம் சொல்லவில்லை. பற்களையே காதலர்கள் முத்தமிட்டுக்கொள்வார்கள் என்கிறது. நற்றிணையில் ஒரு பாடலில், "நின் கூர் எயிறு உண்கு" என்கிறான் சங்கத் தலைவன். "நீ இன்று காவல் காப்பதற்கு தினைப்புனத்திற்கு வருவாய் தானே? நானும் அங்கே வருகிறேன். இருவரும் சிரித்து விளையாடி காதல் கொள்ளலாம். நீ வருவதை உறுதி செய்து அந்த நற்செய்தியை நீ எனக்குச் சொன்னால் உன் பற்களில் முத்தம் கொடுத்து, இதழ்களால் சுவைப்பேன் பெண்ணே" என்கிறான். முத்து இடையில் உருள்வது எப்படி இருக்குமோ அதுபோல பற்களை மென்மையாகச் சுவைப்பது இன்பம் தரும்.

இதைப் படிக்கும்போது, "ஒல்லிக்குச்சி உடம்புக்காரி"யில் வருகிற, "வேணாம் இனி வாய்பேச்சு. வாய்க்குள்ளே முத்து குளிக்கலாம். பற்களே முத்தாய் மாறலாம்" என்கிற வைரமுத்துவின் வரிகள் நினைவு வரக்கூடும்.

மேலும், " மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்செவ்வி தலைப்படு வார்." என்கிற வள்ளுவன் வரிகளை இங்கே நினைவுபடுத்த வேண்டும். காதல் இன்பம் மலரைவிடவும் மென்மையானது. அதனை உணர்ந்து அதன் நற்பயனை அனுபவிக்கக் கூடியவர்கள் சிலரே" என்பதே அதன் பொருள்.

Comments

Popular posts from this blog

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிட...

கங்குபாய் கத்தியவாடி

நாம் எதையெல்லாம் விரும்பிச் செய்கிறோமோ அதன் மீது மரியாதையும் ஒருவிதமான பிடிப்பும் நமக்கு இருக்கவேண்டும். அதில் காமம் மட்டும் விதிவிலக்கல்ல. காமம் தந்து , உடல் தந்து, தானும் மகிழ்ந்து இன்னோர் உயிரை மகிழ்விப்பவரும், காதல், அன்பு, உள்ளமெலாம் உருக்கி உடலாய்த் தந்து மகிழ்விப்பவரும், இரண்டையும் ஒன்றாய்த் தந்து மகிழ்விப்பவரும் மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் ஆணாய் இருந்தாலும், பெண்ணாயிருந்தாலும், மாற்றுப் பாலினத்தவராக இருந்தாலும் மதிக்கப்படவேண்டியவர்கள். இந்த மதிப்பானது, உள்ளப் புரிதலினாலும், மனிதத்தினாலும், தகுந்த புத்தியினாலும், பெற்றுக்கொண்ட விஸ்தாரமான அறிவினாலும், நடத்தையினாலும், வார்த்தையினாலும் உள்ளுக்குள்ளே நிகழும் மாற்றத்தினாலும் எழவேண்டும். கங்குபாய் என்கிற இந்தப் படம், விலைமாதர்களின் வாழ்வியலைப் பேசுகிறது. விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு பெறுமதிக்கு ஏற்றபடி ஒவ்வொரு தரத்தில் இருக்கிறார்கள். நன்கு படித்து வேலைபார்க்கும் விலைமாதர்களும் இருக்கிறார்கள். பகுதியாய் விலைமாதராக இருப்பவர்களும் இருக்கிறார்கள். இப்போதும் அப்போதும், விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருந்தா...

அடியே அடியே என்னை எங்க நீ கூட்டி போற!

கிறிஸ்தவ தேவாலயங்களிலும் அவை சார்ந்த சூழலிலும், கிஸ்தவப் பாடல்களும் இசையும் இசைக்கப்படுவதைச் சிலர் கேட்டிருப்பீர்கள். அப்படிப் இசைக்கப்படும் இசையை Gospel music எனலாம். Gospel என்றால் Good message. பைபிளிலிருந்து கதைகளையும், கதாப்பாத்திரங்களையும் கடவுளின் செய்திகள் என்று நினைத்துச் சொல்லப்படுகிற விடயங்களையும் எளிமையான இசையோடு இசைத்துப் பாடப்படுகிற பாடல்கள். வரிகளுக்கு முக்கியத்துவம் உள்ள பாடல்கள். பெரும்பாலும் நம்பிக்கையை விதைக்கிற செய்திகளைத் தாங்கிவரும் இந்தப் பாடல்களை மனதில் நிறையத் துன்பத்தோடு சென்று பாடுகிறவர்களுக்கு தேவாலயத்தில் ஒரு நிம்மதி கிடைக்கிறது. இந்த இசை துன்பத்தை வாங்கி நம்பிக்கையைத் தருகிறது. பலரும் கடவுள்தான் நம்பிக்கை தந்ததாக நினைத்துக்கொள்வார்கள். பிரச்சாரகர் அழைப்பு விடுக்க மற்றவர்கள் பதிலுரைத்து ஆமோதிப்பார்கள். ஒரு chorus இல் பலரும் பதிலுரைப்பார்கள். இதுதான் இசையின் வார்த்தைகளின் பலம். குறிப்பிட்ட மதங்களிடையே இசை தோன்றினாலும், அவற்றைச் சார்ந்திருந்தாலும், அது அந்தந்த மனிதர்களின் சமூகத்தின் அகவுணர்ச்சி மற்றும் அழகுணர்ச்சியின் வெளிப்பாடே என்பதனை நாம் புரிந்துகொள்ள...