Skip to main content

வைரமுத்து : தேடல் உதிர்த்த வரிகள்

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பிறந்தநாள் இன்று. கவிஞனுக்குக் கவிதை எழுதி வாழ்த்துவதா !  நினைச்சுப் பார்க்க  முடியவில்லை .அதனால் இந்தப் பதிவு.  வரிகளை / இசையோடு சேர்ந்துகொள்ளும் தமிழ்ச் சொற்களின்  அழகை   இரசிக்கும்  பெரும்பாலானோர்களிடம் போய் எந்த வரிகள் அதிகம் பிடிக்கும் எனக் கேட்டால், உடனே ' நறுமுகையே நறுமுகையே' என்று பதில் வரும். விதிவிலக்காக யாராவது இருந்தால் மன்னிக்க :) . அந்தளவுக்கு இலக்கியப் பாடல் வரிகளையும் சினிமாப் பாடல்களில் தைரியமாகப் புகுத்தி இரசிக்க  வைத்தவர். 

'தீண்டாய் மெய் தீண்டாய்' பாடல் தொடங்கி  'நறும்பூக்கள் தேடும் திருத் தும்பியே' வரை சில பாடல்களை சங்கத் தமிழ் கலந்து எழுதினார். காதலன் படத்தில் சில நிமிடங்கள் வரும் பாடலில் குற்றாலக் குறவஞ்சியையும், தீண்டாய் மெய் தீண்டாய் பாடலின் ஆரம்பத்தில்  குறுந்தொகையையும் அப்படியே பயன்படுத்தியிருப்பார்.வரவிருக்கும்  கோச்சடையானில் கூட  இலக்கியத் தமிழில்  பாடல் எழுதுவதாகப் பகிர்ந்திருந்தார்.

இலக்கியத்தையும் அவர் பயன்படுத்திய உவமைகளையும் விட்டுவிட்டு கொஞ்சம் விஞ்ஞானம் பற்றி பேசுவோம் . விஞ்ஞானம் என்றால் ஒன்றும் சிக்கலான தகவல்களை தந்துவிட்டுப் போகவில்லை . அடிப்படை விஞ்ஞானத்தைக் கொஞ்சம் கற்பனையோடு ,காதலோடு சொல்லியிருப்பார் . கொஞ்சம் சிக்கலான தகவல்களை விளக்கப் போவதில்லை . ஒரு தொகுப்பாக மட்டுமே அமையும்.  சில வரிகள் நேரடியாகவே புரிந்துகொள்ளக் கூடியவை.


தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து 
என்னோடு நீ பாடி வா சிந்து  


என்று 'இளமைக் காலங்கள்' படத்திலேயே ஆரம்பித்து விட்டார்.

------------------------------------------------------------------------------------------------------------

'கடல் கொண்ட நதியோ முகம் தனை இழக்கும்
நான் உன்னில் கலந்தால் புது முகம் கிடைக்கும் 


பாடல் : கண்டுகொண்டே கண்டுகொண்டேன் 


------------------------------------------------------------------------------------------------------------
நீலம் மட்டும் இழந்துவிட்டால்
வானில் ஒரு கூரையில்லை 


பாடல் : பூ கொடியின் புன்னகை  


------------------------------------------------------------------------------------------------------------

நீலத்தைப் பிரித்துவிட்டால்
வானத்தில் ஏதும் இல்லை
 

பாடல் : வண்ணம் கொண்ட வெண்ணிலவே 

----------------------------------------------------------------------------------------------------------------------------------

விதையொன்று உயிர் கொள்ள

வெப்பம் காற்று ஈரம் வேண்டும் 

காதல் வந்து உயிர் கொள்ள
காலம் கூட வேண்டும். 


பாடல் : முதன் முறை கிள்ளிப் பார்த்தேன் 


------------------------------------------------------------------------------------------------------------

என் உள்ளம் வெறுங் கோப்பை தான் தடுமாறும் கண்ணே 

உன் காதல் நீர் ஊற்றினால் ஆடாது பெண்ணே 

பாடல் : என் செஞ்சில் தூங்கவா நிலாவே

----------------------------------------------------------------------------------------------------------------------------------

நிலம் கடலாகும்
கடல் நிலமாகும்
நம் பூமி என்றும் அழிவதில்லை 


பாடல் : நாளை உலகம் இல்லையென்றால்

----------------------------------------------------------------------------------------------------------------------------------


கடலை வானம் கொள்ளை அடித்தால்
மேகம் என்று அர்த்தம்
 


பாடல் : கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்

----------------------------------------------------------------------------------------------------------------------------------


ஓடுகிற தண்ணியில் ஆக்ஸிஜன் மிக அதிகம்
பாடுகிற மனசுக்குள் ஆசைகள் மிக அதிகம். 


பாடல் : காதல் அணுக்கள்

----------------------------------------------------------------------------------------------------------------------------------



வெளிய பூத்து நீ உள்ள காய்க்கிற கடலக்காடு நீ 

பாடல் : அழகான ராட்சசியே

----------------------------------------------------------------------------------------------------------------------------------


தத்தி நடக்குற வாத்துக்கூட்டம் தண்ணிக்குள்ள முட்ட போடுமடி
வாத்து முட்டயப் போல உதட்டில் வந்த சொல்லு நெஞ்சில் முங்குதடி 
பாடல் : தாஜ்மகால் படப் பாடல் 

------------------------------------------------------------------------------------------------------------

பூகம்ப வேளையிலும்
இரு வான்கோழி கலவி கொள்ளும் 
பாடல் : குளிருது குளிருது 

------------------------------------------------------------------------------------------------------------

காட்டு முயலுக்கு பனி பிடிக்கும்
கானக்குயிலுக்கு வெயில் பிடிக்கும் 

பாடல் : குச்சு குச்சு ராக்கம்மா

------------------------------------------------------------------------------------------------------------

இதயம் துடிப்பது நின்றாலும்
இரண்டோர்  நிமிடம் உயிர் இருக்கும்
 

பாடல் : ஜீன்ஸ் படப் பாடல்  


------------------------------------------------------------------------------------------------------------
அழகிய நிலவில் ஆக்ஸிஜன் நிரப்பி
அங்கே உனக்கொரு வீடு செய்வேன்.
 

பாடல் : அன்பே அன்பே

------------------------------------------------------------------------------------------------------------

வேறு வரிகள் ஏதும் நினைவில் இருப்பின் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Comments

இதயம் துடிப்பது நின்றாலும் இரண்டோர் நிமிடம் உயிர் இருக்கும்
நன்றி கார்த்திக் கவி. சேர்க்கப்பட்டுள்ளது. :)

Popular posts from this blog

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு க

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிடத்தில் சரியாக கொண்டு போய் சேர்க்கின்றனர் .  சிறகுகள் அமைப்பின்

கண்ணாளனே...!

சங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன். அகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது.  மலையும் மலை சார்ந்த இடத்திலும்  நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது.  இந்தப் பாடல் காதல் வயப்பட்ட  பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச்  சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.  "நெருநல் எல்லை யேனல் தோன்றித் திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள இ