Skip to main content

காலத்தில் பயணிக்கும் துகள்


இந்த நேரத்தை நான்காவது பரிணாமமாக சிந்தித்தால் மட்டுமே உணரமுடியும் . உதாரணமாக நீங்கள் இந்த ஆக்கத்தை ஒவ்வொரு சொல்லாக படிக்கும் போதும் நேரம் இறந்த காலத்துக்கு சென்று கொண்டிருக்கிறது .நேரத்தில் நாம் பயணிக்கிறோம் .

 மனிதன் பயணித்த அப்பலோ விண்கலம் 25 ,000 mph எனும் வேகத்தை தான் இறுதியாக அடைந்தது.ஒளியின் வேகத்தில் பயணிக்க இதை விட கிட்டத்தட்ட 2000 மடங்கு வேகம் வேண்டும். அதுவும் சாத்தியமாகும் ,ஆனால் காலம் செல்லும். 

உண்மையில் நேரத்தில் இறந்தகாலத்துக்கோ,எதிர்காலத்துக்கோ பயணிப்பதில்  இது மாத்திரமல்ல பிரச்சனை .பரடொக்ஸ்(கிராண்ட்  பாதர்,மேட் சயன்டிஸ்ட் )  ,வோர்ம் ஹோல், லூப் பிரச்சனை என்றெல்லாம் பல பிரச்சனைகள். 

ஆனால் மனிதன் தன்னால் பயணிக்க முடியாவிட்டாலும் கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் அணு துகள்கள் பயணிக்க கூடிய அளவு உலகின் மிகப்பெரிய துகள்களை முடுக்கி விடும்( particle accelerator ) மையம் சுவிசில் ஜெனீவாவில் அமைக்கப்பட்டுள்ளது .


அடித்தளத்தில் 16 மைல்கள் தூரமுள்ளதான வட்டவடிவில் அந்த சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது .அந்த துகள்களுக்கு சக்தியை வழங்கும் போது ஒரு செக்கனிலேயே பூச்சியத்திலிருந்து 60 ,௦௦௦ mph வரை அது ஆர்முடுக்கபடும் .

அதற்கு வழங்கும் சக்தியை மேலும் மேலும் அதிகரிக்கும் போது ஒரு செக்கனில்  11 ,000 தடவைகள் அந்த வளையத்தை(16 மைல்கள்) சுற்றி வருகின்றன .

கிட்டத்தட்ட இது ஒளியின் வேகம் .ஆனால் முழுதாக ஒளியின் வேகத்தை பெறமுடியா விட்டாலும் ,ஒளியின் வேகத்தில் 99 .99 சதவீதத்தை அடைந்துவிடும் .

இதன் போது அவை நேரத்தில் பயணிக்க தொடங்கிவிடுகின்றன .மிகவும் குறுகிய நேரம் இருக்க கூடிய துகள் பை மேசன்ஸ்(pi-mesons ) ஒரு சில நனோ செக்கனில் கலைந்துவிடும் .ஆனால் இவை நேரத்தில் பயணிக்க தொடங்கியதும் முனனர் இருந்ததை விட 30 மடங்கு நேரம் அதிகமாக இருக்கிறது .


இந்த கணிப்பின் படி பௌதீகவியலாளர்கள் இதை ஏன் நேர இயந்திரமாக பாவிக்க கூடாது என கேள்வி எழுப்பி உள்ளனர் .இதில்   இறந்த காலத்துக்கோ  எதிர்காலத்துக்கோ  செய்தியை  அனுப்பி  முயற்ச்சிக்கலாம்  என்பது  அவர்களது  கருத்து .

Comments

தமிழில் விளக்கிய விதம் அருமை.மொழியும் கைகூடி வந்திருக்கிறது." அப்படி துகள்களை ஒளி வேகத்தில் சுற்றவைத்தால்/செலுத்தினால்" என்ன ஆகும் என்பதையும் விளக்கியிருக்கலாம்.
அடுத்த பதிவு ..?!
பாஸ்...காலம் எப்படிச் செலவாகிறது என்பதனை அருமையாக விளக்கியுள்ளீர்கள்..

நீங்கள் இந்தப் பதிவைப் படிக்கும் போது...சூப்பர் சகோ.
தகவலை தமிழில் தந்தமைக்கு காலம் தாழ்த்தாது நன்றீ.. வாழ்த்துக்கள்
தகவலை தமிழில் தந்தமைக்கு காலம் தாழ்த்தாது நன்றீ.. வாழ்த்துக்கள்
கணேஷ் said…
நல்ல விசயங்கள்..நன்றி.
நன்றி சின்னப்பயல் ,மதுரை சரவணன் ,நிரூபன் ,கணேஷ் :)

Popular posts from this blog

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிட...

கங்குபாய் கத்தியவாடி

நாம் எதையெல்லாம் விரும்பிச் செய்கிறோமோ அதன் மீது மரியாதையும் ஒருவிதமான பிடிப்பும் நமக்கு இருக்கவேண்டும். அதில் காமம் மட்டும் விதிவிலக்கல்ல. காமம் தந்து , உடல் தந்து, தானும் மகிழ்ந்து இன்னோர் உயிரை மகிழ்விப்பவரும், காதல், அன்பு, உள்ளமெலாம் உருக்கி உடலாய்த் தந்து மகிழ்விப்பவரும், இரண்டையும் ஒன்றாய்த் தந்து மகிழ்விப்பவரும் மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் ஆணாய் இருந்தாலும், பெண்ணாயிருந்தாலும், மாற்றுப் பாலினத்தவராக இருந்தாலும் மதிக்கப்படவேண்டியவர்கள். இந்த மதிப்பானது, உள்ளப் புரிதலினாலும், மனிதத்தினாலும், தகுந்த புத்தியினாலும், பெற்றுக்கொண்ட விஸ்தாரமான அறிவினாலும், நடத்தையினாலும், வார்த்தையினாலும் உள்ளுக்குள்ளே நிகழும் மாற்றத்தினாலும் எழவேண்டும். கங்குபாய் என்கிற இந்தப் படம், விலைமாதர்களின் வாழ்வியலைப் பேசுகிறது. விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு பெறுமதிக்கு ஏற்றபடி ஒவ்வொரு தரத்தில் இருக்கிறார்கள். நன்கு படித்து வேலைபார்க்கும் விலைமாதர்களும் இருக்கிறார்கள். பகுதியாய் விலைமாதராக இருப்பவர்களும் இருக்கிறார்கள். இப்போதும் அப்போதும், விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருந்தா...

அடியே அடியே என்னை எங்க நீ கூட்டி போற!

கிறிஸ்தவ தேவாலயங்களிலும் அவை சார்ந்த சூழலிலும், கிஸ்தவப் பாடல்களும் இசையும் இசைக்கப்படுவதைச் சிலர் கேட்டிருப்பீர்கள். அப்படிப் இசைக்கப்படும் இசையை Gospel music எனலாம். Gospel என்றால் Good message. பைபிளிலிருந்து கதைகளையும், கதாப்பாத்திரங்களையும் கடவுளின் செய்திகள் என்று நினைத்துச் சொல்லப்படுகிற விடயங்களையும் எளிமையான இசையோடு இசைத்துப் பாடப்படுகிற பாடல்கள். வரிகளுக்கு முக்கியத்துவம் உள்ள பாடல்கள். பெரும்பாலும் நம்பிக்கையை விதைக்கிற செய்திகளைத் தாங்கிவரும் இந்தப் பாடல்களை மனதில் நிறையத் துன்பத்தோடு சென்று பாடுகிறவர்களுக்கு தேவாலயத்தில் ஒரு நிம்மதி கிடைக்கிறது. இந்த இசை துன்பத்தை வாங்கி நம்பிக்கையைத் தருகிறது. பலரும் கடவுள்தான் நம்பிக்கை தந்ததாக நினைத்துக்கொள்வார்கள். பிரச்சாரகர் அழைப்பு விடுக்க மற்றவர்கள் பதிலுரைத்து ஆமோதிப்பார்கள். ஒரு chorus இல் பலரும் பதிலுரைப்பார்கள். இதுதான் இசையின் வார்த்தைகளின் பலம். குறிப்பிட்ட மதங்களிடையே இசை தோன்றினாலும், அவற்றைச் சார்ந்திருந்தாலும், அது அந்தந்த மனிதர்களின் சமூகத்தின் அகவுணர்ச்சி மற்றும் அழகுணர்ச்சியின் வெளிப்பாடே என்பதனை நாம் புரிந்துகொள்ள...