Skip to main content

எந்திரன் - சரியாக போய் சேருமா ?

உயர் தொழில்நுட்பத்தில் ஒரு திரைப்படம் அதிக செலவில் எடுக்கப்படும் போது வர்த்தக ரீதியில் அதை வெற்றியடைய செய்யும் கட்டாயத்தில் தயாரிப்பாளர் இருக்க(அதில் தவறில்லை ) , ஷங்கர்  மீதான விமர்சனங்களும் ஒரு புறம் இருக்க , தமிழில் அறிவியல் திரைப்படம் எனும் கோணத்தில் பார்க்கும் போது அனைத்தையும் உடைத்துப்போட்டு விடுகிறது இத்திரைப்படம் .

தமிழ் அறிவியல் எழுத்தில் எதிர்காலமாகவும் நிஜத்தில்  இறந்தகாலமாக திகழும்  என் இனிய எழுத்தாளர் சுஜாதாவின் கதை "என்  இனிய இயந்திரா" , எந்திரன் திரைப்படமாக  பரிணாம வளர்ச்சி அடைந்ததன் விளைவு  பட்டி தொட்டி எங்கும் குப்பன் ,சுப்பன் வரை எந்திரனையும் எந்திரன் பற்றிய அறிவியலையும் எடுத்துச்செல்லும் என்பதில் ஐயமில்லை .ஆனால் அந்த எந்திரன் ரஜனிகாந்தாக செல்லுமா அல்லது தொழிநுட்பப நிஜ எந்திரனாக அறிவியல்  சார்ந்து  செல்லுமா என்பதே இன்றைய கேள்வி .


அறிவியல் திரைப்பட வெற்றிக்கு கோவில் படியில்  முட்டியால் நடந்து சென்ற ரசிகர்கள் ..


சுஜாதாவின் என் இனிய இயந்திராவில் ஹீரோ என்று யாரும் கிடையாது . சிபி ,நிலா ,ரவி , ஜீனோ கதாப்பாத்திரங்கள் ஜீவா எனும் நாட்டின் தலைவருக்கு எதிராக , அவரின் கொடுமைகளுக்கு எதிராக செயல்படுவது போல அந்த கதை நகர்கிறது . அந்த விஞ்ஞான புனைகதை 2022 இல் இடம் பெறுவது போல 1986 இல் எழுதியிருந்தார் . இதில் ஜீனோ ஒரு இயந்திர நாய் . முழுவது கணணி எந்திர மயம், இலக்கங்களிலேயே அனித்தும் இருக்கும் என பல விஞ்ஞான விளக்கங்கள் , கருத்துகள் என் இனிய இயந்திராவில் வாசிக்க வசிக்க இனிமையும் வியப்பும் நிறைந்திருக்கும் .

சுஜாதாவின் எழுத்து அறிவியலை அப்படியே பிரதிபலிப்பது மிக கடினம் . அப்படியே பிரதிபலிக்க முனைந்தாலும் தமிழ் திரையுலகம் மசாலா எனும் மந்திரன் கொண்டு அதை அழித்துவிடும்  . அதில் தவறும் இல்லை .தமிழர்களின் இன்றைய தேவை மசாலா தான் .. 7 பாடல்களை(35 நிமிடங்கள் ) திணிக்க வேண்டிய கட்டாயம் வேறு  இதில் .

ஆனால் சுஜாதா கதையும் ,அறிவியலும் திரைப்படத்தில் சிதைந்து போகலாம் . அறிவியல் படத்துக்கு படம் வெளி வர முதலே சிலர் கொடுத்த விமர்சனங்களும் , ஷங்கர்  ,ரஜனி மீதிருக்கும் வெறுப்புமோ இத்திரைப்படத்தை மறைத்தாலும் சுஜாதாவின் நூல்களுக்கு வழிகாட்டி விட்டதால் எந்திரன் தமிழ் அறிவியலில் நுழையும் . சுஜாதாவின் கனதியான எழுத்தை இத்திரைப்படம்  பாதியில் இழந்தது நிவர்த்தி செய்ய முடியாதது .


ஒரு வேளை இந்த திரைப்படம் வெறும் ரஜனி படமாக தமிழர்களை அடையலாம் . அவ்வாறான உத்திகளே படம் வெளிவர முதலே கையாளப்பட்டு வருகின்றன . இதுவரை அறிவியல் தொடர்புடைய எந்த நடவடிக்கையும் , விளம்பரமும்  இடம்பெறவில்லை .வெறும் பிரம்மாண்ட (செலவில் ) இயக்குனர் நாயகன் ஷங்கர் இந்த படத்தில் கூற வரும் செய்தியை சுஜாதா இல்லாமல் சரியாக பிரதிபலிப்பாரா என்பது சிந்திக்க வேண்டியது . சுஜாதாவின் எழுத்து பாமரனையும்  அறிவியல் தன்மையோடு சிந்திக்க வைக்கும் . அனைவரையும் சிந்திக்க வைக்கும் .

சுஜாதா வசன வாசனை  சில பட ற்றேயிலரின் பிரதி பலித்தது " என்ன நக்கலா ? சிட்டி இயந்திரன் "இல்லை நிக்கல் ,போல்ட் நட்டெல்லாம் நிக்கல் பண்ணது " என்று சொல்லும் .

வரவேற்க தக்க அறிவியல் திரைப்படம் , ரஜனியாலேயே இவளவு பிரபலம் , ஆனால் முழு ரஜனி படமாக, மசாலாவாக  மக்களை அடையாமல் விட்டால் நல்லது . ஆனால் இன்னும் இத்திரைப்பட பின்னணியில் வாழ்ந்து கொண்டிருக்கும் உண்மை கதாநாயகன் என் இனிய சுஜாதா ..

Comments

Valaakam said…
சுப்பர்... அறிவியலை.. இலகுதமிழில் மக்களிடம்( எங்களிடம்) கொண்டுவந்து சேர்த்தவர் எமது சுஜாத்தா சேர் தான்...
அவரின் கதையை கருவாக வைத்து எந்திரன் உருவாகினாலும்... சன் பிக்ஷர் என்ற வலைக்குள் இருப்பதாலும்..இது அறிவியலைத்தாண்டி ஒரு கொமர்ஷியல் படமாகத்தான் அமையும் என நானும் நினைக்கிறேன்.. :(
நன்றி .. கொஞ்சம் வசனங்கள் சுஜாதாவும் எழுதியிருப்பதால் , சுஜாதாவின் எழுத்தில் இருந்து எடுத்திருப்பதால் கொஞ்ச கட்ச்சிகள் சுஜாதா பாணியில் அமையும் என்று எண்ணலாம்...
என்ன சொன்னாலும் குரு நாதர் கு(க)ருநாதர் தான். புத்தகத்தின் கதையை அப்படியெ சங்கர் எடுத்திரக்கமாட்டார். என்ன இருந்தாலும் ஹொலிவுட் படம் பார்க்காத சிலருக்க இது பப்படம் தான்...

Popular posts from this blog

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு க

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிடத்தில் சரியாக கொண்டு போய் சேர்க்கின்றனர் .  சிறகுகள் அமைப்பின்

கண்ணாளனே...!

சங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன். அகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது.  மலையும் மலை சார்ந்த இடத்திலும்  நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது.  இந்தப் பாடல் காதல் வயப்பட்ட  பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச்  சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.  "நெருநல் எல்லை யேனல் தோன்றித் திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள இ