Skip to main content

மண்ணில் விண்மீன்கள் - மழலை பூக்கள்- தொலைந்த திரைப்படம்

சில பதிவுகள் காணாமல் போவது போல சில படங்களும் காணாமல் போவதுண்டு .. அதற்க்கு காரணமில்லாமல் இல்லை .. 3 இடியட்ஸ் படம் போலவே ஒரு அருமையான படைப்பு தான் அமீர்கானின் தரே சமீன் பர்(Tare zameen par ).. குப்பைகளுக்கு நடுவே கமல் போலவே சிந்தனை உடைய படைப்பாளி அமீர் கான்.. இந்த படம் தமிழ் வடிவிலும் உள்ளது . இந்த படத்திற்கு விமர்சனம் எழுத எனக்கு தகுதியே இல்லை .. தயவு செய்து பார்க்காதவர்கள் பாருங்கள் .

இந்த படம் மழலைகளின் வாழ்க்கை விதையிலேயே கிள்ளி எறியப்படுவதை
உணர்த்துகிறது .. கல்வி முறையையும் அன்பையும் உணர்த்துகிறது .. இலங்கை இந்திய கல்வி முறைகளுக்கு விழுந்த செருப்படி இந்த படம் .. இந்த பாடல் தமிழில் கேட்க்கும் போதுமிக மிக கவர்ந்தது .. கேளுங்கள் .. வரிகள் நான் எழுதியதால் சிலவை தவறவிட்டிருப்பேன் ..
பெற்றோர்கள் சமூகம் எவ்வாறு குழந்தைகளை புரிந்துகொள்ள வேண்டும் என்று கூறும் திரைப்படம் ...
பார்க்க வேண்டிய காட்ச்சியும் பாடலும் ...காட்சி மாத்திரம் வேறு (காட்ச்சிக்கு நன்றி )
லோட் ஆகினால் யூ டியூபில் சென்று பார்க்கவும்

யார் இந்த பாக்கள் ?
வேரில்லா பூக்கள்
விடியாத பகல்கள்
சுடரில்லா அகல்கள்
அன்பை தேடி அலையும் கலை மானின் கண்கள்
ஓடாத தேர்கள்
உறவில்லா மனங்கள்
தொலைந்து போகவோ....
மண்ணில் விண்மீன்கள்..

எப்போதும் மங்காத சூரிய பூக்கள்
பொன் வண்ண ஆற்றில் குதித்தாடும் மீன்கள்
மனிதத்தின் நேயங்கள் காணாத கண்கள்
சுற்றம் நடப்பு தேடியே துடிக்கின்ற உயிர்கள்
தொலைந்து போகவோ.....
மண்ணில் விண்மீன்கள் ...!!

கற்ப்பனை மேடையில் ஆடி பாடும் இங்கு
எல்லோர் கனவிலும் தேடி வர்றாதே பகையே ஓடி
எத்தனை நிறங்கள் மாறி மாறி
மின்னிற வண்ணத்து பூச்சிக்காரி

எதோ ஆசை நெஞ்சில் உருளும்
எதோ எண்ணி நாட்கள் நகரும் இன்பம் தேடி உலகிலே
தொலைந்து போகவோ...........
மண்ணில் விண்மீன்கள்..!!!

காரிருள் ராத்திரி எட்டிப்பாருங்கள்
காற்றினில் தீயிது எல்லை கோடில்லை
உலகமே இவை ஒதுக்கி வைத்தாரே
படிகம்போல உள்ளே உள்ள எண்ணம் தெரியுது
வீணையின் நாதம் போல் பேச்சு இனிக்குது
இசைகளின் உயிர்ப்பாய் மழலையின் சிரிப்பு நம்ம்மை இழுக்கும்

துள்ளும் காற்று... தூய ஊற்று
இது இறைவன் தாலாட்டு
இதன் வினையோ இமையமே
தொலைந்து போகவோ....
மண்ணில் விண்மீன்கள் .... !!!

தேடுங்கள் கண்ணாலே ...
தேன் சிந்தும் பூவை
ஈரைந்து மாதம் புடம் போட்ட பொன்னை
அழியாது வாழும் கல்வெட்டு பூக்கள்
சூடாத பூக்கள்
சுருதியில்லா பண்கள்
தொலைந்து போகவோ...
மண்ணில் விண்மீன்கள் !!!

போலே பேசீடுவார்
நதி அலை போலே ஆடீடுவார்
கேள்விக்கணைகளை தொடுத்தே எல்லோரை பந்தாடீடுவார்
சிரிப்பால் கலக்கிடுவார்
சிறகுகள் இன்றி பறந்திடுவார்
அருள் ஒளி போலே வந்தே விதியை மாற்றிடுவார்
நீரினில் ஆடும் நிலவினை போல்
வாசனை வீசும் மலரினை போல்
வாழ்த்திடும் குழந்தைகள் நாளை உலகை மாற்றீடுவார்

மனையில் போடும் குட்டிதூக்கம் போல்
மனசுக்குள் வீசும் தென்றலை போல்

தொலைந்து போகவோ ..........
தொலைந்து போகவோ .............

தொலைந்து போகவோ மண்ணில் விண்மீன்கள் மிகவும் உருக்கியது .. ஷன்கர் மகாதேவன் குரலில் ....
இந்த படத்துக்கு சிறந்த தயாரிப்பாளர் விருது அமீர்கானுக்கும் .. சிறந்த நடிகர் அந்த சிறுவனுக்கும் கிடைத்தது ..

தொலைந்து போகவோ இந்த பதிவு :)
ஓட்டை மறக்காமல் போடுங்கள்

Comments

Riyas said…
நல்லா எழுதியிருக்கிங்க வாழ்த்துக்கள்..
நானும் இப்படத்தைப்பற்றி எழுதியிருக்கேன் பாருங்கள்..
"வாங்க பாடசாலை போகலாம்"

http://riyasdreams.blogspot.com/2010_05_01_archive.html
நன்றி
Riyas

வாசித்தேன் .. நன்றாக உள்ளது உங்கள் எழுத்து . படத்தை அப்படியே கொண்டு வந்துள்ளீர்கள் .. மிகவும் அருமையான படம்

Popular posts from this blog

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு க

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிடத்தில் சரியாக கொண்டு போய் சேர்க்கின்றனர் .  சிறகுகள் அமைப்பின்

கண்ணாளனே...!

சங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன். அகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது.  மலையும் மலை சார்ந்த இடத்திலும்  நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது.  இந்தப் பாடல் காதல் வயப்பட்ட  பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச்  சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.  "நெருநல் எல்லை யேனல் தோன்றித் திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள இ