Skip to main content

ஜோதிடம் - அறிவோம் உண்மைகள் - ஒரு குட்டி கதையும்

வாழ்க்கையின் நிகழ்வுகள் ஒன்றுடனொன்று தொடர்புபட்டவை. இதை தான் சமாந்தர உலக தியரியும் கயோஸ் தியரியும் பறை சாற்றி நிற்க்கின்றன . இந்த நிகழ்வுகள் அனைத்தும் வெறும் நிகழ்வுகள் , அதாவது உயிரினங்கள் எவ்வாறு  இந்த உலகில் ஒரு விபத்தால்(எதிர்பாராத உயிர் பிணைப்புகள் ) உருவாகியதோ அதே போல தான்நிகழ்வுகளும் விபத்து போன்றது .

ஏனைய உயிரினங்கள் போலவே மனிதனின் வாழ்க்கையும் , இருந்தாலும் இந்த அறிவும் கொஞ்சம் கூடுதலாக இருப்பதால் ஏமாற்று வேலைகள் , தனக்கேற்ப  நிகழ்வுகளை சாதகமாக்கி கொள்ளல் போன்றவற்றில் கில்லாடியாகி அதற்க்கு ஜோதிடம் என்றும் பெயர் வைத்தான்.


புரோகிதர்களும் ஜோதிடர்களும் சேர்ந்து அடிக்கும் கூட்டு கொள்ளை நிகழ்வுகளை எதிர்வு கூறி கட்டம் பார்த்து இடம்பெறுகிறது .  எந்த ஒரு விடயத்தையும் ஆதாரத்துடன் காட்டுவது அறிவியல் . ஜோதிடம் உண்மை என்பதற்கு ஆதாரம் என்ன ?

புரோகிதனிடம் கேட்க்கும் ஜோதிடமும் ஜோதிடனிடம் கேட்பதும் வேறுபடும். ஏன் வேறுபடுகிறது ? வெறுமனே 50 % நிகழ்தகவு  வைத்து கூறப்படுகிறது .

ஒரேயொரு ஆதாரம் இப்போதும் உறுதியாக இருக்கிறது . இரட்டையர்கள் பிறப்பு . இருவரும் பிறப்பது ஒரே ராசி ஒரே நட்சத்திரம் .ஆனால் இருவரின் வாழ்க்கையும் வேறு வேறு. சில வேளைகளில் ஒருவர் இறந்து விடுவது உண்டு .

ஜோதிடர்களின் கணிப்பு வியாழன்  வாழ்க்கையை தீர்மானிப்பதாகவும் சனி வாழ்க்கையை கெடுப்பதாகவும் இருக்கிறது . சனி 50000 கிலோ மீட்டர் அகலமான ஹய்ட்ரஜனையும் ஹீளியத்தையும் கொண்டது .அவை மாற்றத்தை ஏற்ப்படுத்தாது .

பொய் என்பதற்கு நாம் கி மு பல வருடங்களுக்கு முன்னர் செல்ல வேண்டும் . எகிப்தியர்கள் கோருஸ்  எனும் எகிப்திய சூரிய கடவுளை வழிபட்டு வந்தனர் . இது பிந்திய சூரிய கடவுள் கிறிஸ்து உருவாக்கத்திற்கு முதல். முன்னர் மனிதன் இரவு பகலை விழுங்குவதாகவும் பகல் இரவை விழுங்குவதாகவும் எண்ணியிருந்தான். அது தான் சூரியனை வழிபட்டு வந்தான் . அதனையே கடவுளாக சித்தரித்தான் . அதனை சுற்றி அமையும் ராசிகளை ஒவ்வொரு காலமாக நிர்ணயித்தான் . இது வானத்தின் மீதான நீண்ட கால அவதானத்தில் மனிதன் குறித்தவை .

நட்ச்சத்திரங்களை இரு முறைகளில் பார்க்கலாம் ஒன்று அவை இருப்பது போலவே ,மற்றயது நாம் நினைப்பது போல அவை இருப்பது . இதில் எது உண்மை என்பது பகுத்தறிவு தீர்மானிக்கும் .


ராஜாக்களின் காலம் தான் ஜோதிடத்தின் பொய் தாண்டவம் ஆட தொடங்கிய காலம். சில பொய்களை காரணத்துடன் சொல்ல வேண்டிய தேவை ஏற்ப்பட்டது. அதற்க்கு ஒரு உறுதியான காரணம்  தான் எமது வாழ்க்கை ஏற்க்கனவே தீர்மானிக்கப்பட்டு விட்டதாகவும்  இறைவனால் தீர்மானிக்கப்பட்டதாகவும் கதை அவிழ்த்து விடப்பட்டு ஜோதிடம் வளர்த்து விடப்பட்டது . சமயமும் இதே போலதான் வெறுமனே வானவியல் .

இஸ்லாமியர்களின் நட்சத்திர சந்திர வழிபாடும் , மற்றயவர்களின் சூரிய வழிபாடும் மிகச்சிறந்த உதாரணம். இவற்றின் மையம் தான் கடவுளை உருவாக்கியது .இது இவர்களுக்கு சொந்தமானது அல்ல . நாகரிகம் வளர்ந்த எகிப்தியர்களின் வழிபாட்டு முறை .

வானவியலை வைத்து உருவாக்கப்பட்ட இறைவன் , ஜோதிடம் இரண்டும் ஒன்று தான் . ஆனால் நட்சத்திரங்கள் , கிரகங்கள் மாற்றம் ஏற்ப்படுத்துமாம். இது விஞ்ஞானத்தால் முற்றாக மறுக்கப்பட்ட ஒன்று . அவற்றின் கதிர் வீச்சுகள் உண்மையாக வந்தால் உயிருடன் இருக்க முடியாது .

முன்னைய ராஜாக்கள் தமது யுத்த ஆயுதமாக ஜோதிடத்தை பயன்படுத்தி வளர்த்தனர்  . ஒரு கதை சொன்னால் சுவாரசியமாக இருக்கும் .

ஒரு முறை பிஜபூர் சுல்தான்  மீது படையெடுக்க தீர்மானித்தான்  கிருஷ்ணதேவராயன் . ஆனால் கிர்ஷந்தேவரயனை வெல்ல முடியாது என நினைத்த பிஜபூர் அரசன் தேவராயன் ஜோசியனை விலைக்கு வாங்கி விட்டான்.  படையெடுக்க தயாரான தேவரயனிடம் இன்று நீங்கள் துங்கபத்திரா நதியை தாண்டினால் உயிர் போய்விடும் என்று கூறினான் ஜோதிடன் . இதை கேட்டா மன்னன் என் நம்பிக்கை சொல்கிறது நான் வெல்வேன் என்று நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டான் . ஆனால் மனைவி பிள்ளைகள் அவனை அனுமதிக்கவில்லை .

உடனே வந்த தெனாலி ராமன் . அவன் சொல்வது பொய் என்பதை தான் நிரூபிக்கிறேன் என்று அரசனிடம் சொல்ல அரசனும் நீ சொல்வது நடந்தால் உனக்கு பொற்காசுகள் தருகிறேன் என்றார் .


அடுத்த நாள் காலை வந்த ஜோதிடனிடம்  ஐயா, அரண்மனை ஆஸ்தான ஜோதிடர் அவர்களே தாங்கள் கூறும் ஜோதிடம் முற்றிலும் பலிக்குமா எனக் கேட்டான். அதற்கு அச்ஜோதிடனும் என் ஜோதிடம் பொய்யானது அல்ல. இது வரை நான் கூறிய ஜோதிடங்கள் அனைத்தும் 100% மெய்யென நிரூபித்துள்ளேன். அப்படியிருக்க என் ஜோதிடம் பலிக்குமா என நீ எவ்வாறு கேட்பாய்? என்று கோபமாகக் கத்தினார் ஜோதிடர்.
அப்படியானால் தாங்கள் என்னை மன்னிக்கவும் என்றான் தெனாலிராமன். பின் ஜோதிடரிடம், “தாங்கள் இன்னும் எத்தனை ஆண்டுகள் வாழ்வீர்கள்” என்று கேட்டான். அதற்கு அச்ஜோதிடரும்  ஏதேதோ கணக்குப் பார்த்து விட்டு “இன்னும் குறைந்தது இருபத்தைந்து ஆண்டுகளாவது நன்கு வாழ்வேன்” என்றான். இதைக் கேட்டதுதான் தாமதம், உடனே தெனாலிராமன் தான் தயாராக வைத்திருந்த வாளை உருவி சோதிடனின் தலையை வெட்டி வீழ்த்தினான்.


தனது ஆயுளையே ஒழுங்காக கணிக்க தெரியாதவனா உங்கள் ஆயுளை கணிக்கப்போகிறான் என்று கூறி விட்டு பின்னர் தேடி பார்த்த போது பிஜபூர் மன்னனுக்கும் ஜோதிடனுக்கும் இடையில் நடந்த கடித பரிமாற்றம் பிடி பட்டது .
நீளமாகி விட்டது பதிவு .அனைத்து கருத்துகளும் பதிய முடியவில்லை . பகுத்தறிவால் பொய்களை உடைப்போம். தொடர்ந்து எழுதுவேன் .


தகவல்கள் அனைவரையும் சென்றடைய ஓட்டு போடவும் .... நன்றி ..

Comments

Popular posts from this blog

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு க

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிடத்தில் சரியாக கொண்டு போய் சேர்க்கின்றனர் .  சிறகுகள் அமைப்பின்

கண்ணாளனே...!

சங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன். அகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது.  மலையும் மலை சார்ந்த இடத்திலும்  நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது.  இந்தப் பாடல் காதல் வயப்பட்ட  பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச்  சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.  "நெருநல் எல்லை யேனல் தோன்றித் திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள இ