Skip to main content

இயற்கையின் தேர்வு - பரிணாமம் - விடாமுயற்ச்சி

அனைவரும் விளங்கும் படியாக எழுதியிருப்பதால் விஞ்ஞான சொற்க்கள், சிலவை எளிய விளக்கங்களுடன் எழுதி உள்ளேன் .

இயற்க்கை நிகழ்வுகள் , இயற்க்கை விபத்துகள் போன்றன நம் வாழ்க்கையை தீர்மானிப்பது போல உலகில் உயிரினத்தோற்றத்தையும் உருவாக்கியது .டார்வின் போன்ற விஞ்ஞானிகள் கூர்ப்பு கொள்கைகள் சர்ச்சையை கிளப்பினாலும் சமூகத்தில் இருந்து உயிரினங்கள் மூட பழக்கவழக்கங்களை தூக்கி எறிந்தது .

  100 மில்லியன் ஆண்டுகளுக்கு முதல் உலகில் உயிரினங்கள் தரையில் இருந்ததில்லை . உதாரணமாக உலகில் மீன் வகை , முலையூட்டிகள் , பறவையினங்கள், ஊர்வன வகை போன்ற உலகில் முதன் முதல் தோன்றிய உயிரின வகைகள். இவை கூட தரையில் இருந்ததில்லை . இவை அனைத்திற்கும் நீர் தான் மூல ஆதாரமாக இருந்தது . நீர் வாழ் உயிரினங்கள் தான் இவ்வுலகில் முதல் முதல் தோன்றியது .


இரசாயன பிணைப்புகளே உயிரினங்களை உருவாக்கியது . சரியான பிணைப்பு வரும் வரை உயிரினங்கள் தோன்றவில்லை . ஒரு விபத்து போலவே உயிரினங்களின் தோன்றியது . ஒரேயொரு ஆதாரத்தை முன் வைக்கலாம் காரணம் உலகம்  தோன்றி பல மில்லியன் வருடங்களுக்கு பிறகே உயிரினம் தோன்றியது .

சரி இனி மனிதன் எப்படி மனிதன் ஆனான் ? உயிரினங்கள் எப்படி உலகில் தோன்றின ? இயற்கையின் தேர்வு என்ன ?என்பது பற்றி பார்ப்போம் .

நீர்வாழ் உயிரிங்கங்களின் தேர்வு

அவ்வாறு விபத்தால் தோன்றிய உயிரினங்கள் பரம்பல் அடைந்தது . அவற்றுக்கு தேவையான சக்தியை பெற உணவு இன்மை . உணவுக்கான போட்டியும் அதிகரித்தது . சில உயிரினங்கள்  நீரும் சேறும் கலந்த நீரில் வாழ தொடங்கின .. அவை தமக்கான உணவு போட்டி நீரில் காணப்படுவதை உணர்ந்து , மற்றைய உயிரினங்கள் அடையமுடியாத இடங்களில் உணவை தேட முயற்சித்தன . அதன் விளைவாகவே செற்றுப்பகுதிக்கு நகர்ந்து மெல்ல தரையை அடைந்தன . அவற்றுக்கு அங்கு போட்டி நிலவவில்லை . அதனால் அவற்றின் இனப்பெருக்கமும் அங்கேயே நடைபெற்றது .


என்னுடைய கருத்து படி அவற்றிற்க்கு பிறந்தவைகளும் அந்த அந்த சூழலுக்கேட்ப்ப ஜீனில் மாற்றம் ஏற்ப்படே பிறந்திருக்க வேண்டும் . அவை தொடர்ந்து தரையிலேயே வாழ தொடங்கின .

மனிதனினுக்கு இயற்க்கை தேர்வின் தன்னம்பிக்கை 


தக்கன பிழைத்தல் கொள்கையின் அடிப்படை இயற்கையின் தேர்வு தான் . முதலில் பலமான உயிரினங்கள் பிழைத்தது . விதையும் மண்ணுக்குள் எத்தனையோ சவால்களை எதிர் கொண்டு தான் மரமாக வருகிறது . அதே போல தான் குருவிகள் கூட முட்டை இட முன் மிகவும் பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்கிறது . இயற்க்கை தேர்வு மனிதனின் வாழ்வுக்கும் தன்னம்பிக்கை ஊட்டுகிறது .

டார்வினின் கூர்ப்பு கொள்கை தவறு என வாதிடுபவர்கள் உண்டு . ஏன் இப்போது இருக்கும்  மனிதர்கள் குரங்கு ஆவதில்லை எனவும் அதனால் அது தவறாம் .

ஆனால் Mutations  எனப்படுவது செல்களில் ஜீன்களில் ஏற்ப்படும் எழுந்தமானமான மாற்றங்கள் . இவை அரிது இருந்தாலும் இந்த மாற்றம் இடம்பெற 1000  ௦௦ தலைமுறைகளுக்கு மேல் எடுக்கும் . இதில்  ஒரு உயிரினத்தில் இருந்து இன்னொரு உயிரினம் முற்றிலும் மாறுபடும் .


உயிரங்களின் தக்கன பிழைத்தல் கொள்கை அவற்றின் தோற்றங்களை வைத்து கூறலாம் . உதாரணமாக தாவர உன்னிகளுக்கு முகத்தின் இரு புறமும் பக்கவாட்டில் கண்கள் இருக்கும் .அவற்றால் அதன் மூலம் சுற்றி பார்க்க முடியும் . ஆனால் வேட்டையாடும் விலங்குகளுக்கு முன்னோக்கியே இருக்கும் .காரணம் அவற்றிற்க்கு இலக்கு தான் முக்கியம் .

உறுதியான தன்மை இயற்கையின் தேர்வில் உயிரினங்கள் தோன்றலுக்கு  மிகவும் முக்கியம் .மனிதன் வாழ்க்கையில் கஷ்டப்படவில்லை .. உறுதியான தன்மை இல்லாதவனே கஷ்டப்படுகிறான் . சூழலுக்கேட்ப்ப மாறுதல் , தன்னை தயார்படுத்தல் , எதிர்கொள்ளல் போன்றன தற்போதைய வாழ்கையில் தேவையானது . இதனை தயார்படுத்துபவன் எதையும் எதிர்கொள்ளலாம் . இதை தான் தான் நம்பிக்கையும் போதிக்கிறது . அறிவியலுடனும் விளக்கி விட்டேன் .

கொஞ்சம் தத்துவத்தோட தொடர்பு படுத்தி விட்டேன் .. கொஞ்சம்  வித்தியாசமா யோசிப்பம் என்று தான் .அடுத்த பதிவில் ஏன் இந்த தரை வாழ உயிரினங்கள் சில மீண்டும் நீருக்கு சென்றன ? ஏன் இரண்டிலும் வாழ்கின்றன . மனிதன் எப்படி மனிதன் ஆனான் என்பது பற்றி பார்ப்போம் .

மறக்காமல் அனைவரையும் தகவல் அடைய ஓட்டை போட்டு விடவும் . நன்றி 

Comments

Popular posts from this blog

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு க

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிடத்தில் சரியாக கொண்டு போய் சேர்க்கின்றனர் .  சிறகுகள் அமைப்பின்

கண்ணாளனே...!

சங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன். அகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது.  மலையும் மலை சார்ந்த இடத்திலும்  நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது.  இந்தப் பாடல் காதல் வயப்பட்ட  பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச்  சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.  "நெருநல் எல்லை யேனல் தோன்றித் திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள இ