Skip to main content

தோட்டியின் மகன் - 3 / 36 ~ [புத்தகங்கள்2015]


"கன்னடத்தில் சிவராம காரந்தும் மலையாளத்தில் தகழி சிவசங்கரப்பிள்ளையும் இயல்புவாதத்தை முழுக்கமுழுக்க ஓர் இந்தியவகை அழகியலாக உருவாக்கிய மேதைகள் என்று சொல்லலாம்."

- தகழி சிவசங்கரப்பிள்ளை பற்றி எழுத்தாளர் திரு.ஜெயமோகன் 

இந்த வருடம் ஆரம்பித்ததிலிருந்து மூன்று புத்தகங்களைப் படித்துமுடிக்க இயலுமானதாக இருந்தது. வேலை, கல்வி, மேலதிக வாசிப்பு மற்றும் இதரவேலைகளுக்கும் நடுவில் இதுவொரு நல்ல எண்ணிக்கை என்றே எனக்குத் தோன்றுகிறது. 

இறுதியாக, தகழி சிவசங்கரப்பிள்ளை என்பவர் எழுதிய மலையாள நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பான 'தோட்டியின் மகன்' என்கிற நாவலைப் படித்துமுடித்தேன். 1946 இல் எழுதப்பட்ட இந்த நாவலை சுந்தர ராமசாமி அவர்கள் தமிழில் மொழிபெயர்ப்புச் செய்திருந்தார். எப்போதோ மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டு இருந்தாலும், அதன் முதற் பதிப்பை 2000ஆம் ஆண்டில்தான் நாவலாக உருக்கொடுத்து வெளியிடமுடிந்திருக்கிறது. ஒரு நல்ல இலக்கியத்தைத் தமிழ் வாசகர்களுக்குக் கொண்டுவந்த பெருமை சுந்தர ராமசாமியையே சாரும்.   

எந்த இலக்கியவாதிகளாலும் பேசப்படாத  தோட்டியினுடையை வாழ்க்கையை ஒரு இலக்கியமாக வடித்திருக்கிறார். ஆழப்புழை நகரசபையில் பணிபுரியும் மலமள்ளும் தொழிலாளிகள் பற்றிய கதை.  தோட்டிகள் தங்கள் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் அவலங்களையும் சவால்களையும்  நம்முள்  ஆழமாகச் செலுத்துகிற நாவல். அவர்களும் மனிதர்கள்தான் என்று உரக்கக் குரல் கொடுக்கிற நாவல்.

ஒரு தோட்டிக்கு மகனாகப் பிறக்கிற கதையின்நாயகனும் விரும்பியோ விரும்பாமலோ தோட்டியாகவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறான். 'தோட்டியின் மகன் தோட்டியாகவே ஆகவேண்டுமா!' என்கிற கேள்வி அவன் மனதுள் ஆழமாகப் பதிந்துபோகிறது. அதன்பின்னர் இந்தச் சமூகம் தோட்டிகளை நடத்துகிற முறையும், அவனை அவன் தொழிலின் மீது மேலும் வெறுப்படையச் செய்கிறது. இந்தச் சங்கிலித் தொடரிலிருந்து வெளிவரப் போராடுகிறான். தன்னுடைய பிள்ளையும் இந்தத் தொழிலுக்கு  வந்துவிடக்கூடாதென்று அஞ்சி தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து எதிர்காலத் திட்டங்கள் வகுக்கிறான்; போராடுகிறான். அவர்களது எதிர்காலத்தை எப்படி போராடிச் சமாளிக்கப் பார்க்கிறார்கள் என்பதை உணர்வுகள் கலந்து சொல்லியிருக்கிறார்.      

'தோட்டியின் மகன்' என்கிற நாவலின் மீது எழுந்த விமர்சனங்கள் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள்...

1946இல் ’தோட்டியின் மகன்’ நாவல் மலையாளத்தில் தகழி சிவசங்கரப்பிள்ளையால் எழுதப்பட்டபோது அது ஓர் ஆபாச இலக்கியமாக, நுண்ரசனைக்கு எதிரானதாகவே, சமன் குலைக்கும் அதிரடியாகவே இலக்கியவாசகர்களால் பார்க்கப்பட்டது. ஒரு தோட்டி எப்படிக் கதைநாயகனாக ஆக முடியும், அவன் வாழ்க்கையில் வரலாற்றுப் பதிவு செய்யக்கூடியதாக என்ன இருக்கிறது, பிறர் தெரிந்துகொள்ளக்கூடியதாக என்ன இருக்கிறது? அந்த வினாவுக்குத் தகழி   ‘வாழ்க்கை’ என ஒற்றைச் சொல்லில் பதில் சொன்னார்.
 புத்தகத்தின் பின் அட்டை..




Comments

Popular posts from this blog

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு க

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிடத்தில் சரியாக கொண்டு போய் சேர்க்கின்றனர் .  சிறகுகள் அமைப்பின்

கண்ணாளனே...!

சங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன். அகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது.  மலையும் மலை சார்ந்த இடத்திலும்  நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது.  இந்தப் பாடல் காதல் வயப்பட்ட  பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச்  சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.  "நெருநல் எல்லை யேனல் தோன்றித் திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள இ