Skip to main content

கொழும்பு : பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி

கடந்த 14 ஆம் திகதி ஆரம்பமாகிய 'கொழும்பு சர்வதேசப் புத்தகக் கண்காட்சி'யில் இந்தத் தடவையும் கிட்டத்தட்ட நானூறுக்கும் மேற்ப்பட்ட  புத்தக நிலையங்கள். 15 ஆவது தடவையாக இந்த பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி BMICH இல் நடைபெறுகிறது.இந்தக் கண்காட்சி ஒரு வாரத்துக்கு நடைபெறும்.



முதல் நாளிலேயே ஒரு இலட்சம் பார்வையாளர்கள் வந்து போனார்கள் என ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டிருந்தன.இரண்டாவது நாள் ஞாயிறு ஆகையால் அதிக கூட்டம்.நீங்கள் செல்லும் போது முதலிலேயே Hall A க்குச் சென்று புத்தக நிலையங்கள் தொடர்பான விபரம் அடங்கிய துண்டை பெற்றுக்கொண்டால் இலகு.அல்லது முன்னாலேயே பெற்றுக்கொள்ளலாம்.

இந்த முறை சரியாகத் தமிழ்ப் புத்தக நிலையங்களை இனங்காண முடிந்தது. தமிழ்ப் புத்தக விரும்பிகளுக்கு ஏற்ற நிறைய புத்தகங்கள் ஜெயா புக் சென்டரிலும்(Hall -A : A-47, 51- 58),பூபாலசிங்கம் புத்தகசாலையிலும்(A - 25,27) மற்றும் புக்வின்னிலும்( Hall J - 400) கிடைக்கிறது. ஜெயாவில் அதிகமாக ரமணிச்சந்திரன்,பாலகுமாரன்,இந்திரா பார்த்தசாரதி,சுஜாதா புத்தகங்களை காணக்கிடைத்தது. 

பூபாலசிங்கத்தில் எஸ் ராமகிருஷ்ணன் புத்தகங்கள் கிடைத்தது.ரமணிச்சந்திரன்,பாலகுமாரன் ,இலக்கியப் புத்தகங்கள் அதிகம்.நடுத்தர வயதானவர்கள் அதிகமாக ரமணிச்சந்திரன் கதைகளை புரட்டிக்கொண்டிருந்ததால் அந்தப் பகுதி கொஞ்சம் சிரமம்.பத்து நாட்களில் ஜாவா' புத்தகத்தை பத்து நிமிடமாக ஒருவர் படித்துக்கொண்டு வழிவிடவில்லை. பிற மொழிப் புத்தக நிலையங்கள் அளவுக்கு தமிழில் கூட்டம் இல்லை.கூட்டம் இல்லாதது நமக்குச் சாதகம்.பொறுமையாகத் தேர்ந்தெடுக்கலாம். எக்சைலையும், கோணல்களையும் கொஞ்சம் படிக்கலாமா என்று யோசித்துவிட்டு வைத்துவிட்டேன்.படித்துப் பார்க்க வேண்டும்.இரண்டு மூன்று புத்தக நிலையங்களில் உள்ள புத்தகங்களை புரட்டவே நேரம் சரியாக இருந்தது.



எஸ் ராமகிரிஷ்ணன் அவர்களின் 'காண் என்றது இயற்கை' ,ஜெயமோகனின்  'ஏழாம் உலகம்', சுஜாதாவின் 'தோரணத்து மாவிலைகள்',மதனின் 'கிமு கிபி' யோடு வீடு திரும்பவேண்டியதாகிவிட்டது.திரும்பப் போவதாக உத்தேசம்.

பாடசாலை மாணவர்களுக்கு ஏற்ற பயிற்சிப் புத்தகங்கள், பாடப்புத்தகங்கள் அதிகம்.பலர் குடும்பமாக கண்காட்சிக்கு  வந்திருந்தது மகிழ்ச்சியாக இருந்தது. கண்காட்சி 22 ஆம் திகதி வரை நடைபெறும்.மறக்காமல் குழந்தைகளையும் புத்தகக் கண்காட்சிக்கு அழைத்துச் செல்லுங்கள்.

Comments

Popular posts from this blog

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு க

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிடத்தில் சரியாக கொண்டு போய் சேர்க்கின்றனர் .  சிறகுகள் அமைப்பின்

கண்ணாளனே...!

சங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன். அகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது.  மலையும் மலை சார்ந்த இடத்திலும்  நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது.  இந்தப் பாடல் காதல் வயப்பட்ட  பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச்  சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.  "நெருநல் எல்லை யேனல் தோன்றித் திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள இ