Skip to main content

சில கணங்கள் : அகம்புறம்

ஒரு சில புத்தகங்களை, சுவாரசியமான துப்பறியும் கதையைப் படிப்பது போல  எடுத்த எடுப்பிலேயே படிச்சு மூடி வைச்சிட முடியாது. வாழ்க்கைல எல்லாத்தையுமா ரசிச்சுடுறோம்.நம்முடைய வேகம் அப்படி. அதே வேகத்தை இரசனையான பகிர்வுகளைக் கொண்ட புத்தகங்களின் பக்கங்கள் மேல் காட்ட முடியுறதில்லை. எதை எப்படி வாசிக்கவேண்டுமென ஒரு சில பக்கங்களை தாண்டிய பின் புத்தகங்களே நமக்குச் சொல்லிக்கொடுக்கும்.ஒரு சில புத்தகங்களை  ஒரு நாளைக்கு ஒரு சில பக்கங்கள் எனப் படிப்பது இன்பம். அப்படி ஒரு புத்தகம் தான் வண்ணதாசன் அவர்கள் எழுதிய அகம்புறம்.கடற்கரையோரமாக நடந்து போவதற்கும்,கடலை சலிக்காமல் நின்று பார்த்துக்கொண்டிருப்பதற்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது.சில கணங்கள் மெதுவாகவே நகர வேண்டும்.பக்கங்களும் அப்படித்தான்.இந்த 'மெதுவாக' என்பது போகப் போக இயல்பாகிவிடும்.வாழ்க்கையின் சில கணங்களை மெதுவாக்கிவிடும் இயல்பு இரசனைகளுக்கு உண்டு.குழந்தையைப் பார்க்கும் போது சட்டென்று விரிகிற புன்னகை மாதிரி.

புத்தகத்தை இன்னும் படித்துமுடிக்கவில்லை.இப்போதைக்கு முடிப்பதாகவும் உத்தேசம் இல்லை. அந்தப் புத்தகத்திலிருந்து இதுவரை பகிர்ந்துகொண்ட ஒரு சில பகுதிகளை கீழே தந்திருக்கிறேன்.

'வாழ்க்கை தொடர்ந்து விதிகளைப் பொய்யாக்கிக்கொண்டேதான் இருக்கிறது.இது இப்படித்தான் என்று முடிவுகட்ட முடியாதபடி,தன் காலடிச் சுவடுகளைத் தானே அழித்துக்கொண்டு அது நகர்கிற விதம்,யூகங்களுக்கு அப்பாற்பட்டது. அச்சடித்த புத்தக வரிகளின் மேல் சின்னஞ்சிறு பிள்ளையார் எறும்பு ஊர்வது போல எந்தத் தடங்கலும் இன்றி அது ஊர்ந்துகொண்டு இருக்கிறது.அடுத்த பக்கங்களின் வாசிப்பு அல்ல,ஊர்ந்துகொண்டே இருக்கும் அந்த உயிரின் அழகு முக்கியம் என்று நமக்குப் பிடிபட்டால் போதும்.' - வண்ணதாசன்


சினிமாக் கொட்டகைக்குள் இருக்கும்போது பெய்கிற மழை , ஒரு சாதாரண சினிமாவைக்கூட நல்ல சினிமாவா ஆக்கிவிடும் -#வண்ணதாசன்

நீர்த்தாரையை உள்ளங்கையில் ஏந்துவதற்கும் மழை தான் சொல்லிக்கொடுத்திருக்கும் - வண்ணதாசன் 

Comments

Popular posts from this blog

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு க

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிடத்தில் சரியாக கொண்டு போய் சேர்க்கின்றனர் .  சிறகுகள் அமைப்பின்

கண்ணாளனே...!

சங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன். அகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது.  மலையும் மலை சார்ந்த இடத்திலும்  நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது.  இந்தப் பாடல் காதல் வயப்பட்ட  பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச்  சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.  "நெருநல் எல்லை யேனல் தோன்றித் திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள இ