Skip to main content

இசையமைப்பாளர் ,பாடகர் ரமேஷ் விநாயகம்




தமிழ் இயக்குனர்களால் சரியாக இனங்காணப்படாத ,பயன்படுத்தப்படாத  மிகவும் திறமையான இசையமைப்பாளர்கள் வரிசையில்  ரமேஷ் விநாயகத்துக்கும் ஒரு முக்கிய இடம் கொடுக்கலாம் . 

இசையமைப்பாளரும் பாடகருமான  ரமேஷ் விநாயகம் பற்றிய அறிமுகம் பெரும்பாலானவர்களுக்கு  நளதமயந்தி , அழகிய தீயே திரைப்படங்களுக்கு பின்னர் கிடைத்திருக்கும்.


அதற்கு முன்னரே வசந்தின் "ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே " படத்தில் ஒரேயொரு பாடலுக்கு மட்டுமே இசையமைத்து இருக்கிறார். அவர் முழுமையாக இசையமைத்த முதல் திரைப்படம் யுனிவேர்சிட்டி.

அவர் பாடி  இசையமைத்த பாடல்களில் சில எப்போது கேட்டாலும்  சுகமான இசை அனுபவத்தை தந்துவிட்டே செல்லும். 

 "ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே"   திரைப்படத்தில் ரமேஷ் விநாயகம் இசையமைத்து பாடிய  தொட்டு தொட்டு செல்லும் பாடல் அதிகமானோரைக் கவர்ந்தது.

குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமானால் அவர் கொடுத்த மெல்லிசைகளை கேட்க்கும் போது , அதில்  இரண்டு எப்போதுமே தென்றலில் ஈரம் கலந்து  மனதை நனைத்துவிட்டே  செல்லும் . 

இன்று கேட்டாலும் நம்மை இன்னொரு உலகத்துக்கு அழைத்துச் செல்லும் தன்மை வாய்ந்த பாடல்கலென அவரே பாடி இசையமைத்த   "விழிகளின் அருகினில் வானம்"  , " என்ன இது என்ன இது " வை சொல்லலாம் .

விழிகளின் அருகினில் வானம் எப்படி  உள் அழைத்துச் சென்று ஒரு அதிசய அனுபவத்தை வழங்குகிறதோ அதே போல "என்ன இது என்ன இது" பாடலும்  ஒரு இனிமையான காதல் அனுபவத்தை நெஞ்சமெங்கும்  படரச் செய்யும். 

அழகான ஹம்மிங்குடன் ஆரம்பித்து மெல்ல மெல்ல மனதை ஆட்கொள்ளும் மெல்லிசை. உறவுகளுக்கிடையேயான உணர்வுகளின் மென்மையை இசையே மெதுவாய் உணர்த்திவிடும். திரைப்படத்தோடு சேர்ந்து கேட்க்கும் போது இதை உணரலாம்.

இனி எந்த இயக்குனர்கள்  அவரை சரியாக பயன்படுத்துவார்கள்  என்பதை உறுதியாக சொல்லமுடியவில்லை . ராதாமோகன் , வசந்த் போன்ற இயக்குனர்கள் கையாண்டால் நம் காதுகளுக்கு  இன்னும் மெல்லிசைகள் கிடைக்கும் .

அவரின் குரலையும் தவிர்த்துவிட்டு பேசிவிட முடியாது . தொட்டி ஜெயா படத்தில் "யாரிடமும் தோன்றவில்லை" என்ற பாடலை தன் குரலால் இன்னும் மெருகூட்டியவர்.

கமகங்கள் தொடர்பிலும் ஒரு ஆராய்ச்சியில் இறங்கியிருக்கிறார் ரமேஷ் விநாயகம் . அது பற்றி வாசிக்க : Times Of India

Comments

Popular posts from this blog

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு க

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிடத்தில் சரியாக கொண்டு போய் சேர்க்கின்றனர் .  சிறகுகள் அமைப்பின்

கண்ணாளனே...!

சங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன். அகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது.  மலையும் மலை சார்ந்த இடத்திலும்  நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது.  இந்தப் பாடல் காதல் வயப்பட்ட  பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச்  சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.  "நெருநல் எல்லை யேனல் தோன்றித் திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள இ