Skip to main content

மனித மனம் ,உயிர் -ஈகோ, சூப்பர் ஈகோ , இட்- சிக்மன் புரோயிட்

மனித அறிவின் அசுர பரிணாம  வளர்ச்சியில் விஞ்ஞானம் பல புராண கட்டுக்கதைகளையும் பல நம்பிக்கைகளையும் உடைத்தெறிந்து அனைத்திற்கும் காரணம் தேடும் பயணத்தில் நேரம் எனும் பாதையில் செல்கிறது . மனோதத்துவம் பல வகைகளில் விஞ்ஞானத்தோடு ,விஞ்ஞானத்தில் ஒரு பெரும் பகுதியாக செயல்ப்படுகிறது  என்றால் மிகையாகாது . 

சீனாவில் சீ எனவும் இந்தியாவில் பிராணா எனவும் மேற்கில் soul எனவும் அழைக்கப்படுகிறது. பெரும்பாலானவர்கள் இறை நம்பிக்கையில் உள்ளவர்கள். ஆனால் அதற்க்கு எந்தவித விஞ்ஞான ஆதாரமோ இதுவரை கிடையாது . ஆனால் இப்போது சமயங்கள் நிறுவனங்கள் வேறு விதமாக கதையை மாற்றுகின்றன . அதாவது பிழைப்பு தொடர்ந்து நடக்க மனோதத்துவத்திற்கு மாறி விட்டன .உள்ளிருந்து இயக்கும் மனசாட்சி இறைவன் என்கிறார்கள் .

 உயிர் ,மனது ,மரணம்,பயம்  இது மூன்றும் இறை நம்பிக்கையை தூண்டுவன . ஆனால் உயிர் ,மனது,மனசாட்சி போன்றன இருக்கின்றனவா ? இது தான் விடயம் ....... 


முன்னர் ஒரு தனிமனிதனுக்கு ஏற்ப்படும் மனோதத்துவ  பிரச்சனைகளை தீர்ப்பதற்கு முயற்ச்சிகள் வேறு விதமாகவே நடந்தது . அவர்களை தனிமையில் வைப்பது ,இருட்டில் வைத்திருப்பது போன்றன . ஆனால் சிக்மன் பிரெயுட்(freud ) வேறு விதமாக முயற்ச்சித்தார் .அதாவது நோயாளிகளின் பிரச்சனைகளை கேட்டறிவது . ஒருவருடன் கதைத்து அவர்களுடைய  துன்பங்களை கேட்பதன் மூலம் மனநோய் பிரச்சனைகளில் இருந்து மீட்டார் .

மனித மனதை  ஈகோ, சூப்பர் ஈகோ , இட் என்று  மூன்று வகையாக பிரித்தார் ..




இதில் இட் சிறு வயதிலேயே இருக்கும் . ID (Internal Drive ) இட் தான் சிறு வயதிலேயே மனதில் உருவாகும் முதல் வளர்ச்சி .இது கட்டுப்படுத்த முடியாதது . இது மிகவும் ஆழ மனதின் செயல்ப்பாடு . இதனுள் ஒரு பிரிவு  Thanatos (தனடோஸ்)  என அழைக்கப்படும். "ஆபத்தை தூண்டக்கூடிய செயல்ப்பாடுகளின் பால் ஈர்க்கப்படல் " மற்றையது  Libido (லிபிடோ) என்று அழைக்கப்படும் "பாலியல் ரீதியான காம ,காதல்  நிலைக்கு தூண்டப்படல்" . இவை இரண்டும் இட் இல் பகுதிகள் .

பின்னர் இரண்டாவதாக குழந்தைப்பருவ வளர்ச்சியில்(இரண்டு மூன்று வயதுகளில் ) சூப்பர் ஈகோ பரிணமிக்கிறது . உதாரணமாக அம்மா ஒரு செயலை செய்ய வேண்டாம் என சொல்லும் போது இது பரிணமிக்கிறது . அதாவது மேலே கூறிய இட் இல் உள்ள தனடோஸ்(ஆபத்தை தூண்டக்கூடிய செயல்ப்பாடுகளின் பால் ஈர்க்கப்படல்,கூடாத செயல்கள் ) இந்த சூப்பர் ஈகோ வை தூண்டுகிறது .

சூப்பர் ஈகோ வின் பகுதி  இட்  இல் உள்ள அந்த செயல்ப்பாட்டை கட்டுப்படுத்துகிறது . இறுதி வளர்ச்சியான   ஈகோ முழுமையாக ஒரு மனிதனை எது சரி எது பிழை என தன்னிச்சையான முடிவுகளை எடுக்க தூண்டுகிறது .சில விடயங்களை பிழை என நேரேயே சுட்டிக்காட்டும் . மனசாட்சி என்று சொல்லலாம் .


இதில் சமயத்தை அழகாக தொடர்ப்பு படுத்துகிறார் . இந்த சூப்பர் ஈகோ வில்  ஒரு பகுதியாக சமயம் உருவானது . இட் இல் உள்ள காம மற்றும் தவறான விடயங்களை(லிபிடோ மற்றும் தனடோஸ்) கட்டுபபடுத்த  தொழில்ப்படுகிறது .எத்தனையோ குரு மார்களால்,யோகிகளால்  காமத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனது உண்மை  . அது தான் இறைவன் என மனது நினைத்து கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது மனித மனங்களை .

அதுவும் இந்த சூப்பர் ஈகோ வில் இறைவனின் ,சமயத்தின் தொழில்ப்பாடு மனித அன்பு ,கருணை வளரும் போது அற்றுப்போகும் . ஒரு காலத்தில் மனித அன்பு ஆட்சி செய்ய ஆரம்பிக்கும்  .சமய ,இறைவன் கட்டுப்பாடுகள் உறுதியானதாக இல்லை . என  ப்ரோட் எதிர்வு கூறினார் . 

உதாரணமாக நமது சாமி மார் இறைவனை வணங்குபவர்கள் செய்யும் அட்டூழியங்கள் தான் தெரியுமே .

ஆதிகாலத்தில் மனிதனிடம் இட் மட்டுமே காணப்பட்டது குறிப்பிடத்தக்கது .

மனித ஆன்மா  21 கிராம் நிறை உடையது என ஒரு ஆய்வு மர்மமாக உள்ளது .
தொடரும்.... .

Comments

Unknown said…
Nice! Write more! :-)
நன்றி JI .. நிச்சயமாக .:-)
பயங்கரமா யோசிச்சு எழுதியிருக்கீங்க... முடியல... ஏன் திரட்டிகளில் இணைக்கவில்லை...
இது போன்ற தகவல்கள் நான் விரும்பிப்படிப்பவை.. மிக்க நன்றி
philosophy prabhakaran said...
//பயங்கரமா யோசிச்சு எழுதியிருக்கீங்க... முடியல... ஏன் திரட்டிகளில் இணைக்கவில்லை.///.

நன்றி பிரபாகரன் ..காலேல எழுந்து இணைக்கலாம் என்று தான் ..இணைத்து விட்டேன் :-)
பயணமும் எண்ணங்களும் said...
//இது போன்ற தகவல்கள் நான் விரும்பிப்படிப்பவை.. மிக்க நன்றி//
மிக்க நன்றி பயணமும் எண்ணங்களும் ..தொடர்ந்து படியுங்கள் :-)
shammi's blog said…
I have read some Sigmund Freud, so nice article to preserve and he is the person who dealt with epilepsy a lot and found that mind plays a vital role in that arena
bahiny said…
write even more :)
சுதா மிகவும் இலகுவான முறையில் சிக்மண்ட பிராய்டை காட்டியுள்ளீர்கள்... முன்னர் ஒரு நுர்ல் படித்த போது அவரலேயே எனக்கு பைத்தியம் பிடித்தது போல ஆகி விட்டது...

நன்றி

Popular posts from this blog

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு க

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிடத்தில் சரியாக கொண்டு போய் சேர்க்கின்றனர் .  சிறகுகள் அமைப்பின்

கண்ணாளனே...!

சங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன். அகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது.  மலையும் மலை சார்ந்த இடத்திலும்  நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது.  இந்தப் பாடல் காதல் வயப்பட்ட  பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச்  சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.  "நெருநல் எல்லை யேனல் தோன்றித் திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள இ