Skip to main content

Iron dome : இஸ்ரேலின் இரும்புப் பாதுகாப்பு

ஏவுகணைகளுக்கு எதிராக Iron dome 


இஸ்ரேலின் தாக்குதலில், பாலஸ்தீனியர்கள் பலர் கொல்லப்பட்ட செய்திகளை எல்லாம் பார்த்திருப்போம். இதற்கு பதிலடியாக பாலஸ்தீனின் ஹமாஸ் ராணுவம் 1000-2000 வரையான ஏவுகணைகளை இஸ்ரேலிய குடியிருப்பு பகுதிகள் மீது ஏவியது. 

இதனைத் தொடர்ந்து, இஸ்ரேலிய மக்களின் குடியிருப்பு பகுதியில், நகரப் பகுதியில், எச்சரிக்கை மணி ஒலிக்க ஆரம்பித்தது. இஸ்ரேலிய மக்கள் சிலர்  வானவேடிக்கை பார்ப்பது போல வானத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்! ஹமாஸ் ஏவிய பெரும்பாலான ஏவுகணைகள் தரையைத் தொடாமல்  வானத்திலேயே வெடித்துக் கொண்டிருந்தது!  



இத்தனைக்கும், Iron dome எனப்படும் இஸ்ரேலின் இரும்புப் பாதுகாப்புக் கேடயம் தங்களைப் பாதுகாக்கிறது என்று மக்களுக்கு நம்பிக்கை. அதென்ன Iron dome! 

யூதர்களின் உழைப்பைப் போல, நாட்டுப் பற்றைப் போல, விவசாயம் முதல் போர் வரை தொழிநுட்பங்களுக்கும் பெயர் போனது யூதர்களின் இஸ்ரேல். வறண்ட நிலத்தில் விவசாயம் செய்கிறார்கள். கூகிள் முதலான நிறுவனங்களுக்கு மொபைல்  ஜிபிஎஸ் Navigation சிஸ்டங்களை பில்லியன் டாலர்களில் எல்லாம் விற்றிருக்கிறார்கள். சுற்றி இஸ்லாமிய நாடுகள் இருந்தும் தங்கள் பாதுகாப்பை அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் இணைந்து உறுதிப்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். இத்தனைக்கும் உலகெங்கும் சிதறி வாழ்ந்த யூதர்கள், மீண்டும்  ஓரிடத்தில் இணைந்து தங்களுக்கெனக் கட்டியமைத்த புதிய நாடு.   

இப்படித்தான் ஒருமுறை 2006 இல் லெபனானிலிருந்து ஹிஸ்புல்லா அமைப்பு ஏவிய ஏவுகணைகளால் இஸ்ரேலுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டது. உடனே, 2007 இலிருந்து, தங்கள் நகரத்தைப் பாதுகாக்க,  Iron dome இல் வேலைசெய்ய ஆரம்பித்தது இஸ்ரேல். எவ்வகையான பிரச்சனை என்றாலும் உடனே பாடம் கற்றுக்கொள்ளும் இஸ்ரேல், 2011 இல் Iron dome இனைக் கொண்டுவந்தது. இஸ்ரேலின் ராஃபேல் அட்வான்ஸ்ட் டிஃபன்ஸ் சிஸ்டம் இதைத் தயாரித்தது. இற்றை வரைக்கும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஏவுகணைகளை தாக்கி அழித்திருக்கிறது இந்த Iron dome. உலகிலேயே குறுகிய தூர ஏவுகணைகளைத் தாக்கி அழிக்கக்கூடிய சிறந்த சிஸ்டம் இது என்று சொல்கிறார்கள். 

Image Courtesy : Rafael Advanced Defense Systems Ltd


1. முதலில் ராடார் மூலம் ஏவுகணைகளைக் கண்டறிகிறது. 

2. அதன் பின்னர், இந்த ஏவுகணை எந்த இடத்தை இலக்குவைத்து வருகிறது என்று தனது அல்கோரிதங்களை வைத்து விரைவாக ஆராய்கிறது. குடியிருப்புப் பகுதிகளை நோக்கி வருகிறதா? முக்கியமான நிலையங்களை நோக்கி வருகிறதா என்று ஆராய்கிறது. முக்கியமில்லாத இடங்களுக்குச் செல்லும் ஏவுகணைகளைத் தவிர்த்துவிடுகிறது. தாக்கவேண்டிய ஏவுகணைகளை இலக்கு வைக்கிறது.

3. அதன் பின்னர், தாக்கப்படவேண்டிய ஏவுகணைகளை நோக்கி எதிர்ப்பு ஏவுகணைகளை ஏவுகிறது. 




இதன் பாதுகாப்பு மற்றும் வேலைசெய்யும் திறன் கிட்டத்தட்ட 80-90% வரை உறுதிப்படுத்தப்பட்டது. ஆனாலும் ஹமாஸ், இதன் பாதுகாப்புத்திறனை தொடர்ந்து பரிசோதித்துக்கொண்டுதான் இருக்கிறது. இதன் செயற்பாட்டுத் திறனிலிருக்கும் பிழையைக் கண்டுபிடிக்க ஹமாஸ் தொடர்ந்து 1000-2000 வரையிலான ஏவுகணைகளை ஏவிக்கொண்டுதான் இருக்கிறது. 

Comments

Popular posts from this blog

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிட...

கங்குபாய் கத்தியவாடி

நாம் எதையெல்லாம் விரும்பிச் செய்கிறோமோ அதன் மீது மரியாதையும் ஒருவிதமான பிடிப்பும் நமக்கு இருக்கவேண்டும். அதில் காமம் மட்டும் விதிவிலக்கல்ல. காமம் தந்து , உடல் தந்து, தானும் மகிழ்ந்து இன்னோர் உயிரை மகிழ்விப்பவரும், காதல், அன்பு, உள்ளமெலாம் உருக்கி உடலாய்த் தந்து மகிழ்விப்பவரும், இரண்டையும் ஒன்றாய்த் தந்து மகிழ்விப்பவரும் மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் ஆணாய் இருந்தாலும், பெண்ணாயிருந்தாலும், மாற்றுப் பாலினத்தவராக இருந்தாலும் மதிக்கப்படவேண்டியவர்கள். இந்த மதிப்பானது, உள்ளப் புரிதலினாலும், மனிதத்தினாலும், தகுந்த புத்தியினாலும், பெற்றுக்கொண்ட விஸ்தாரமான அறிவினாலும், நடத்தையினாலும், வார்த்தையினாலும் உள்ளுக்குள்ளே நிகழும் மாற்றத்தினாலும் எழவேண்டும். கங்குபாய் என்கிற இந்தப் படம், விலைமாதர்களின் வாழ்வியலைப் பேசுகிறது. விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு பெறுமதிக்கு ஏற்றபடி ஒவ்வொரு தரத்தில் இருக்கிறார்கள். நன்கு படித்து வேலைபார்க்கும் விலைமாதர்களும் இருக்கிறார்கள். பகுதியாய் விலைமாதராக இருப்பவர்களும் இருக்கிறார்கள். இப்போதும் அப்போதும், விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருந்தா...

அடியே அடியே என்னை எங்க நீ கூட்டி போற!

கிறிஸ்தவ தேவாலயங்களிலும் அவை சார்ந்த சூழலிலும், கிஸ்தவப் பாடல்களும் இசையும் இசைக்கப்படுவதைச் சிலர் கேட்டிருப்பீர்கள். அப்படிப் இசைக்கப்படும் இசையை Gospel music எனலாம். Gospel என்றால் Good message. பைபிளிலிருந்து கதைகளையும், கதாப்பாத்திரங்களையும் கடவுளின் செய்திகள் என்று நினைத்துச் சொல்லப்படுகிற விடயங்களையும் எளிமையான இசையோடு இசைத்துப் பாடப்படுகிற பாடல்கள். வரிகளுக்கு முக்கியத்துவம் உள்ள பாடல்கள். பெரும்பாலும் நம்பிக்கையை விதைக்கிற செய்திகளைத் தாங்கிவரும் இந்தப் பாடல்களை மனதில் நிறையத் துன்பத்தோடு சென்று பாடுகிறவர்களுக்கு தேவாலயத்தில் ஒரு நிம்மதி கிடைக்கிறது. இந்த இசை துன்பத்தை வாங்கி நம்பிக்கையைத் தருகிறது. பலரும் கடவுள்தான் நம்பிக்கை தந்ததாக நினைத்துக்கொள்வார்கள். பிரச்சாரகர் அழைப்பு விடுக்க மற்றவர்கள் பதிலுரைத்து ஆமோதிப்பார்கள். ஒரு chorus இல் பலரும் பதிலுரைப்பார்கள். இதுதான் இசையின் வார்த்தைகளின் பலம். குறிப்பிட்ட மதங்களிடையே இசை தோன்றினாலும், அவற்றைச் சார்ந்திருந்தாலும், அது அந்தந்த மனிதர்களின் சமூகத்தின் அகவுணர்ச்சி மற்றும் அழகுணர்ச்சியின் வெளிப்பாடே என்பதனை நாம் புரிந்துகொள்ள...